சசிகலாவை முதல்வராக்கவா வாக்களித்தோம்? அதிமுக எம்.எல்.ஏ.,க்களுக்கு காத்திருக்கு சூடு!

சென்னை:

அதிமுக பொதுச் செயலராக ஆன சசிகலாவை, முதல்வராகவும் தேர்ந்தெடுத்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மீது வாக்காளர்கள் கடுங்கோபத்தில் உள்ளனர். சசிகலாவை முதல்வராகத் தேர்ந்தெடுக்க ஒப்புதல் தெரிவித்த அதிமுக எம்.எல்.ஏக்கள் மீது அவர்களது ஆதரவாளர்களும் கடும் அதிருப்தியில் உள்ளனர். சசிகலாவை முதல்வர் ஆக்குவதற்கு ஒன்றும் நாங்கள் உங்களுக்கு வாக்களிக்கவில்லை. அதனால் பதவியை ராஜினாமா செய்யுங்கள் என்று திடீரென எழுந்துள்ள எதிர்ப்பு முழக்கத்தால் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஜெயலலிதா முதல்வர் என்ற காரணத்தால்தான் அதிமுக.,வுக்கு தமிழக மக்கள் வாக்களித்தனர். கிட்டத்தட்ட 32 ஆண்டுகளுக்குப் பின்னர் ஆளும் அதிமுகவையே மீண்டும் அரியாசனத்தில் அமரவைத்து, ஜெயலலிதாவுக்கு ஒரு சாதனைப் பக்கத்தை எழுதி வைத்தனர். ஆனால் உடல்நலக் குறைவால் ஜெயலலிதா காலமாகிவிட்டார். இதையடுத்து முதல்வராக ஏற்கெனவே ஜெயலலிதாவால் முதல்வராக அமர்த்தப் பட்ட ஓ. பன்னீர்செல்வமே இம்முறையும் அமரவைக்கப்பட்டார். இதை தமிழக மக்களும் ஏற்றுக் கொண்டனர்.

அதேநேரத்தில் தொண்டர்களின் விருப்பத்துக்கு எதிராக அதிமுக பொதுச் செயலர் பொறுப்பை சசிகலா கைப்பற்றினார். அத்துடன் பேராசை பிடித்தவராக மக்கள் விருப்பத்துக்கு எதிராக முதல்வர் பதவியில் உட்காரவும் முடிவு செய்திருக்கிறார் சசிகலா. சசிகலாவை அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தங்களது சட்டசபை குழு தலைவராக தேர்வு செய்துள்ளனர். சசிகலா ஓரிருநாட்களில் முதல்வராக பதவியேற்க உள்ளார்.

இந்நிலையில் சசிகலா முதல்வராக நீங்கள் எப்படி ஆதரவு கொடுக்கலாம்? கட்சிப் பதவி உங்கள் கட்சியின் உள்விவகாரம் என்று நாங்கள் கருதினோம். ஆனால், முதல்வர் நாற்காலி என்பது, பொதுமக்களின் விருப்பத்தைப் பொறுத்தது. அவரை எப்படி நீங்கள் முதல்வர் நாற்காலியில் உட்கார வைக்கலாம்? என அதிமுக எம்.எல்.ஏக்கள் மீது பொதுமக்கள் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

சசிகலாவை முதல்வர் ஆக்கத்தான் நாங்கள் உங்களுக்கு வாக்களித்தோமா? எங்கள் வாக்குகளை வாங்கி சசிகலாவை முதல்வர் ஆக்க வேண்டாம்; அதற்கு நீங்கள் அனைவரும் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தலை சந்தியுங்கள் என்று போர்க்கொடி தூக்கியுள்ளனர், அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ஆதரவாளர்கள். இதனால், நெருக்கடியை சமாளிக்க முடியாமல் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

பாலமேடு – வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

மதுரை பாலமேடு பேரூராட்சியில் வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல் ? திமுகவைச் சேர்ந்த தலைவர் துணைத் தலைவர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு:

டம்ளர் மீது நின்று சிலம்பம் சுற்றி சாதனை படைத்த மழலையர் பள்ளி மாணவர்கள்!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 'நோபல் ரெக்கார்ட்' செய்துள்ள இப்பள்ளி, தற்போது தனது இரண்டாவது உலக சாதனையைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது

Entertainment News

Popular Categories