ஜார்கண்ட் மாநிலத்தில் நவ.30ல் தேர்தல்!

Published:

election commission - 2026

ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள 81 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நவ.30 ஆம் தேதி முதல் 5 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் அறிவித்தார்.

டிச.23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்தார்.

தலைமைத் தேர்தல் ஆணையர் அறிவித்த தேர்தல் தொடர்பான நாட்கள்…

நவ.30 – 13 தொகுதிகளுக்கு முதற்கட்ட தேர்தல்
டிச.7 – 2ஆம் கட்ட தேர்தல்
டிச.12 – 3வது கட்ட தேர்தல்
டிச.16 – 4ஆம் கட்ட தேர்தல்
டிச.20 – 5ஆம் கட்ட தேர்தல்

sunilarora electioncommissioner - 2026

ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலின் போது, நாட்டிலேயே முதன்முறையாக வயதானவர்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு தபால் வாக்கு மூலம் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்தார்.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img