ஐயப்ப பூஜைக்கு பூப் பறிக்க குளத்தில் இறங்கி… சோகம்!

Published:

lotus pond - 2026

விசாகப்பட்டினத்தில் சோகம். சேற்றில் சிக்கி இருவர் மரணம்.

ஐயப்ப பூஜைக்கு தாமரைப் பூ பறிக்க குளத்தில் இறங்கிய மாலை அணிந்தவர்கள் இருவர் சேற்றில் கால்கள் சிக்கி நீரில் மூழ்கி இறந்தனர்.

ஐயப்பனுக்காக விரதம் இருந்து மாலை அணிந்த நரேஷ், கணேஷ் மற்றும் ஒருவர் என மூன்று இளைஞர்கள் சேர்ந்து தாமரை பூ பறிக்க ‘யலமஞ்சலி’ மண்டலம் ‘பெனுமர்ரு’ குளத்தருகில் வந்தனர்.

lotus pond vizhag - 2026

நரேஷும் கணேஷும் குளத்தில் இறங்கினர். சுமார் 15 அடி தூரம் சென்ற பின்னர் அவர்கள் இருவரும் ஒரேயடியாக நீரில் மூழ்கி அலறினர். உள்ளூர்வாசிகள் பதற்றம் அடைந்து, உடனடியாக குளத்தில் இறங்குவதற்குள் அவர்கள் இருவரும் சேற்றில் சிக்கி உயிரிழந்து விட்டனர் என்று கூறப் படுகிறது.

இந்தச் சம்பவம் விசாகப் பட்டினத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img