தெலங்கானாவில் கொடூரம்: பெண் தாசில்தார் எரித்துக் கொலை! ஏன்?

Published:

tahsildar telangana - 2026

நிலம் பதிவு செய்வதில் தாமதம் செய்ததால் பெண் தாசில்தார் அலுவலகத்திலேயே உயிரோடு எரிக்கப்பட்டார்.

தெலங்காணா ரங்காரெட்டி மாவட்டம் அப்துல்லாபூர்மெட் தாசில்தார் விஜயா ரெட்டி கொடூரமாக கொலை செய்யப்பட்டது குறித்து போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

திங்கட்கிழமை இன்று மதியம் சுரேஷ் என்பவர் எம்ஆர்ஓ மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்து விட்டார். தாசில்தார் அங்கேயே உயிரோடு எழுந்து போனார். அவரைக் காப்பாற்ற முயன்ற இருவருக்கும் தீவிர காயங்கள் ஏற்பட்டன.

ஹயத்நகர் மண்டலம் கோரெல்லி கிராமத்தைச் சேர்ந்த சுரேஷுக்கு அதே கிராமத்தில் நிலம் உள்ளது . அதன் ரிஜிஸ்ட்ரேஷன் பற்றி பேசுவதற்கு திங்கள்கிழமை மதியம் ஒன்றரை மணிக்கு எம்ஆர்ஓ ஆபீசுக்குச் சென்றார்.

சற்றைக்கெல்லாம் மதிய உணவு இடைவேளைக்கு செல்லவிருந்த விஜயாரெட்டி சுரேஷை உள்ளே அழைத்துப் பேசினார். சுமார் அரை மணிநேரம் பேசிய சுரேஷ் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். கதவை தாளிட்டுவிட்டு கையோடு எடுத்துச் சென்ற பெட்ரோலை அவர் மீது ஊற்றி தீ பற்ற வைத்தார். தீ அவரையும் பிடித்துக் கொள்ளவே சுரேஷ் கதவைத் திறந்து கொண்டு வெளியே ஓடி வந்தார்.

ALSO READ:  சதுரகிரி கோவிலுக்கு தாணிப்பாறை வழியாக மட்டும் செல்ல வேண்டும்: ஆட்சியர் உத்தரவு!
vijaya 2 - 2026

எம்ஆர்ஓவின் கதறலைக் கேட்ட பிற உத்தியாகிகள் என்ன நடந்தது என்று வினவினார். ஷார்ட் சர்க்யூட்டால் தீ பிடித்ததாக கூறி விட்டு சுரேஷ் ஓடிப்போனார். சில வினாடிகளுக்குள் நெருப்பு பற்றி எரிய விஜயாரெட்டி வெளியில் ஓடி வந்தார் .

அவரை காப்பாற்றுவதற்கு கார் டிரைவரும் மற்றொருவரும் முயற்சித்தாலும் பலன் இல்லாமல் போனது. தீவிரமாக எரிந்து போனதால் எம்ஆர்ஓ அனைவரும் பார்த்திருக்கும் போது உயிரிழந்தார்.

மறுபுறம் குற்றவாளி சிறிது தூரம் ஓடியவர் கீழே விழுந்துவிட்டார். சம்பவம் நடந்த இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் சுரேசை கைது செய்து மருத்துவமனையில் சேர்த்தனர்.

எம்ஆர்ஓ நிலத்தின் ரிஜிஸ்ட்ரேஷனை தாமதப்படுத்தியதால் சுரேஷ் அத்தகைய கொடூரத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது . பாஸ்புக் விவகாரத்தில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் நடந்ததாக தெரிகிறது. குற்றவாளியை சரியாக விசாரித்த பின் முழு விவரமும் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர் .

‘ராச்சகொண்ட’ போலீஸ் கமிஷனர் மகேஷ் பகவத் மற்றும் ஜில்லா கலெக்டர் சம்பவ இடத்தை பரிசீலித்து விவரம் சேகரித்தனர். அமைச்சர் சபீதா ரெட்டி இந்த சம்பவத்தை தீவிரமாக கண்டித்தார்.

ALSO READ:  ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

வருவாய் பணியாளர்கள்’ தாசில்தார் சங்க தலைவர்கள் அலுவலகங்களில் அரசு பணியாளர்களுக்கே பாதுகாப்பு இல்லை என்றால் பொது மக்களின் நிலை என்ன என்று கேள்வி எழுப்பினார்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img