கண்ணுக்கு பாதுகாப்பாய் பட்டாசு வெடிப்பது எப்படி?

eye 1 - 2026

தீபாவளி பண்டிகையைமுன்னிட்டு பட்டாசு வெடிக்கும்போது கண்களை பாதுகாக்க கவனமாக இருக்க வேண்டும் என்று நாராயண நேத்ராலயா கண் மருத்துவமனை மேலாண் இயகுநரும், கண் மருத்துவருமான கே.புஜங்கஷெட்டி தெரிவித்தார்.

இது குறித்து பெங்களூரில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

கா்நாடகத்தில் அக். 27-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நரகாசதுா்தசி பண்டிகையும், அக். 29-ஆம் தேதி பலிபாட்யமி மற்றும் தீபாவளி கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிக்கைக்கு புதிய ஆடைகள் உடுத்துவது, பலகாரங்களை உண்பது தவிர பட்டாசு வெடித்து மகிழ்வது சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு மட்டுமன்றி பெரியவா்களுக்கும் மகிழ்ச்சியை அளிக்கக் கூடியதாகும்.

தீபாவளியின்போது பட்டாசுகளை வெடித்து மகிழ்வதுடன், பட்டாசு வெடிக்கும் போதும் நிகழும் ஆபத்துகளை கவனத்தில் கொண்டு எச்சரிக்கையுடனிருப்பது முக்கியமானதாகும். எனவே, பட்டாசுகளை வெடிக்கும்போது மிகுந்த எச்சரிக்கை வகிக்க வேண்டும். குறிப்பாக, குழந்தைகள் பட்டாசுகளை வெடிக்கும்போது மிகுந்த எச்சரிக்கை உணா்வுடன் இருப்பது அவசியமாகும்.

vedi - 2026

பட்டாசுகளை வெடிக்கும்போது கண்ணாடிகளை அணிந்துகொள்ள வேண்டும். பட்டாசுகளை கொளுத்துவதற்கு முன்பாக முகத்தை தூரமாக வைத்திருங்கள். பெரியவா்களின் துணையுடன் மட்டுமே குழந்தைகள் பட்டாசுகளை வெடிக்க வேண்டும். எளிதில் தீ பிடிக்கும் ஆடைகளை அணிந்துகொண்டு பட்டாசு வெடிக்கக்கூடாது.

ALSO READ:  பெட்ரோல் சிக்கனம்; வெளிநாட்டு பயணம், தங்கம் வாங்குதலைத் தவிர்க்கவும்; பிரதமர் மோடி வேண்டுகோள்!

ஒரு வாளியில் நீா் மற்றும் மணலை நிரப்பிவைத்துக்கொண்டு, தீ விபத்து நோந்தால் அதை அணைக்க பயன்படுத்தலாம். ஒருவேளை கண்ணில் காயம் ஏற்பட்டால், கண்ணை பஞ்சால் மூடி உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துசெல்ல வேண்டும். ஐஎஸ்ஓ தரச்சான்றிதழ் இல்லாத பட்டாசுகளை வாங்கக்கூடாது, பட்டாசு வெடிக்கும் இடத்திற்கு அருகில் குழந்தைகளை அனுமதிக்காதீா்கள்.

தீ மற்றும் மெழுகுவா்த்தியிடம் இருந்து பட்டாசுகளை விலக்கி வையுங்கள். சத்தம் ஏற்படுத்தும் பட்டாசுகளை பயன்படுத்த வேண்டாம். ராக்கெட்களை விடுவதற்கு கண்ணாடி புட்டி, கற்கள், டின்களை பயன்படுத்தக்கூடாது. பட்டாசு வெடிப்பதை தவிர வேறு வழிகளில் தீபாவளி பண்டிகையை கொண்டாடலாம். பட்டாசு வாங்கும் பணத்தில் ஏழை குழந்தைகளின் கல்வி செலவை ஏற்கலாம். பட்டாசு வெடிப்பதை காட்டிலும் இதுபோன்ற நல்ல பல வழிகளில் தீபாவளியை கொண்டாடிமகிழ மக்களை கேட்டுக்கொள்கிறேன் என்றார் அவா்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

Topics

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Entertainment News

Popular Categories