இன்று அயோத்தி தீர்ப்பு: நாடு முழுவதும் உச்சக்கட்ட பாதுகாப்பு!

ayodhya sriram mandir - 2026

அயோத்தி வழக்கின் தீர்ப்பு வெளியாவதையொட்டி, நாடு முழுவதும் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அயோத்தி உள்ளிட்ட உத்தரப் பிரதேச மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு 4 ஆயிரம் துணை ராணுவப் படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

அயோத்தியில் பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

ஆளில்லா உளவு விமானங்களும் பயன்படுத்தப்பட உள்ளன. அயோத்தியில் சர்ச்சைக்குரிய பகுதியை தடுப்புகள் போட்டு மூடி துணை ராணுவப் படையினர் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். 

உத்தரப் பிரதேசத்தில் திங்கட்கிழமை வரை பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளன. லக்னோ, மீரட், நொய்டா, அலிகார், அசம்கார், பாலியா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினர்.

ரோந்து மற்றும் பாதுகாப்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. அலிகாரில் இன்று ஒருநாள் மொபைல் போன்களுக்கான இணையசேவை நிறுத்தப்பட்டுள்ளது.

தலைநகர் தில்லியில் போலீசார் தீவிர ரோந்து மற்றும் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப் பட்டிருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். உச்ச நீதிமன்றத்திற்கும் நீதிபதிகளுக்கும் துணை ராணுவ பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. 

மும்பையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நிலைமையை தீவிரமாக கண்காணித்து வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

உத்தரகண்ட் மாநிலத்தில் போலீசார் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். பதற்றம் மிக்க பகுதிகள் கண்டறியப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

ஹரித்துவார், டேராடூன் உள்ளிட்ட புனிதத் தலங்களிலும் நைனிடால் போன்ற சுற்றுலாத் தலங்களிலும் கூடுதலாக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

தில்லி, கர்நாடகா, மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு, தேர்வுகள் தள்ளி வைக்கப் பட்டுள்ளன. ஜம்முவின் 10 மாவட்டங்களில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 29 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை ஐயப்பன் கோயில் ஆராட்டு விழா ஏப்ரல் 1இல்..

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர ஆராட்டு விழா ஏப்ரல்...

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் ஏப் 1இல்..

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கிய...

இந்திய முஸ்லிம்கள் அடைந்த பெரும் குழப்பம்! நடப்பவை என்ன?!

துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா ?

தெற்கு ரயில்வே; ரயில் சேவைகளில் மாற்றம்!

தெற்கு ரயில்வேயின் திருவனந்தபுரம் கோட்டத்தில், இரணியல் மற்றும் நாகர்கோவில் டவுன் நிலையங்களுக்கு இடையிலான இரட்டைப் பாதை பிரிவை பயன்பாட்டிற்குக் கொண்டுவரும் பணிகளுக்காக

Topics

பஞ்சாங்கம் மார்ச் 29 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை ஐயப்பன் கோயில் ஆராட்டு விழா ஏப்ரல் 1இல்..

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர ஆராட்டு விழா ஏப்ரல்...

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் ஏப் 1இல்..

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கிய...

இந்திய முஸ்லிம்கள் அடைந்த பெரும் குழப்பம்! நடப்பவை என்ன?!

துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா ?

தெற்கு ரயில்வே; ரயில் சேவைகளில் மாற்றம்!

தெற்கு ரயில்வேயின் திருவனந்தபுரம் கோட்டத்தில், இரணியல் மற்றும் நாகர்கோவில் டவுன் நிலையங்களுக்கு இடையிலான இரட்டைப் பாதை பிரிவை பயன்பாட்டிற்குக் கொண்டுவரும் பணிகளுக்காக

பஞ்சாங்கம் மார்ச் 28 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!

திருநெல்வேலி - மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் ஜூன் மாதம் வரை நீட்டிப்பு செய்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?

சர்வதேச சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்துள்ளதால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

Entertainment News

Popular Categories