December 6, 2025, 2:36 PM
29 C
Chennai

அம்மா…! அப்பா எங்களை கொல்லுறார்… கதறிய சிறுமிகள்!

women - 2025

“அம்மா…! அப்பா எங்களை கொல்றார், அம்மா !” பெற்ற குழந்தைகளுக்கு தந்தை செய்த சித்திரவதை குறித்து வெளியான தகவல் பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

மேலும், வீடியோ எடுத்து வெளிநாட்டிலுள்ள மனைவிக்கு அனுப்பி பயமுறுத்தவும் செய்துள்ளார் அந்த நபர். எத்தனை கஷ்டங்கள் எதிர் வந்தாலும் கண்ணை இமை காப்பதுபோல் பிள்ளைகளை காக்கவேண்டிய தந்தையே கடமையை மறந்தார். தீய பழக்கங்களுக்கு அடிமை ஆனார்.

வேலை தேடி வெளிநாடு சென்று அங்கேயே பணிபுரிந்து கொண்டிருக்கும் மனைவி பணம் அனுப்பவில்லை என்று பிள்ளைகளை சித்திரவதை செய்து அந்தக் காட்சிகளை வீடியோ எடுத்து மனைவிக்கு அனுப்பினார் அந்த நபர்.

இந்தக் கொடுமை கிழக்கு கோதாவரி மாவட்டம் நரசாபுரம் மண்டலத்தில் நடந்தது .

girls crying - 2025

‘உல்லம் பர்த்தி எலிஷா’வும் மகாலட்சுமியும் கணவன் மனைவியர். கீர்த்தி (8) , மம்மு (6) இவர்களின் மகள்கள். ஓர் ஆண்டுக்கு முன் மகாலட்சுமி வேலை நிமித்தமாக துபாய் சென்றார். அங்கிருந்து அவர் அனுப்பும் பணத்தைக் கொண்டு எலிஷா தீய பழக்கங்களுக்கு ஆளானார்.

அடிக்கடி பணம் கேட்டு மனைவியை தொந்தரவு செய்யத் தொடங்கினார். அவர் அனுப்பாததால் குழந்தைகளை சித்திரவதை செய்து, “அம்மா! அப்பாவுக்கு பணம் அனுப்பு… இல்லை என்றால் எங்களை கொன்று விடுவார், அம்மா!” என்று பேச வைத்து அவற்றை வாட்ஸ்அப் மூலம் மனைவிக்கு அனுப்பத் தொடங்கினார்.

எலிஷாவோடு கூட அவர் சகோதரியும் குழந்தைகளை கொடுமை செய்தாள். அந்த வீடியோக்களைப் பார்த்த மகாலட்சுமி தவித்துப் போனார். தன் உறவினர்களுக்கு அவற்றை அனுப்பி முறையிட்டார். அவை சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தின.

இதை அடுத்து, நரசாபுரம் டிஎஸ்பி கே. நாகேஸ்வர ராவு தலைமையிலான போலீஸார் எலிஷாவை கைது செய்தனர் .

father molesting girls - 2025

இந்தச் சம்பவம் பற்றி அறிய மாநில மகளிர், குழந்தைகள் நலத் துறை அமைச்சர் ‘தானேடி’ வனிதா செவ்வாயன்று நரசாபுரம் சென்றார். தந்தையின் கைகளால் சித்ரவதைக்கு ஆளான சிறுமிகளை டிஎஸ்பி அலுவலகத்தில் சந்தித்து ஆறுதல் கூறினார் .

தொடர்ந்து, துபாயில் உள்ள மகாலட்சுமியோடு குழந்தைகளை வீடியோ மூலம் பேச வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்தச் சம்பவம் மனித தன்மைக்கு களங்கம்! குழந்தைகளின் தந்தை, அவர் சகோதரி இருவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

சிறுமிகளை ‘தணுக்கு’ வில் உள்ள ‘குழந்தைகள் காப்பகத்தில் சேர்த்து பாதுகாப்பு அளிப்பதாக கூறினார். அவர்களைப் படிக்க வைக்கும் பொறுப்பை அரசாங்கம் ஏற்கும் என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories