குடும்பம் நடத்துவதற்கு கூட ‘ஜெ டாக்ஸ்’ கட்ட வேண்டி வரலாம்!

chandrababunaidu - 2026

குடும்பம் நடத்துவதற்கு கூட ‘ஜெ டாக்ஸ்’ கட்ட வேண்டி வரலாம்…! ஜெகன் அரசாங்கத்தின் மீது சந்திரபாபு நாயுடு கடுமையான விமர்சனம்.

வேலை உத்தரவாத நிதி 2500 கோடி ரூபாய்களை விடுவிக்காமல் ஜெகன் அரசு வேண்டுமென்றே தாமதம் செய்கிறது என்று தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு விமர்சித்தார்.

மத்திய அரசு நிதி ஒதுக்கி உள்ள போதிலும் மாநில அரசாங்கம் வேண்டும் என்றே தடை விதிக்கிறது என்று குற்றம் சாட்டினார் .

திருட்டு கணக்கு எழுதுவதில் தேர்ந்தவரான சிஎம் ஜெகன் இப்போது வசமாக மாட்டிக் கொண்டார் என்று கடுமையாக விமர்சித்தார்.

குண்டூர் தெலுகு தேசம் கட்சி அலுவலகத்தில் முன்னாள் கிராம பஞ்சாயத்து, மண்டல் பரிஷத், ஜில்லா பரிஷத் தலைவர்களுடன் சந்திரபாபு நாயுடு கலந்துரையாடினார்.

கிராமங்களில் வேலை உத்தரவாத கூலிப்பணம் வராமல் தொழிலாளர்கள் தொல்லைக்கு ஆளாகிறார்கள் என்று சந்திரபாபுவின் கவனத்திற்கு அவர்கள் கொண்டு வந்தார்கள்.

ALSO READ:  மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்:

தெலுகு தேசம் கட்சி ஆட்சியில் ஆரம்பித்த வேலை உத்தரவாத திட்டத்தின் மேல் வந்த குற்றச்சாட்டுகளை அவர்களால் நிரூபிக்க முடியவில்லை என்று சந்திரபாபு நாயுடு குறிப்பிட்டார்.

chandrababu house arrest1 - 2026

ஆந்திர முதலமைச்சர் ஜகனின் சொந்த தொகுதி புலிவெந்தல, பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சர் பெத்திரெட்டி ராமச்சந்திராரெட்டியின் தொகுதி சித்தூர் ஜில்லா புங்கனூரு தவிர வேலை உத்தரவாத நிதியை வேறு எங்குமே விடுவிக்கவில்லை என்று சந்திரபாபு ஆத்திரமடைந்தார்.

தனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை. எதிரிக்கு இரண்டு கண்களும் போக வேண்டும் என்பதே ஜெகனின் சுபாவம் என்று கடுமையாக விமர்சனம் செய்தார்.

அவருடைய சொந்தக் கட்சித் தலைவர்கள் கூட தொல்லைக்கு ஆளாகிறார்கள் என்றும், ஜெகன் தாம் ஒருவர் தவிர வேறு எவரும் சுகப்படக் கூடாது என்ற இயல்பு உடையவர் என்றும் சந்திரபாபு குற்றம் சாட்டினார்.

யாரேனும் தன் சொந்த வயலில் மண் எடுக்க வேண்டும் என்றாலும் “ஜெகன்மோகன் ரெட்டி வரி” (ஜெ டாக்ஸ்) வசூல் செய்கிறார் என்று எரிந்து விழுந்தார்.

ALSO READ:  டெட் மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பில் உடனடி சட்ட நிவாரணம் தேவை!

நாளை கணவன் மனைவி குடும்பம் நடத்துவதற்கு கூட “ஜெ டாக்ஸ்”வசூல் செய்வார் போல் உள்ளது என்று நையாண்டி செய்தார்.

டிடிபி தலைவர்களின் பொருளாதார ஆதாரங்களை அழித்து விடவேண்டும் என்று வேண்டுமென்றே இவ்வாறு செய்கிறார் என்று குற்றம் சாட்டினார்.

வயல்களில் கூலி வேலை செய்பவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதிகள் நேராக கூலிகளுக்கு கொடுக்க வேண்டும் என்றார். மத்திய அரசு அனுப்பிய விவசாய நலத்திட்ட நிதிகளைத் தடுப்பதற்கு மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்றார்.

உடனே பில்களை செலுத்த வேண்டும் என்று சந்திரபாபு டிமாண்ட் செய்தார். ஒருவேளை இந்த அரசு இறங்கி வராவிட்டால் இம்முறை தன் அரசே வரும் என்றும்… பில்களை வட்டியோடு கூட செலுத்துவோம் என்றும் நம்பிக்கை அளித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 10 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

FIFA 2026: ரவுண்ட் 16… கடைசி நான்கு ஆட்டங்கள், அதிர்ச்சித் தோல்விகள்!

காலிறுதிச் சுற்றுக்கு முந்தைய சுற்றின் கடைசி ஆட்டம் வான்கூவரில் சுவிட்சர்லாந்து, கொலம்பியா அணிகளுக்கிடையே நடந்தது. இதில் இருஅணிகளும் ஆட்டநேர முடிவு வரை கோல் எதுவும் போடவில்லை. எக்ஸ்ட்ரா டைமான அடுத்த 30 நிமிடத்திலும்

பஞ்சாங்கம் ஜூலை 09 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

          இது இந்தியாவின் மிக மோசமான தொள்வியாகும். இதற்கு முன்னர் இவ்வளவு ரன் வித்தியாசத்தில் தோற்றதில்லை. அணியில் வரிசையாக இடதுகை மட்டையாளர்களாக இருப்பது அணிக்குப் பிரச்சனையாக உள்ளது. இதனால் அடுத்த ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் மீண்டும் அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது. 

காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை… முக்கியத்துவம் என்ன?

இந்த கருத்துதான் பண்டிட்களின் வெளியேற்றம் பற்றிய விவாதத்தை கட்டமைக்க முடியும். இல்லாவிட்டால், காஷ்மீர் குறித்த எந்த பேச்சும் வெறும் சொற் சிலம்பமாகவே பார்க்கப்படும்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 10 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

FIFA 2026: ரவுண்ட் 16… கடைசி நான்கு ஆட்டங்கள், அதிர்ச்சித் தோல்விகள்!

காலிறுதிச் சுற்றுக்கு முந்தைய சுற்றின் கடைசி ஆட்டம் வான்கூவரில் சுவிட்சர்லாந்து, கொலம்பியா அணிகளுக்கிடையே நடந்தது. இதில் இருஅணிகளும் ஆட்டநேர முடிவு வரை கோல் எதுவும் போடவில்லை. எக்ஸ்ட்ரா டைமான அடுத்த 30 நிமிடத்திலும்

பஞ்சாங்கம் ஜூலை 09 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

          இது இந்தியாவின் மிக மோசமான தொள்வியாகும். இதற்கு முன்னர் இவ்வளவு ரன் வித்தியாசத்தில் தோற்றதில்லை. அணியில் வரிசையாக இடதுகை மட்டையாளர்களாக இருப்பது அணிக்குப் பிரச்சனையாக உள்ளது. இதனால் அடுத்த ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் மீண்டும் அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது. 

காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை… முக்கியத்துவம் என்ன?

இந்த கருத்துதான் பண்டிட்களின் வெளியேற்றம் பற்றிய விவாதத்தை கட்டமைக்க முடியும். இல்லாவிட்டால், காஷ்மீர் குறித்த எந்த பேச்சும் வெறும் சொற் சிலம்பமாகவே பார்க்கப்படும்.

கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

சபரிமலையில் நடைபெறும் மாதாந்திர பூஜையின் போது, ​​பல முக்கியமானநெய்யாபிஷேகம், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, புஷ்பாபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, அஷ்ட அபிஷேகம். சடங்குகள் நடத்தப்படுகின்றன.

நடத்தையில் சந்தேகம்… நடந்த சண்டை… மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

நடத்தையில் சந்தேகப்பட்டு நடந்த சண்டையில் மனைவியே கணவனை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் இப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 08 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories