December 5, 2025, 5:11 PM
27.9 C
Chennai

பயங்கரவாதக் குழுக்களுடன் ரகசிய கூட்டம்! காஷ்மீர் மீது தாக்குதல் நடத்த பாகிஸ்தான் திட்டம்!

pakistan terror funding3 - 2025

பாகிஸ்தானின் உளவு நிறுவனமான இன்டர்-சர்வீசஸ் இன்டலிஜென்ஸ் (ஐ.எஸ்.ஐ) இந்தியாவுக்கு எதிராக ‘மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் வகையில் ஒரு தாக்குதலை நடத்த’ திட்டமிடுவதற்காக, பாகிஸ்தான் மண்ணில் வளர்த்துவரும் பயங்கரவாத குழுக்களுடன் ‘உயர் மட்ட’ சந்திப்பை நடத்தியதாகக் கூறப்படுகிறது.

இதுபோன்ற தாக்குதல்களை நடத்துவதன் மூலம் காஷ்மீர் குறித்த சர்வதேச கவனத்தை ஈர்க்கலாம் என்று பாகிஸ்தான் நம்புகிறது.

டி.என்.ஏ. செய்தி குழுமத்தின் அறிக்கையின் படி, பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் ஐ.எஸ்.ஐ மற்றும் பயங்கரவாதக் குழுக்களான ஜெய்ஷ்-இ-முகமது, லஷ்கர்-இ-தைபா (எல்.இ.டி), ஹிஸ்புல் முஜாஹிதீன் மற்றும் பலர் இடையே ஜம்மு காஷ்மீரில் பல்வேறு தாக்குதல்களைத் திட்டமிட ஒரு உயர் மட்டக் கூட்டம் நடைபெற்றது.

masood azhar - 2025

பாகிஸ்தான் ராணுவத்தின் ‘பாதுகாப்பான ஓர் இடத்தில்’ நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், இந்தியாவில் நடத்தப்படக்கூடிய பல்வேறு பயங்கரவாத தாக்குதல்கள் குறித்த விவரங்களை பயங்கரவாத குழுக்கள் வெளிப்படுத்தியதாக இந்தியா டுடே தெரிவித்துள்ளது.

அந்த அறிக்கையின்படி, மூடிய கதவுக் கூட்டத்தில் காலிஸ்தானி ஜிந்தாபாத் படை (KZF) மற்றும் பிற காலிஸ்தான் சார்பு அமைப்புகளும் இஸ்லாமாபாத்தில் நடந்த கூட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தன. காலிஸ்தான் சார்பு அமைப்புகள் இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் காஷ்மீர் பிரிவினைவாதிகளுடன் கூட்டு போராட்டங்களை நடத்துவதாகக் கூறப்படுகிறது. ஐ.எஸ்.ஐ., காலிஸ்தான் ஜிந்தாபாத் படையைச் சேர்ந்த ரஞ்சித் சிங் நீதாவையும் சந்தித்து ஜம்மு-காஷ்மீரில் தனது பிரிவினை இயக்குமாறு கூறியுள்ளார்.

pakistan rail minister - 2025

பாகிஸ்தான் சிறையில் இருந்து பயங்கரவாதி மசூத் அசாரை பாகிஸ்தான் ‘ரகசியமாக’ விடுவித்து, சியால்கோட்-ஜம்மு-ராஜஸ்தான் பிராந்தியத்தில் ஒரு ‘பெரிய நடவடிக்கைக்கு’ திட்டமிட்டுள்ளதாக நேற்று செய்தி வெளியானது.

மேலும் இந்த அறிக்கையின்படி, 370 வது பிரிவை ரத்து செய்வதற்கான இந்திய அரசாங்கத்தின் முடிவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ராஜஸ்தான் அருகே எல்லையில் கூடுதல் படைகளை பாகிஸ்தான் நிறுத்தியது.

இந்தியாவின் உள் விவகாரத்தில் தலையிட வேண்டாம் என்று சர்வதேச சமூகத்திடம் இருந்து அறிவுரைகள் பெற்றதால், அவமானம் அடைந்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், ஜம்மு-காஷ்மீரில் இந்தியாவின் நகர்வுகளுக்கு “முழுமையான பதிலடி” கொடுப்பதாக அச்சுறுத்தியிருந்தார்.

imrankhan - 2025

பாகிஸ்தான் இராணுவத் தலைவர் ஜெனரல் கமர் ஜாவேத் பஜ்வாவும் “எந்த அளவிற்கும் செல்ல” தாங்கள் தயாராக இருப்பதாகக் கூறியிருந்தார்.

“எங்கள் காஷ்மீர் சகோதரர்களுக்காக தியாகங்களை வழங்கவும், கடைசி புல்லட், கடைசி வீரர்கள் மற்றும் கடைசி மூச்சு வரை எங்கள் கடமையை நிறைவேற்றவும்” தயாராக இருப்பதாக பஜ்வா கூறினார்.

இந்த நிலையில், பாகிஸ்தான் பயங்கரவாதக் குழுக்கள் மூலமே மீண்டும் இயக்குவதற்கு தயாராகி வருவது வெட்டவெளிச்சம் ஆகியிருக்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories