மாயப் பேச்சால் மயக்கி… 27 இளைஞர்களை வலையில் விழ வைத்து பணம் பறித்த கில்லாடி பெண் ‘வக்கீல்’!

Published:

telugu lady lawyer - 2026

ஐந்தாண்டுகளில் 27 இளைஞர்களை வலையில் சிக்க வைத்த பெண் வக்கில் போலீசில் சிக்கினார்.

திருமணமாகாத இளைஞர்களை தனது மயக்கும் பேச்சால் வசப்படுத்தி அவர்களிடம் நட்பாக பழகி வீடியோ எடுத்து அச்சுறுத்தும் கில்லாடி பெண்ணை ஹைதராபாத் போலீசார் கைது செய்தனர்.

முதலில் மயக்குவது, நெருங்கி பழகுவது, சிறிது நாட்களில் என் மீது பலாத்கார முயற்சி செய்தான் என்று பிளாக் மெயில் செய்வது, அவர்கள் மீது பொய் வழக்கு போடுவது… இப்படிச் செய்த பெண் பற்றி போலீசார் ஊடகங்களிடம் இன்று விவரித்தனர்.

‘மலக்பெட்’ பகுதியைச் சேர்ந்த ஷதான் சுல்தானா (27) வழக்கறிஞராக பணி புரிகிறார். இவருக்கு ‘அபிட்ஸ்’3 பகுதியில் உள்ள சிறுபான்மையினர் நலத் துறையில் வேலை செய்துவரும் காண்ட்ராக்டர் ரெக்கார்டு உதவியாளர் ரஹீமோடு 2015ல் பழக்கம் ஏற்பட்டு நட்போடு பழகிய இருவரும் நெருங்கி பழகி வீடியோ எடுத்துக் கொண்டனர்!

பின்னர் அவரை பிளாக்மெயில் செய்து அந்தப் பெண் அச்சுறுத்தியதால் அந்தப் பெண்ணின் வங்கிக் கணக்குக்கு மூணு லட்சம் ரூபாய் செலுத்தினார் ரஹீம். மீண்டும் 5 லட்சம் வேண்டும் என்று அச்சுறுத்தவே ரஹீம் அக்டோபர் 19 அன்று தூக்க மாத்திரையை விழுங்கி தற்கொலைக்கு முயற்சித்தார்.

ALSO READ:  இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

இந்தச் சம்பவம் பற்றிய செய்தி அறிந்த போலீசார் மருத்துவமனைக்கு சென்று ரஹீமிடம் வாக்குமூலம் பதிவு செய்தபோது குற்றவாளி ஷதான் சுல்தானாவின் ’குற்றப் பரம்பரை’ வெளிச்சத்துக்கு வந்தது.

சுல்தானா 2014 முதல் காதல் நாடகம் நடத்தி, மொத்தம் 27 பேரை இதே போல் ஏமாற்றியது தெரிய வந்தது.

இதை அடுத்து அவர்மீது பாதிக்கப் பட்ட அனைவரும் தற்போது புகார் கொடுக்கவே, சுல்தானா மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img