வேலையில்லா இளைஞர்களுக்கான திட்டம் … ஜெகனின் அடுத்த அதிரடி!

IMG 20191023 WA0025 - 2026

ஜெகனின் அடுத்த பரபரப்பு தீர்மானம்…வேலையில்லா இளைஞர்களுக்கான திட்டம் …

ஆந்திர முதல்வராக ஜெகன்மோகன் ரெட்டி பொறுப்பு ஏற்றுக் கொண்டதில் இருந்து பரபரப்பு தீர்மானங்களை எடுத்தபடி முன்னேற்ற பாதையில் முன்னுக்கு விரைவதாக அந்தக் கட்சியினர் பாராட்டி வருகின்றனர்.

புதிதாக வேலையில்லா இளைஞர்களுக்கு அற்புதமான திட்டத்தை முன்னெடுத்துள்ளார் என்கின்றனர்.

வேலையற்ற இளைஞர்களுக்கு பொருளாதார தற்சார்பு ஏற்படுத்தும் திசையில் “ஒய்எஸ்ஆர் ஆதர்சம்” என்ற பெயரில் புத்தம்புது திட்டத்தை தொடங்கியுள்ளார் ஜெகன்.

மணல், தினசரி உபயோகப் பொருட்கள், மதுபாட்டில்கள்… இவற்றை எடுத்துச் சென்று சேர்க்கும் பொறுப்பை வேலையில்லா இளைஞர்களுக்கு ஒப்படைக்க போகிறது ஜகன் சர்க்கார்.

அதுமட்டுமின்றி அதற்கு தேவையான வாகன வசதிகளை அரசாங்கமே ஏற்படுத்தித் தரப்போகிறது. அதற்காக 6000 டிராக்டர்களை வாங்குவதற்கு அரசு நிதி வசதி அளிக்கிறது.

இந்த திட்டத்தின் மூலம் எஸ்சி எஸ்டி பிசி மைனாரிட்டி காப்பு இன சமூகங்கள் பலன் பெறும் வாய்ப்பு உள்ளது.

ALSO READ:  நல்ல வாய்ப்பை வீணடித்து விட்டார்கள் இண்டி கூட்டணியினர்!

அந்தந்த சமூகப் பிரிவுகளின் கார்ப்பரேஷன்கள் மூலம் நிதியுதவி வசதிகளை அரசாங்கம் ஏற்படுத்த உள்ளது.

இது தொடர்பான வழி முறைகளையும் விதிகளையும் அரசாங்கம் செவ்வாய் அன்று வெளியிட்டது.

அதன்படி சமூகநலத்துறை செயலாளர் முத்தாட ரவிச்சந்திரா உத்தரவுகளை பிறப்பித்தார்.

முற்பட்ட வகுப்பைச் சேர்ந்த வேலையற்ற இளைஞர்களுக்கு இத்திட்டத்தில் இடமில்லை . எஸ்சி , எஸ்டி, பிசி, மைனாரிட்டி, காப்பு, இன சமூக பிரிவுகளுக்கு மட்டுமே இத்திட்டம் செல்லும்படியாகும் வகையில் இதனை வடிவமைத்து உள்ளதாக அவர் தெரிவித்தார்.

இத்திட்டத்தின் மூலம் ஒவ்வொரு மாதமும் 20 ஆயிரம் ரூபாய் வரை ஆதாயம் பெற வாய்ப்புள்ளது.

மாநிலம் முழுவதும் உள்ள மணல் ரீச் களிலிருந்து மணலை வாங்குபவரின் வீடு வரை மணலை சேர்க்கும் பொறுப்பு…., ஏபி பீவரேஜஸ் கார்ப்பரேஷன் கோடவுனிலிருந்து மது பாட்டில்களை அரசு கட்டுப்பாட்டில் உள்ள கடைகளுக்கு கொண்டு சேர்ப்பது… ரேஷன் வினியோக அமைப்பின் கிடங்குகளிலிருந்து அரிசி மற்றும் பிற தினசரித் தேவை சரக்குகளை மண்டல ஸ்தாயி பாயிண்ட் களுக்கு (எம்எஸ்எல் ) எடுத்துக் கொண்டு சேர்ப்பது ஆகிய வேலைகள் இளைஞர்களுக்கு கிடைக்கப் போகின்றன.

ALSO READ:  மத்திய அரசின் தொகுதி மறு வரை தென்னக மாநிலங்களுக்கு லாபமே!

இந்தப் பொருட்களை கொண்டு சேர்ப்பதற்கான 6000 டிராக்டர்கள் வாங்குவதற்காக அரசு பொருள் உதவி அளிக்க உள்ளது.

இந்தத் திட்டத்தை கட்டுக்கோப்பாக செய்வதற்கு மாநில மற்றும் மாவட்ட அளவில் கமிட்டிகளை அரசு ஏற்பாடு செய்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 10 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

FIFA 2026: ரவுண்ட் 16… கடைசி நான்கு ஆட்டங்கள், அதிர்ச்சித் தோல்விகள்!

காலிறுதிச் சுற்றுக்கு முந்தைய சுற்றின் கடைசி ஆட்டம் வான்கூவரில் சுவிட்சர்லாந்து, கொலம்பியா அணிகளுக்கிடையே நடந்தது. இதில் இருஅணிகளும் ஆட்டநேர முடிவு வரை கோல் எதுவும் போடவில்லை. எக்ஸ்ட்ரா டைமான அடுத்த 30 நிமிடத்திலும்

பஞ்சாங்கம் ஜூலை 09 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

          இது இந்தியாவின் மிக மோசமான தொள்வியாகும். இதற்கு முன்னர் இவ்வளவு ரன் வித்தியாசத்தில் தோற்றதில்லை. அணியில் வரிசையாக இடதுகை மட்டையாளர்களாக இருப்பது அணிக்குப் பிரச்சனையாக உள்ளது. இதனால் அடுத்த ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் மீண்டும் அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது. 

காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை… முக்கியத்துவம் என்ன?

இந்த கருத்துதான் பண்டிட்களின் வெளியேற்றம் பற்றிய விவாதத்தை கட்டமைக்க முடியும். இல்லாவிட்டால், காஷ்மீர் குறித்த எந்த பேச்சும் வெறும் சொற் சிலம்பமாகவே பார்க்கப்படும்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 10 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

FIFA 2026: ரவுண்ட் 16… கடைசி நான்கு ஆட்டங்கள், அதிர்ச்சித் தோல்விகள்!

காலிறுதிச் சுற்றுக்கு முந்தைய சுற்றின் கடைசி ஆட்டம் வான்கூவரில் சுவிட்சர்லாந்து, கொலம்பியா அணிகளுக்கிடையே நடந்தது. இதில் இருஅணிகளும் ஆட்டநேர முடிவு வரை கோல் எதுவும் போடவில்லை. எக்ஸ்ட்ரா டைமான அடுத்த 30 நிமிடத்திலும்

பஞ்சாங்கம் ஜூலை 09 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

          இது இந்தியாவின் மிக மோசமான தொள்வியாகும். இதற்கு முன்னர் இவ்வளவு ரன் வித்தியாசத்தில் தோற்றதில்லை. அணியில் வரிசையாக இடதுகை மட்டையாளர்களாக இருப்பது அணிக்குப் பிரச்சனையாக உள்ளது. இதனால் அடுத்த ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் மீண்டும் அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது. 

காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை… முக்கியத்துவம் என்ன?

இந்த கருத்துதான் பண்டிட்களின் வெளியேற்றம் பற்றிய விவாதத்தை கட்டமைக்க முடியும். இல்லாவிட்டால், காஷ்மீர் குறித்த எந்த பேச்சும் வெறும் சொற் சிலம்பமாகவே பார்க்கப்படும்.

கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

சபரிமலையில் நடைபெறும் மாதாந்திர பூஜையின் போது, ​​பல முக்கியமானநெய்யாபிஷேகம், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, புஷ்பாபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, அஷ்ட அபிஷேகம். சடங்குகள் நடத்தப்படுகின்றன.

நடத்தையில் சந்தேகம்… நடந்த சண்டை… மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

நடத்தையில் சந்தேகப்பட்டு நடந்த சண்டையில் மனைவியே கணவனை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் இப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 08 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories