தெலங்கானாவில் கொடூரம்: பெண் தாசில்தார் எரித்துக் கொலை! ஏன்?

tahsildar telangana - 2026

நிலம் பதிவு செய்வதில் தாமதம் செய்ததால் பெண் தாசில்தார் அலுவலகத்திலேயே உயிரோடு எரிக்கப்பட்டார்.

தெலங்காணா ரங்காரெட்டி மாவட்டம் அப்துல்லாபூர்மெட் தாசில்தார் விஜயா ரெட்டி கொடூரமாக கொலை செய்யப்பட்டது குறித்து போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

திங்கட்கிழமை இன்று மதியம் சுரேஷ் என்பவர் எம்ஆர்ஓ மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்து விட்டார். தாசில்தார் அங்கேயே உயிரோடு எழுந்து போனார். அவரைக் காப்பாற்ற முயன்ற இருவருக்கும் தீவிர காயங்கள் ஏற்பட்டன.

ஹயத்நகர் மண்டலம் கோரெல்லி கிராமத்தைச் சேர்ந்த சுரேஷுக்கு அதே கிராமத்தில் நிலம் உள்ளது . அதன் ரிஜிஸ்ட்ரேஷன் பற்றி பேசுவதற்கு திங்கள்கிழமை மதியம் ஒன்றரை மணிக்கு எம்ஆர்ஓ ஆபீசுக்குச் சென்றார்.

சற்றைக்கெல்லாம் மதிய உணவு இடைவேளைக்கு செல்லவிருந்த விஜயாரெட்டி சுரேஷை உள்ளே அழைத்துப் பேசினார். சுமார் அரை மணிநேரம் பேசிய சுரேஷ் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். கதவை தாளிட்டுவிட்டு கையோடு எடுத்துச் சென்ற பெட்ரோலை அவர் மீது ஊற்றி தீ பற்ற வைத்தார். தீ அவரையும் பிடித்துக் கொள்ளவே சுரேஷ் கதவைத் திறந்து கொண்டு வெளியே ஓடி வந்தார்.

ALSO READ:  கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!
vijaya 2 - 2026

எம்ஆர்ஓவின் கதறலைக் கேட்ட பிற உத்தியாகிகள் என்ன நடந்தது என்று வினவினார். ஷார்ட் சர்க்யூட்டால் தீ பிடித்ததாக கூறி விட்டு சுரேஷ் ஓடிப்போனார். சில வினாடிகளுக்குள் நெருப்பு பற்றி எரிய விஜயாரெட்டி வெளியில் ஓடி வந்தார் .

அவரை காப்பாற்றுவதற்கு கார் டிரைவரும் மற்றொருவரும் முயற்சித்தாலும் பலன் இல்லாமல் போனது. தீவிரமாக எரிந்து போனதால் எம்ஆர்ஓ அனைவரும் பார்த்திருக்கும் போது உயிரிழந்தார்.

மறுபுறம் குற்றவாளி சிறிது தூரம் ஓடியவர் கீழே விழுந்துவிட்டார். சம்பவம் நடந்த இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் சுரேசை கைது செய்து மருத்துவமனையில் சேர்த்தனர்.

எம்ஆர்ஓ நிலத்தின் ரிஜிஸ்ட்ரேஷனை தாமதப்படுத்தியதால் சுரேஷ் அத்தகைய கொடூரத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது . பாஸ்புக் விவகாரத்தில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் நடந்ததாக தெரிகிறது. குற்றவாளியை சரியாக விசாரித்த பின் முழு விவரமும் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர் .

‘ராச்சகொண்ட’ போலீஸ் கமிஷனர் மகேஷ் பகவத் மற்றும் ஜில்லா கலெக்டர் சம்பவ இடத்தை பரிசீலித்து விவரம் சேகரித்தனர். அமைச்சர் சபீதா ரெட்டி இந்த சம்பவத்தை தீவிரமாக கண்டித்தார்.

ALSO READ:  முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

வருவாய் பணியாளர்கள்’ தாசில்தார் சங்க தலைவர்கள் அலுவலகங்களில் அரசு பணியாளர்களுக்கே பாதுகாப்பு இல்லை என்றால் பொது மக்களின் நிலை என்ன என்று கேள்வி எழுப்பினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Entertainment News

Popular Categories