December 6, 2025, 8:46 AM
23.8 C
Chennai

உள்ளம் உருக்கும் சம்பவம்: ஆம்புலன்ஸ் மறுக்கப் பட்டதால்… அண்ணன் உடலை செங்கல் வண்டியில் எடுத்துச் சென்று…

brother died1 - 2025

அண்ணன் இறந்தது தெரியாமல் தள்ளு வண்டியில் வைத்து மருத்துவமனைக்கு இழுத்து சென்ற தங்கை.!

ஆம்புலன்ஸ் மறுக்கப்பட்டதால் உடல்நிலை மோசமடைந்தவரை 4 கி.மீ., தள்ளுவண்டியில் கொண்டு சென்றும், பாதி வழியில் அவர் உயிரிழந்த பரிதாபமான சம்பவம் விழுப்புரம் மாவட்டத்தில் நடந்துள்ளது. இதற்கு எல்லைப் பிரச்னை காரணம் என்று கூறப் படுகிறது.

விழுப்புரம் மாவட்டம் ஒழிந்தியாப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் மல்லிகா. இவர் தமிழக-புதுச்சேரி எல்லையான சுத்துக்கேணி கிராமத்தில் இயங்கி வரும் தனியார் செங்கல் சூளையில் கணவருடன் தங்கி பணியாற்றி வருகிறார்.

ஒழிந்தியாப்பட்டு கிராமத்தில் வசித்து வரும் மல்லிகாவின் தங்கை பவுனு (60), கணவர் சுப்ரமணியத்துடன்(65) மல்லிகாவை சந்திக்க 3 நாட்களுக்கு முன் சென்றுள்ளார். அப்போது சுப்பிரமணியத்திற்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது.

brother died2 - 2025

சுப்ரமணியன் மயக்க நிலைக்கு சென்றதால், புதுச்சேரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆம்புலன்ஸ் கேட்கப்பட்டது. தமிழக பகுதி என்பதால் ஆம்புலன்ஸ் வழங்க புதுச்சேரி அரசு மறுத்துவிட்டது.

இதனால், செங்கல் சூளையில் பயன்படுத்தப்படும் தள்ளுவண்டியில் மருத்துவ மனைக்கு அவரது தங்கை மூலம் அழைத்து செல்லப்பட்டார்.

சுத்துகேணியிலிருந்து சுமார் 4 கி.மீ., தூரத்தில் உள்ள காட்டேக்குப்பம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தள்ளுவண்டியிலேயே மல்லிகா இழுத்து சென்றுள்ளார். வழியில் அவர்களுக்கு யாரும் உதவி செய்ய முன்வரவில்லை.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே சுப்பிரமணி இறந்துவிட்டதாக கூறினர். இறந்தவரின் சடலத்தை சொந்த ஊருக்கு எடுத்து செல்ல, புதுவை காவல்துறையின் உதவியுடன் மாற்று ஏற்பாடு செய்து, சுப்பிரமணி உடலை உறவினர்கள் சொந்த ஊருக்கு எடுத்துச் சென்றனர். இந்தச் சம்பவம் அங்கிருந்தோர் உள்ளத்தை உருக்குவதாக இருந்தது..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories