December 5, 2025, 5:59 PM
26.7 C
Chennai

விரக்தியில் திரையைக் கிழித்து… கேட்டை உடைத்து… கேடு ஏற்படுத்தி தப்பி ஓடிய விஜய் ரசிகர்கள்!

bigil3 - 2025

எந்தப் படத்தைக் கொடுத்தாலும் அதைப் பார்த்து ரசிப்பவர்கள் ரசிகர்கள். அதனால்தான் அவர்கள் ரசிகர்கள்.

இயக்குனர் அட்லீயின் இயக்கத்தில், நடிகர் விஜய் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள பிகில் திரைப்படத்தை தீபாவளி ஸ்பெஷல் என்று கூறி வெள்ளிக்கிழமை இன்றே வெளியிட்டிருக்கிறார்கள் பிகில் குழுவினர்.

படம் வெளியாகும் முன்பே பலத்த சர்ச்சைகள். சான்றிதழ் பெறுவதில் இருந்து பல்வேறு பிரச்னைகள். ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சியிலும் அரசியல். இப்படி எத்தனையோ கட்டங்களைத் தாண்டி இன்று திரையில் தன் முகத்தைக் காட்டியிருக்கிறார் பிகிலு.!

bigil4 - 2025

வழக்கமாக படம் வெளியாகும் போது சில நாட்கள் சிறப்பு காட்சிகளைப் போட்டு, கலெக்சனை எடுத்துவிடுவார்கள். காரணம், தமிழ்ராக்கர்ஸ் மாதிரியான அசுரர்களின் பார்வை பட்டு விடக் கூடாதே என்ற ‘நல்ல’ எண்ணம்தான்! ஆனால் பிகிலு பிரச்னையை சந்தித்த போது, அதன் சிறப்புக் காட்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்கள்.

தீபாவளியையொட்டி இன்று ஒரு நாள் மட்டும் பிகில் படத்தின் சிறப்புக் காட்சிக்கு அனுமதி என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார். முன்னதாக, பிகில் படத்தின் தயாரிப்பாளர் தரப்பு அரசிடம் அனுமதி கேட்ட நிலையில் தற்போது இந்த அறிவிப்பு வெளியானது.

இதனால், இன்று அதிகாலை 5 மணிக்கே, முதல் காட்சி திரையரங்கில் ஓடத் தொடங்கியது. தமிழகம் மட்டுமல்லாது உலகின் பல இடங்களிலும் பிகிலு ரிலீஸ் ஆனது.

IMG 20191025 WA0008 - 2025

இன்று காலை தமிழகத்தின் கிருஷ்ணகிரியில் படம் ரிலீஸ் ஆக தாமதம் ஆனதால், நள்ளிரவு முதலே கூடியிருந்த ரசிகர்கள் தெருவில் இறங்கி ரகளையில் ஈடுபட்டனர். வன்முறை வெறியாட்டத்தில் ரசிகர்கள் இறங்கி, கடைகளின் ஷட்டர்கள் மீது கல்வீசி, காவல்துறையினர் வைத்திருந்த பேரிகார்டுகளை உடைத்து, சாய்த்து ரகளை செய்தனர். இதனால் கிருஷ்ணகிரி ரணகளமானது.

இதுபோல், இலங்கையில் உள்ள திரையரங்கம் ஒன்றில் டிக்கெட் கிடைக்காத விரக்தியில் தியேட்டரையே விஜய் ரசிகர்கள் சூறையாடினர்.

bigil2 - 2025

இலங்கை ஜாஃப்னாவில் உள்ள ராஜா திரையரங்கில் “பிகில்” திரைப்படம் திரையிடப்பட இருந்த நிலையில், அதிகாலையே வந்த விஜய் ரசிகர்கள் பலர் தங்களுக்கு டிக்கெட் கிடைக்காமல் போன விரக்தியில் திரையரங்கை அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர்.

திரையரங்கினுள் புகுந்து ஸ்க்ரீனையும் சேதப்படுத்தியவர்கள் பின்னர், திரையரங்கின் கேட்டை உடைத்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடினர். அந்த நேரத்தில் திரையரங்கு ஊழியர்களும் தாக்கப் பட்டுள்ளனர்.

bigil1 - 2025

இப்போது இந்தப் படத்தைப் பார்க்கவா இத்தனை ஆத்திரப் பட்டு, வன்முறையில் இறங்கியிருக்கிறார்கள் ரசிகர்கள் என்று சிலர் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

பிகிலு விமர்சனம்: ஒரே டிக்கெட்ல நாலு படம் (அட்லீ படம்) பார்த்தா இப்படித்தான் இருக்கும்!

பிகிலு வந்து 3 மணி நேரத்தில்.. விசிலு ஊதிய தமிழ் ராக்கர்ஸ்..!

பிகிலு எப்படியாவது ஓடியாகணும்! அரசியல் விஜய் ஏற்படுத்திய திகிலு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories