January 19, 2025, 2:48 PM
27.8 C
Chennai

வாஜ்பாய்க்கு பாரத ரத்னா வழங்கினார் பிரணாப் முகர்ஜி

vajpayee புது தில்லி: வெள்ளிக்கிழமை இன்று முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் வீட்டுக்கே சென்று, அவரிடம் பாரத ரத்னா விருதை வழங்கினார் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி. முன்னாள் பிரதமர் வாஜ்பாய், மறைந்த சுதந்திர போராட்ட வீரர் மதன் மோகன் மாளவியா ஆகியோருக்கு நாட்டின் உயரிய விருதான ‘பாரத ரத்னா‘ வழங்கப்படும் என்று கடந்த டிசம்பர் மாதம் மத்திய அரசு அறிவித்தது. இந்நிலையில், வாஜ்பாய்க்கான பாரத ரத்னா விருது, இன்று வழங்கப்பட்டது. அவர் உடல்நலக் குறைவு காரணமாக, வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார். எனவே, அவரது வீட்டுக்குச் சென்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி விருதை வழங்கினார். இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். பாரத ரத்னா விருது பெற்ற வாஜ்பாய்க்கு தங்களது வாழ்த்துகளை அவர்கள் தெரிவித்தனர். பாரத ரத்னா விருது பெற்ற வாஜ்பாயின் வீட்டில் தில்லி சம்ஸ்க்ருத பள்ளி மாணவ மாணவிகளுடன் பிரதமர் மோடி சற்று நேரம் உரையாடி மகிழ்ந்தார். வந்தவர்களை வாஜ்பாயின் வளர்ப்பு மகள் நமீதா பட்டாச்சார்யா வரவேற்றார். அவருடன் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பேசிக் கொண்டிருந்தார். vajpayee-pranab

ALSO READ:  சபரிமலை மண்டல பூஜை நடை இன்று திறப்பு: பஸ் சேவையில் கோட்டை விட்ட தமிழக அரசு!

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜன.19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை படிபூஜை நிறைவு; ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு!

சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் தற்போது மண்டல, மகர விளக்கு பூஜை வழிபாடுகள் விழாக்கள் முடிந்து மகரம் மாதபூஜை வழிபாடுகள் ஐயப்பனுக்கு நடந்து வருகிறது

சபரிமலை பெருவழிப்பாதை மூடல்!

கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தையாய் நினைத்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் பயணித்து வந்த சபரிமலை பெருவழிப் பாதை நடை தற்போது மூடப்பட்டதால்

இன்று நெய் அபிஷேகம், நாளை தரிசனத்துடன் மகரவிளக்கு கால வழிபாடு நிறைவு!

பக்தர்கள் சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்யலாம் என்ற நிலையில், இன்று காலை நெய்யபிஷேகத்துக்காக பக்தர்கள் கூட்டம் மிக அதிகமாகவே இருந்தது

பஞ்சாங்கம் ஜன.18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.