‘இந்தியாவின் பெருமை மோடி’; வரவேற்கும் அமித் ஷா!

modi amitsha - 2026

வரலாற்று ரீதியான வெற்றி கண்ட அமெரிக்க சுற்றுப் பயணத்துக்குப் பின் இந்தியா திரும்பும் பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்பதில், கோடிக்கணக்கான இந்தியர்களுடன் நானும் சேர்ந்து கொள்கிறேன்… என்று டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார் பாஜக., தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித் ஷா.

இந்தியாவை உலக அரங்கில் புதிய உச்சத்துக்கு கொண்டு நிறுத்தியிருக்கும் பயணம் இது என்று வர்ணித்துள்ளார் அமித் ஷா. மேலும், அனைத்தையும் செய்ய இயலும் புதிய இந்தியாவுக்கான நம்பிக்கையைக் கொடுத்திருக்கும் தலைமை என்று கூறியுள்ள அமித் ஷா, இந்தியா வெகுநாட்களாக எதிர்பார்த்துக் காத்திருந்த தலைவர் அவர் என்று கூறியுள்ளார். மேலும், இந்தியாவின் பெருமை மோடி என்ற ஹேஷ்டேக்கையும் பதிவு செய்துள்ளார்.

ஐ.நா. பொதுச்சபையில் பேசிய பின்னர் பல்வேறு நாடுகளின் தலைவர்களை சந்தித்த பிரதமர் மோடி, அமெரிக்காவில் இருந்து தில்லிக்கு புறப்பட்டார். ஐநா சபைக் கூட்டத்தில் உரை நிகழ்த்திய பிரதமர் மோடி, இந்தியா திரும்புவதற்கு முன்பாக பல்வேறு நாடுகளின் தலைவர்களை சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

trump modi - 2026

முன்னதாக, கிரீஸ் பிரதமர் கைரியாகோஸ் மிட்சோடாகிஸ், பிரதமர் மோடியை சந்தித்தார். இதே போல் பூட்டான் பிரதமர் லோட்டே ஷெரிங்குடனும் மோடி உரையாடினார்.

ALSO READ:  தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?

வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினாவை மோடி சந்தித்தபோது, பயங்கரவாதத்தை சகித்துக் கொள்வதில்லை என இரு நாட்டு தலைவர்களும் உறுதி கூறினர். இரு நாடுகளிடையே பரஸ்பர நம்பிக்கையையும் நட்பையும் வலுப்படுத்துவது குறித்தும் பேச்சு நடத்தினர். வங்கதேசத்தின் தந்தையென அழைக்கப்படும் முஜிபுர் ரகுமான் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்க வேண்டும் என்று ஷேக் ஹசீனா அழைப்பு விடுத்தார். பிரதமர் மோடியும் அதனை ஏற்றுக் கொண்டார்.

modi in usa - 2026

பின்னர், அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இளம்பெண் துளசி கப்பார்ட்டுடன் பிரதமர் மோடி பேசினார்.

தொடர்ந்து அமெரிக்காவில் பல்வேறு நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு, இந்திய நேரப்படி இன்று அதிகாலை 2 மணி அளவில் நியூயார்க்கில் இருந்து புறப்பட்டார் பிரதமர் மோடி. அவரை விமான நிலையத்தில் தூதரக அதிகாரிகள் வழியனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து, ஜெர்மனியின் பிராங்க்பர்ட் வழியாக இன்று இரவு பிரதமர் தில்லி வந்து சேர்ந்தார். அவரை பாஜக.,வினர் உற்சாகத்துடன் வரவேற்றனர். தொடர்ந்து தில்லியில் ஒரு நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப் பட்டது.

ALSO READ:  சோழ சாம்ராஜ்யத்தின் வளமான வரலாறும், கலாசாரமும் பெருமிதம் ஏற்படுத்துகிறது: மனதின் குரலில் மோடி!

பல மணி நேர பயணத்திற்கு பின்னர் தில்லி வந்து சேர்ந்த பிரதமருக்கு தில்லி விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பா.ஜ., செயல் தலைவர் ஜேபி நட்டா, மத்திய அமைச்சர்கள், மற்றும் அதிகாரிகள் மோடியை வரவேற்றனர். பிரதமரை வரவேற்க ஏராளமான பாஜக.,வினர் விமான நிலையத்தில் திரண்டனர்.

பின்னர் விமான நிலையம் அருகே நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் தொண்டர்கள் மத்தியில் மோடி பேசியபோது… என்னை வரவேற்க அதிகளவில் கூடிய தொண்டர்களுக்கு நன்றி. மறக்க முடியாத வரவேற்பாக அமைந்தது. இந்த நேரத்தில் ஒவ்வொரு இந்தியனுக்கும் தலைவணங்குகிறேன்.

2014 தேர்தலுக்கு பின்னரும் அமெரிக்கா சென்றேன். தற்போதும், அமெரிக்கா சென்று வந்துள்ளேன். கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் மரியாதை அதிகரித்துள்ளது. இதற்கு 130 கோடி மக்களே காரணம்.

ஹூஸ்டன் நகரில் மிகச் சிறப்பான நிகழ்ச்சி நடந்தது. அந்த நகரில் அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் பெருமளவில் திரண்டு, தங்களது ஆதரவினை தெரிவித்தனர். அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். அங்கு தான் ஜனநாயகத்தின் வலிமையை அறிந்தேன்.

ALSO READ:  அருந்தமிழ் 50: திறனாய்வு!

ஹவ்டி மோடி நிகழ்ச்சி பெரிய திருவிழா போல் நடந்து வெற்றி பெற்றது. இந்த நிகழ்ச்சி, இந்தியா – அமெரிக்கா இடையிலான நட்புறவை வெளிப்படுத்தியது.

இந்தக் கூட்டத்தில், குடியரசு மற்றும் ஜனநாயக கட்சியினர் பங்கேற்றனர். வெள்ளை மாளிகை பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற அதிபர் டிரம்ப்பிற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

ஐக்கிய நாடுகள் சபையில் உலக தலைவர்களை சந்தித்த போது ஹவ்டி மோடி குறித்து பேசினர். உலகளவில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்துள்ளது. உலகம் முழுவதும் நமது வெற்றி உணரப்படுகிறது.. என்று பேசினார்.

பின்னர் விமான நிலையத்தில் இருந்து செல்லும் போது தொண்டர்களை நோக்கி கையசைத்தபடி பிரதமர் மோடி சென்றார். இரு புறமும் கூடி நின்று மக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories