விரக்தியில் திரையைக் கிழித்து… கேட்டை உடைத்து… கேடு ஏற்படுத்தி தப்பி ஓடிய விஜய் ரசிகர்கள்!

bigil3 - 2026

எந்தப் படத்தைக் கொடுத்தாலும் அதைப் பார்த்து ரசிப்பவர்கள் ரசிகர்கள். அதனால்தான் அவர்கள் ரசிகர்கள்.

இயக்குனர் அட்லீயின் இயக்கத்தில், நடிகர் விஜய் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள பிகில் திரைப்படத்தை தீபாவளி ஸ்பெஷல் என்று கூறி வெள்ளிக்கிழமை இன்றே வெளியிட்டிருக்கிறார்கள் பிகில் குழுவினர்.

படம் வெளியாகும் முன்பே பலத்த சர்ச்சைகள். சான்றிதழ் பெறுவதில் இருந்து பல்வேறு பிரச்னைகள். ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சியிலும் அரசியல். இப்படி எத்தனையோ கட்டங்களைத் தாண்டி இன்று திரையில் தன் முகத்தைக் காட்டியிருக்கிறார் பிகிலு.!

bigil4 - 2026

வழக்கமாக படம் வெளியாகும் போது சில நாட்கள் சிறப்பு காட்சிகளைப் போட்டு, கலெக்சனை எடுத்துவிடுவார்கள். காரணம், தமிழ்ராக்கர்ஸ் மாதிரியான அசுரர்களின் பார்வை பட்டு விடக் கூடாதே என்ற ‘நல்ல’ எண்ணம்தான்! ஆனால் பிகிலு பிரச்னையை சந்தித்த போது, அதன் சிறப்புக் காட்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்கள்.

தீபாவளியையொட்டி இன்று ஒரு நாள் மட்டும் பிகில் படத்தின் சிறப்புக் காட்சிக்கு அனுமதி என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார். முன்னதாக, பிகில் படத்தின் தயாரிப்பாளர் தரப்பு அரசிடம் அனுமதி கேட்ட நிலையில் தற்போது இந்த அறிவிப்பு வெளியானது.

ALSO READ:  ஈரான் விஷயத்தில் பாரதம் ஏன் தலையிடவில்லை?!

இதனால், இன்று அதிகாலை 5 மணிக்கே, முதல் காட்சி திரையரங்கில் ஓடத் தொடங்கியது. தமிழகம் மட்டுமல்லாது உலகின் பல இடங்களிலும் பிகிலு ரிலீஸ் ஆனது.

IMG 20191025 WA0008 - 2026

இன்று காலை தமிழகத்தின் கிருஷ்ணகிரியில் படம் ரிலீஸ் ஆக தாமதம் ஆனதால், நள்ளிரவு முதலே கூடியிருந்த ரசிகர்கள் தெருவில் இறங்கி ரகளையில் ஈடுபட்டனர். வன்முறை வெறியாட்டத்தில் ரசிகர்கள் இறங்கி, கடைகளின் ஷட்டர்கள் மீது கல்வீசி, காவல்துறையினர் வைத்திருந்த பேரிகார்டுகளை உடைத்து, சாய்த்து ரகளை செய்தனர். இதனால் கிருஷ்ணகிரி ரணகளமானது.

இதுபோல், இலங்கையில் உள்ள திரையரங்கம் ஒன்றில் டிக்கெட் கிடைக்காத விரக்தியில் தியேட்டரையே விஜய் ரசிகர்கள் சூறையாடினர்.

bigil2 - 2026

இலங்கை ஜாஃப்னாவில் உள்ள ராஜா திரையரங்கில் “பிகில்” திரைப்படம் திரையிடப்பட இருந்த நிலையில், அதிகாலையே வந்த விஜய் ரசிகர்கள் பலர் தங்களுக்கு டிக்கெட் கிடைக்காமல் போன விரக்தியில் திரையரங்கை அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர்.

திரையரங்கினுள் புகுந்து ஸ்க்ரீனையும் சேதப்படுத்தியவர்கள் பின்னர், திரையரங்கின் கேட்டை உடைத்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடினர். அந்த நேரத்தில் திரையரங்கு ஊழியர்களும் தாக்கப் பட்டுள்ளனர்.

ALSO READ:  ஹரிஜன ஆலயப் பிரவேசம் செய்த வைத்யநாத ஐயரின் பிறந்த தினத்தில் மரியாதை!
bigil1 - 2026

இப்போது இந்தப் படத்தைப் பார்க்கவா இத்தனை ஆத்திரப் பட்டு, வன்முறையில் இறங்கியிருக்கிறார்கள் ரசிகர்கள் என்று சிலர் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

பிகிலு விமர்சனம்: ஒரே டிக்கெட்ல நாலு படம் (அட்லீ படம்) பார்த்தா இப்படித்தான் இருக்கும்!

பிகிலு வந்து 3 மணி நேரத்தில்.. விசிலு ஊதிய தமிழ் ராக்கர்ஸ்..!

பிகிலு எப்படியாவது ஓடியாகணும்! அரசியல் விஜய் ஏற்படுத்திய திகிலு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

Entertainment News

Popular Categories