December 6, 2025, 3:30 PM
29.4 C
Chennai

வேலையில்லா இளைஞர்களுக்கான திட்டம் … ஜெகனின் அடுத்த அதிரடி!

IMG 20191023 WA0025 - 2025

ஜெகனின் அடுத்த பரபரப்பு தீர்மானம்…வேலையில்லா இளைஞர்களுக்கான திட்டம் …

ஆந்திர முதல்வராக ஜெகன்மோகன் ரெட்டி பொறுப்பு ஏற்றுக் கொண்டதில் இருந்து பரபரப்பு தீர்மானங்களை எடுத்தபடி முன்னேற்ற பாதையில் முன்னுக்கு விரைவதாக அந்தக் கட்சியினர் பாராட்டி வருகின்றனர்.

புதிதாக வேலையில்லா இளைஞர்களுக்கு அற்புதமான திட்டத்தை முன்னெடுத்துள்ளார் என்கின்றனர்.

வேலையற்ற இளைஞர்களுக்கு பொருளாதார தற்சார்பு ஏற்படுத்தும் திசையில் “ஒய்எஸ்ஆர் ஆதர்சம்” என்ற பெயரில் புத்தம்புது திட்டத்தை தொடங்கியுள்ளார் ஜெகன்.

மணல், தினசரி உபயோகப் பொருட்கள், மதுபாட்டில்கள்… இவற்றை எடுத்துச் சென்று சேர்க்கும் பொறுப்பை வேலையில்லா இளைஞர்களுக்கு ஒப்படைக்க போகிறது ஜகன் சர்க்கார்.

அதுமட்டுமின்றி அதற்கு தேவையான வாகன வசதிகளை அரசாங்கமே ஏற்படுத்தித் தரப்போகிறது. அதற்காக 6000 டிராக்டர்களை வாங்குவதற்கு அரசு நிதி வசதி அளிக்கிறது.

இந்த திட்டத்தின் மூலம் எஸ்சி எஸ்டி பிசி மைனாரிட்டி காப்பு இன சமூகங்கள் பலன் பெறும் வாய்ப்பு உள்ளது.

அந்தந்த சமூகப் பிரிவுகளின் கார்ப்பரேஷன்கள் மூலம் நிதியுதவி வசதிகளை அரசாங்கம் ஏற்படுத்த உள்ளது.

இது தொடர்பான வழி முறைகளையும் விதிகளையும் அரசாங்கம் செவ்வாய் அன்று வெளியிட்டது.

அதன்படி சமூகநலத்துறை செயலாளர் முத்தாட ரவிச்சந்திரா உத்தரவுகளை பிறப்பித்தார்.

முற்பட்ட வகுப்பைச் சேர்ந்த வேலையற்ற இளைஞர்களுக்கு இத்திட்டத்தில் இடமில்லை . எஸ்சி , எஸ்டி, பிசி, மைனாரிட்டி, காப்பு, இன சமூக பிரிவுகளுக்கு மட்டுமே இத்திட்டம் செல்லும்படியாகும் வகையில் இதனை வடிவமைத்து உள்ளதாக அவர் தெரிவித்தார்.

இத்திட்டத்தின் மூலம் ஒவ்வொரு மாதமும் 20 ஆயிரம் ரூபாய் வரை ஆதாயம் பெற வாய்ப்புள்ளது.

மாநிலம் முழுவதும் உள்ள மணல் ரீச் களிலிருந்து மணலை வாங்குபவரின் வீடு வரை மணலை சேர்க்கும் பொறுப்பு…., ஏபி பீவரேஜஸ் கார்ப்பரேஷன் கோடவுனிலிருந்து மது பாட்டில்களை அரசு கட்டுப்பாட்டில் உள்ள கடைகளுக்கு கொண்டு சேர்ப்பது… ரேஷன் வினியோக அமைப்பின் கிடங்குகளிலிருந்து அரிசி மற்றும் பிற தினசரித் தேவை சரக்குகளை மண்டல ஸ்தாயி பாயிண்ட் களுக்கு (எம்எஸ்எல் ) எடுத்துக் கொண்டு சேர்ப்பது ஆகிய வேலைகள் இளைஞர்களுக்கு கிடைக்கப் போகின்றன.

இந்தப் பொருட்களை கொண்டு சேர்ப்பதற்கான 6000 டிராக்டர்கள் வாங்குவதற்காக அரசு பொருள் உதவி அளிக்க உள்ளது.

இந்தத் திட்டத்தை கட்டுக்கோப்பாக செய்வதற்கு மாநில மற்றும் மாவட்ட அளவில் கமிட்டிகளை அரசு ஏற்பாடு செய்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories