அரசின் கால்சென்டருக்கே போன் செய்து… முதல்வர் ஜெகன் பற்றி வத்தி வைத்த தெலுகுதேச தலைவர்!

Published:

jaganmohan - 2026

அரசின் கால் சென்டருக்கே போன் செய்து, தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் முதல்வர் ஜகன் மீது புகார் பதிவு செய்தார்.

ஆந்திரா அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ள கால் சென்டருக்கு போன் செய்து தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் வர்ல ராமையா ஆந்திர முதல்வர் ஜெகன் மீது புகார் அளித்தார்.

ஊழல் புகார்களுக்காக ஆந்திர அரசு 14400 என்ற எண் கொண்ட கால் சென்டர் சேவைக்கு ஏற்பாடு செய்துள்ளது. பொது மக்கள் ஊழல் தொடர்பான புகார்களை இந்த கால் சென்டர் நம்பருக்கு போன் செய்து தெரிவிக்கும்படி ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்தார்.

அந்த கால் சென்டருக்கு தெலுங்கு தேச கட்சி தலைவர் வர்ல ராமையா போன் செய்தார். தந்தையின் அதிகாரத்தை சாக்காகக் கொண்டு ஜெகன் ஆயிரம் கோடிகள் சம்பாதித்துள்ளார் என்று வர்ல ராமையா கால்சென்டர் பிரதிநிதிகளிடம் புகார் செய்தார்.

புகாரை தலைமை செயலகத்திற்கு எடுத்துச் சென்று யாராவது அதிகாரிகளிடம் கொடுக்கும்படி கால் சென்டர் ஊழியர்கள் வர்ல ராமையாவிடம் கூறினர்.

ALSO READ:  இடதுசாரிகளின் இரட்டை வேடம்: தியானமென் சதுக்கமும் ஜன்தர்மந்தரும்!

முதல்வர் ஜகன் அறிவித்த விதமாக, தான் அளித்த புகாரின் மீது 15 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வற்புறுத்தினார்.

தன் மீது ரூபாய் 43 ஆயிரம் கோடி ஊழல் சொத்து இருப்பதாக குற்றச்சாட்டு உள்ள நிலையில் ஊழலை ஒழிப்பேன் என்று ஜெகன் எவ்வாறு கூறுகிறார் என்று அவர் கேள்வி எழுப்பினார்!

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img