நேரத்துக்கு வராத ஆம்புலன்ஸ்! நடிகை உயிர்போன பரிதாபம்!

Published:

IMG 20191023 WA0017 - 2026

சாலையில் செல்லும்போது பின்னால் ஆம்புலன்ஸ் வந்தது என்றால் தயவு செய்து வழி விடுங்கள். அதில் உள்ளவரின் நலனுக்கு பிரார்த்தனை செய்யுங்கள். அது தான் மனிதாபிமானம். ஆம்புலன்ஸ் என்பது வெறும் வாகனம் அல்ல .உயிர் காக்கும் சஞ்சீவினி என்ற மெசேஜ் வாட்ஸ்அப் மூலம் வலம் வருகிறது.

ஆம்புலன்ஸ் நேரத்திற்கு வராததால் சினிமா நடிகை உயிரிழந்தார்.

அதற்கு காரணம் நேரத்திற்கு வந்து சேராத ஆம்புலன்சால் மராட்டிய நடிகை உயிரிழந்த சோகமே!

மகாராஷ்டிராவில் பிங்கோலி மாவட்டத்தைச் சேர்ந்த பூஜா ஜும்ஜுர் என்ற மராட்டிய நடிகைக்கு ஞாயிறு விடியற்காலை பிரசவ வலி எடுத்தது. அருகில் இருந்த மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு பிறந்த சிசு சில நிமிடங்களே உயிர் வாழ்ந்தது. பூஜாவின் உடல்நிலையும் கவலைக்கிடமாக இருக்கவே அங்கிருந்த மருத்துவர்கள் அவரை உடனே மாவட்ட மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும்படி கூறினர்.

IMG 20191023 WA0016 - 2026

அந்த மருத்துவமனை சுமார் 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. அங்கு அரசு ஆம்புலன்ஸ் கிடைக்காததால் உறவினர் சிரமப்பட்டு தனியார் ஆம்புலன்ஸ் பிடித்து அவரை மாவட்ட மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். ஆனால் அங்கு அவர் மரணமடைந்தார்.

ALSO READ:  சபரிமலையில் நிறை புத்தரிசி பூஜை: கொட்டும் மழையில் குவிந்த பக்தர்கள்!

சரியான நேரத்தில் ஆம்புலன்ஸ் கிடைத்திருந்தால் நிச்சயம் அவர் உயிர் பிழைத்து இருப்பார் என்று கூறி மனம் வருந்துகின்றனர் குடும்பத்தினர் .

பூஜா பல மராட்டிய படங்களில் நடித்து தனக்கென தனி இடத்தை பிடித்தவர்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img