December 5, 2025, 6:00 PM
26.7 C
Chennai

ஓம், மாடு ஆகியன பிற்போக்குத் தனமானவையா?16ம் நூற்றாண்டுக்கு செல்கிறோமா? மோடி வேதனை!

modi cow mathura - 2025

ஓம், ‘மாடு’ ஆகியவை பிற்போக்குத்தனமான சொற்கள் என்று நினைப்பவர்கள் குறித்து மதுராவில் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி வேதனை தெரிவித்தார்!

உத்தரப் பிரதேசம் – மதுராவில் ஒரு மெகா உழவர் நலத்திட்டத்தைத் தொடங்கும்போது, ​​பசுக்கள் மற்றும் இந்து மதம் குறித்து விவாதிப்பது பிற்போக்குத்தனம் என்று கருதுபவர்கள் குறித்து தனது வேதனையை வெளிப்படுத்தினார் பிரதமர் மோடி!

‘ஓம்’ அல்லது ‘மாடு’ என்ற சொற்களைக் கேட்கும் போதெல்லாம் சிலர் ஏதோ துள்ளி எழுந்தபடி “16 ஆம் நூற்றாண்டுக்கு நாங்கள் திரும்பிச் செல்கிறோம்” என்று நினைப்பது நாட்டுக்கு துரதிர்ஷ்டவசமானது. இந்த நாட்டை அழித்தவர்கள், நாட்டை அழிப்பதற்காக எந்தக் கல்லையும் விட்டுவிடவில்லை என்றார்.

modi cow mathura1 - 2025

துர் பிரசாரம் செய்பவர்கள் குறித்து குறிப்பிட்ட பிரதமர் மோடி, நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது தற்போதைய முதல்வர் யோகி ஆதித்யநாத், என்செபலிடிஸை (Encephalitis) என்ற மூளை நோயை ஒழிக்க எத்தகைய முயற்சிகளையெல்லாம் மேற்கொண்டு முக்கியப் பங்காற்றினார் என்பது தெரிந்தும், சமூகத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதியினர் எதிர்பாராத நோய்த் தாக்கத்தால் மரணம் அடைந்த குழந்தைகள் மரணத்தில் மாநில அரசு குறித்து துர்பிரசாரம் செய்கின்றனர் என்றார் மோடி.

பிரதமர் மோடி, இன்று உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள மதுராவில், கால்நடைகளின் கால் மற்றும் வாய்ப் பகுதியில் ஏற்படும் நோய் புருசெல்லோசிஸை ஒழிப்பதற்கான தேசிய விலங்கு நோய் கட்டுப்பாட்டு திட்டத்தையும் தேசிய செயற்கை கருவூட்டல் திட்டத்தையும் தொடங்கி வைத்தார்.

தேசிய அளவிலான கால்நடைகள் நோய் கட்டுப்பாட்டுத் திட்டத்தை மதுராவில் தொடங்கி வைத்த பிரதமர் மோடி, பிளாஸ்டிக் சேகரிக்கும் பெண்களுடன் கலந்துரையாடி, அவர்களுக்கு உதவி செய்தார்.

modi cow mathura2 - 2025

கோமாரி மற்றும் புரூசெல்லா நோய்களில் இருந்து கால்நடைகளைக் காக்கும் பொருட்டு தேசிய அளவிலான நோய் கட்டுப்பாட்டு திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. இதன் தொடக்க விழா, உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக, ஹெலிகாப்டர் மூலம் மதுரா சென்ற பிரதமர் நரேந்திர மோடியை உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வரவேற்றார்.

தொடர்ந்து, விழா நடைபெறும் இடத்தைச் சென்றடைந்த பிரதமர் மோடி, பசுக்கள் மற்றும் கன்றுக்குட்டிகளைப் பார்வையிட்டார். நோய் கட்டுப்பாட்டு முறைகள் குறித்தும், அதற்கான தடுப்பூசிகள் மற்றும் மருந்துகள் குறித்தும் கால்நடை மருத்துவர்களிடம் கேட்டு, அதுகுறித்த விவரங்களைச் சொல்லி, அவர்களுடன் கலந்துரையாடினார்.

விழா நடைபெறும் இடத்தில் கால்நடை மருத்துவக் கண்காட்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதையும் பிரதமர் மோடி பார்வையிட்டார்.

modi plastic2 - 2025

பின்னர், ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு எதிரான இயக்கத்தையும் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். இதை ஒட்டி, அந்த வகை பிளாஸ்டிக்குகளைச் சேகரிக்கும் பெண் ஊழியர்களை மோடி சந்தித்தார்.

ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை தரம் பிரிக்கும் பணியில் அப்பெண்கள் ஈடுபட்டிருந்த போது, அவர்களுக்கு பிரதமர் மோடி உதவினார்.

நாட்டிலிருந்து ஒருமுறை பயன்படுத்திவிட்டு தூர எறிந்துவிடும் பிளாஸ்டிக் கழிவுகளை முற்றிலுமாக ஒழிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, மதுராவில் நடந்த ‘ஸ்வச்சதா ஹ சேவா’ நிகழ்ச்சியில் பெண்களுடன் சேர்ந்து குப்பைக் குவியல்களிலிருந்து பிளாஸ்டிக்கைப் பிரிப்பது குறித்துச் சொல்லி அவர்களுக்கு உதவினார்.

modi plastic1 - 2025

“அக்டோபர் 2, 2019க்குள் வீடுகள், அலுவலகங்கள் மற்றும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக்கினை அகற்றுவதற்கான முயற்சிகளை நாம் செய்ய வேண்டும். இதில் உதவ சுய உதவிக் குழுக்கள், பொதுமக்கள், தனிநபர்கள் மற்றும் பிறருக்கு நான் வேண்டுகோள் விடுக்கிறேன்” என்றார் பிரதமர்.

தடுப்பூசி, நோய் மேலாண்மை, செயற்கை கருவூட்டல் மற்றும் உற்பத்தித்திறன் குறித்து இந்தியாவின் 687 மாவட்டங்களிலும் கிருஷி விஜியன் கேந்திரங்களில் பிரதமர் நரேந்திர மோடி ஒரே நேரத்தில் நாடு தழுவிய வொர்க்‌ஷாப்களை தொடங்கினார்.

இதைத் தொடர்ந்து, பிளாஸ்டிக் பொருட்களை மறுசுழற்சி செய்யும் எந்திரத்தின் இயக்கத்தை மோடி தொடங்கி வைத்தார். கால்நடைகளுக்கான செயற்கை கருவூட்டல் திட்டத்தையும் பிரதமர் இன்று தொடங்கி வைத்தார். இந்த விழாவில், மதுரா தொகுதியின் எம்.பி. ஹேமாமாலினியும் கலந்து கொண்டார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories