மாயப் பேச்சால் மயக்கி… 27 இளைஞர்களை வலையில் விழ வைத்து பணம் பறித்த கில்லாடி பெண் ‘வக்கீல்’!

telugu lady lawyer - 2026

ஐந்தாண்டுகளில் 27 இளைஞர்களை வலையில் சிக்க வைத்த பெண் வக்கில் போலீசில் சிக்கினார்.

திருமணமாகாத இளைஞர்களை தனது மயக்கும் பேச்சால் வசப்படுத்தி அவர்களிடம் நட்பாக பழகி வீடியோ எடுத்து அச்சுறுத்தும் கில்லாடி பெண்ணை ஹைதராபாத் போலீசார் கைது செய்தனர்.

முதலில் மயக்குவது, நெருங்கி பழகுவது, சிறிது நாட்களில் என் மீது பலாத்கார முயற்சி செய்தான் என்று பிளாக் மெயில் செய்வது, அவர்கள் மீது பொய் வழக்கு போடுவது… இப்படிச் செய்த பெண் பற்றி போலீசார் ஊடகங்களிடம் இன்று விவரித்தனர்.

‘மலக்பெட்’ பகுதியைச் சேர்ந்த ஷதான் சுல்தானா (27) வழக்கறிஞராக பணி புரிகிறார். இவருக்கு ‘அபிட்ஸ்’3 பகுதியில் உள்ள சிறுபான்மையினர் நலத் துறையில் வேலை செய்துவரும் காண்ட்ராக்டர் ரெக்கார்டு உதவியாளர் ரஹீமோடு 2015ல் பழக்கம் ஏற்பட்டு நட்போடு பழகிய இருவரும் நெருங்கி பழகி வீடியோ எடுத்துக் கொண்டனர்!

பின்னர் அவரை பிளாக்மெயில் செய்து அந்தப் பெண் அச்சுறுத்தியதால் அந்தப் பெண்ணின் வங்கிக் கணக்குக்கு மூணு லட்சம் ரூபாய் செலுத்தினார் ரஹீம். மீண்டும் 5 லட்சம் வேண்டும் என்று அச்சுறுத்தவே ரஹீம் அக்டோபர் 19 அன்று தூக்க மாத்திரையை விழுங்கி தற்கொலைக்கு முயற்சித்தார்.

இந்தச் சம்பவம் பற்றிய செய்தி அறிந்த போலீசார் மருத்துவமனைக்கு சென்று ரஹீமிடம் வாக்குமூலம் பதிவு செய்தபோது குற்றவாளி ஷதான் சுல்தானாவின் ’குற்றப் பரம்பரை’ வெளிச்சத்துக்கு வந்தது.

சுல்தானா 2014 முதல் காதல் நாடகம் நடத்தி, மொத்தம் 27 பேரை இதே போல் ஏமாற்றியது தெரிய வந்தது.

இதை அடுத்து அவர்மீது பாதிக்கப் பட்ட அனைவரும் தற்போது புகார் கொடுக்கவே, சுல்தானா மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories