December 6, 2025, 4:16 PM
29.4 C
Chennai

மதவெறியால்… மகளுக்கு நரகத்தைக் காட்டிய ‘சாத்தான்’கள்!

religious - 2025

அந்த டைரியைப் படித்த போலீசாருக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி! அப்படி என்ன அந்த டைரியில் எழுதப்பட்டிருந்தது?

பிரேசில் போலீசாருக்கு கிடைத்த ஒரு 11 வயது சிறுமியின் டைரி அவர்களை அதிர்ச்சிக்கு ஆளாக்கியது.

கிழக்கு பிரேசில் ‘உபாடுடா’ வைச் சேர்ந்த ‘பேரோலா பைர்ஸ்’ என்ற சிறுமி அண்மையில் மரணமடைந்தாள்.

அவளுடைய உடலை பரிசோதித்த மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பெரோலா நீண்டகாலமாக உடலளவில் சித்திரவதைக்கு ஆளாகி உள்ளதாக அவர்கள் கண்டறிந்தனர். அவளுடைய உடலில் உணவு கலோரிகள் புரோட்டின் சதவீதம் மிகமிக குறைந்துள்ளதாக கண்டுபிடித்தனர்.

அதனால் பெரோலாவின் தாய் ‘அலைன்’, அவளுடைய இரண்டாவது கணவர் ‘என்ரீ’ ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

இதுகுறித்து விசாரணை செய்ததில் உடல் ஒத்துழைக்காததால் பெரோலா 5 மாதங்களாக பள்ளிக்கூடம்கூட செல்லவில்லை என்பது தெரிந்தது.

அவள் வீட்டை சோதனையிட்ட போது ஒரு அறையின் மூலையில் ஒரு சிறிய பாயும் அதன் மீது இரு ஜோடி உடைகளும் இருப்பதை பார்த்தனர் . அவை பெரோலாவுடையதே என்று போலீசார் கண்டறிந்தனர். அங்கே அவர்களுக்கு ஒரு 300 பக்க டைரி கிடைத்தது.

அதில் அந்த சிறுமி தான் தினமும் அனுபவித்த நரக வேதனையை வர்ணித்துள்ளாள். பெற்றோர் தனக்கு பல நாட்களாக உணவு அளிக்காமல் உடற்பயிற்சி செய்விப்பார்கள் என்று டைரியில் எழுதி உள்ளாள். அதனால் பசியோடு பல இரவுகள் தூங்காமல் கழித்ததாக குறித்துள்ளாள்.

அந்த முன்னூறு பக்கங்களையும் படித்த போலீசார் கண்ணீர் விட்டனர்.

பெரோலாவைப் போலவே நரக வேதனைக்கு ஆளான அவளுடைய எட்டு வயது தம்பியையும் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்தனர்.

பெரோலாவின் மரணத்திற்கு அவள் பெற்றோரே காரணம் என்று வழக்கு பதிவு செய்தனர்.

ஏன் இவ்வாறு நடந்து கொண்டீர்கள் என்று அலைன், என்ரீயை வினவியபோது, “தற்போது உலகம் சரியாக இல்லை. சிறு வயது முதலே நல்லது எது கெட்டது எது என்பதையும் இறைவன் மேல் பயத்தையும் போதிக்க வேண்டும். அவர்களின் ஆன்மாவையே பரிசுத்தம் செய்ய வேண்டும். அதற்கு உபவாசம் ஒன்றுதான் வழி. அதனால்தான் அப்படிச் செய்தோம்” என்று பேற்றினார்கள்.

மதவெறி பிடித்த அவர்களின் பதிலை கேட்ட போலீசார் இவர்களின் மதவெறியால் தான் பதினோரு வயது பெண் நரகம் அனுபவித்து இறந்தாள் என்று கண்டறிந்தனர். அதை அறிந்த உள்ளூர்வாசிகள் வருத்தம் அடைந்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories