December 6, 2025, 4:10 AM
24.9 C
Chennai

ஓட்டு போடலைன்னா, அரசை கேள்வி கேக்குற உரிமை கிடையாது: உச்ச நீதிமன்றம்

புது தில்லி:

தேர்தலில் வாக்களிக்காவிட்டால் அரசை கேள்வி கேட்க எந்த உரிமையும் கிடையாது என உச்ச நீதிமன்றம் அதிரடியாக தெரிவித்துள்ளது.

தில்லியைச் சேர்ந்த ‘இந்தியாவின் குரல்’ என்ற என்ஜிஓ அமைப்பு சார்பில் தனேஷ் லெஷ்தான் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனுத் தாக்கல் செய்திருந்தார். அதில் ‘நாடு முழுவதும் சாலையோரங்களில் காணப்படும் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு மத்திய, மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. எனவே அவற்றை அகற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்’ என கோரியிருந்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், நீதிபதிகள் என்.வி.ரமணா மற்றும் டி.ஓய்.சந்திரசூட் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. மனுவை ஆராய்ந்த நீதிபதிகள், என்ஜிஓ சார்பில் ஆஜரான தனேஷ் லெஷ்தானிடம், தேர்தலில் வாக்களித்தீர்களா? என கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், ‘‘நேர்மையாக சொல்வதென்றால் எனது வாழ்நாளில் ஒருமுறை கூட வாக்களித்தது இல்லை’’ என்றார்.

இதனால் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்த நீதிபதிகள், ‘‘தேர்தலில் வாக்களிக்காத பட்சத்தில் அரசை கேள்வி கேட்கவோ, குற்றம்சாட்டவோ உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை. மேலும் நாடு முழுவதும் உள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்றும்படி உத்தரவிடுவதற்கு நீதிமன்றத்துக்கு போதிய அதிகாரம் இல்லை.

ஒருவேளை அப்படி உத்தரவு பிறப்பித்தாலும், அதை எதிர்த்து ஏராளமான வழக்குகள் குவிந்துவிடும். எனவே இது சாத்தியமற்றது. தவிர அந்தந்த உயர் நீதிமன்றங்களை அணுகாமல் நேரடியாக உச்ச நீதிமன்றத்தின் கவனத்துக்கு இந்தப் பிரச்சினையை கொண்டு வந்திருப்பதன் மூலம் மக்கள் மத்தியில் விளம்பரத்தை தேடிக் கொள்ளத்தானோ என தோன்றுகிறது. ஆகவே, இந்த விவகாரம் தொடர்பாக முதலில் உயர் நீதிமன்றங்களை அணுகி தீர்வைத் தேடிக் கொள்ளுங்கள்’’ என உத்தரவிட்டனர்.

இதேபோல், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 26-ம் தேதி இதே போன்ற பொதுநல மனு ஒன்றை விசாரித்த நீதிபதிகள், ‘‘உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டால் எல்லாமே நடந்து விடுமா? ஒரேயொரு உத்தரவால் நாட்டில் ஊழல் ஒழிந்துவிடுமா? நாடு முழுவதும் ராம ராஜ்யம் மலர்ந்து விடுமா?’’ என அடுக்கடுக் காக கேள்வி எழுப்பி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories