
தென்காசி மாவட்டம் செங்கோட்டை வட்டம் தெற்குமேடு கிராம ஊராட்சியில் கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் புளியரை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட தெற்கு மேடு ஊராட்சி அரசு நடுநிலைப் பள்ளியில் தென்காசி மாவட்ட துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் பி ஆர் முரளி சங்கர் அவர்களின் அறிவுறுத்தல் படி தமிழக அரசின் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது
இந்த சிறப்பு முகாமிற்கு செங்கோட்டை ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் செ திருமலைச்செல்வி மற்றும் தெற்கு மேடு ஊராட்சி மன்ற தலைவர் க அனு கண்ணன் தலைமை தாங்கினார்கள் வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர் தமிழ்ச்செல்வி மற்றும் ஊராட்சி மன்ற கவுன்சிலர்கள் முருகன் வசந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்
இந்த முகாமில் மகப்பேறு மருத்துவம் பொது மருத்துவம் குழந்தைகள் நல மருத்துவம் காது மூக்கு தொண்டை மருத்துவம் பல் மருத்துவம் தோல் மருத்துவம் எலும்பு மருத்துவம் மனநல மருத்துவம் கண் மற்றும் சித்த மருத்துவம் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது மேலும் ரத்த பரிசோதனை சளி பரிசோதனை ரத்த அழுத்த பரிசோதனை கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஸ்கேன் பரிசோதனை மற்றும் இசிஜி போன்ற ஆய்வு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது
இந்த முகாமில் புளியரை மருத்துவ அலுவலர் மருத்துவர் மணி பிரசாத் மற்றும் ஏனைய மருத்துவ அலுவலர்கள் மற்றும் மருத்துவமல்லா மேற்பார்வையாளர் சீதாராமன் ஆகியோர் சிகிச்சை அளித்தனர். சுகாதார ஆய்வாளர்கள் மாரியப்பன் ராஜேந்திரன் வெங்கடேசன் செந்தில்குமார் கல்யாண சுந்தரம் ஆகியோர் முகாம் முன்னேற்பாடு செய்திருந்தனர் மற்றும் ஏனைய தெற்கு மேடு பிரதிநிதிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
முடிவில் செங்கோட்டை வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கதிரவன் அனைவருக்கும் நன்றி உரை கூறினார்
இந்த மருத்துவ முகாமில் தெற்கு மேடு மற்றும் புளியரை அதன் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள பொதுமக்கள் கலந்து கொண்டு சிகிச்சை மற்றும் மருந்து மாத்திரைகள் மருத்துவ ஆலோசனைகள் பெற்று சென்றன