நண்பன் திருமணத்துக்கு சென்று திரும்பும் போது… கால்வாயில் கார் கவிழ்ந்து 6 பேர் உயிரிழப்பு!

Published:

car 6persondied - 2026

நண்பரின் திருமணத்துக்குச் சென்று திரும்பும் போது, சாகர் கால்வாயில் கார் கவிழ்ந்து 6 பேர் உயிரிழந்தனர். சாகர் கால்வாயில் இருந்து சனிக்கிழமை இன்று மதியம் காரை மீட்டெடுத்தார்கள். இதனால், சூரியாப்பேட்டை மாவட்டத்தை சோகம் ஆட்கொண்டது.

நடிகூடம் மண்டலம் ‘சாகிராலா’ அருகில் சாகர் கால்வாயில் கார் வேகமாக சென்று கவிழ்ந்தது. சனிக்கிழமை மதியம் காரை கால்வாயிலிருந்து என்டிஆரெஃப் சிப்பந்திகளும் போலீசாரும் வெளியில் எடுத்தார்கள். காரில் இருந்து ஆறு பேரின் உடல்கள் மீட்கப் பட்டன.

இந்த விபத்தில் இறந்தவர்கள் அனைவரும் ஹைதராபாத் டாக்டர் ஏஎஸ்ராவ் நகரில் உள்ள அங்கூர் ஹாஸ்பிடலில் பணிபுரிபவர்கள்.

தங்களுடன் பணிபுரியும் விமலகொண்ட மகேஷ் திருமணத்திற்காக சாகிரால என்ற இடத்திற்குச் சென்று விட்டு திரும்பி வந்து கொண்டிருந்த போது இந்த விபத்து நடந்துள்ளது. இறந்தவர்கள் 6 பேரும் வெள்ளிக்கிழமை நேற்று காலை நண்பனின் திருமணத்திற்குச் சென்றவர்கள் என்பதுதான் சோகம்.

அவர்கள் திருமணத்துக்குச் சென்றுவிட்டு திரும்பி வந்த போது, சூர்யா பேட்டை அருகில் கார் வேகமாகச் சென்று கால்வாயில் விருட்டெனப் பாய்ந்துள்ளது. கால்வாயில் நீர் வரத்து மிக அதிகமாக இருந்ததால் உதவிப் பணிகள் தாமதமாகின. இந்நிலையில் மீட்புக் குழுவினர், சனிக்கிழமை இன்று மதியம் காரை வெளியே எடுத்தார்கள்!

ALSO READ:  குடிமக்களே தெய்வங்கள்: 80வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி உருக்கம்!
ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img