ஆவேசத்தில் ஐதராபாத்! பிரியங்கா குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்க வருகிறார் ஆளுநர் தமிழிசை!

Published:

priyanka case1 - 2026

இன்று சனிக்கிழமை மதியம் 3 மணிக்கு தெலங்காணா கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் பிரியங்காவின் குடும்பத்தினரை பார்ப்பதற்காக அவர்கள் வீட்டிற்கு செல்ல உள்ளார்.

இந்நிலையில்,ஷாத்நகர் போலீஸ் ஸ்டேஷன் அருகில் பரபரப்பு நிலவுகிறது. பிரியங்கா ரெட்டி கொலைக்கு காரணமான குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று மாணவர்களும் பொதுமக்களும் வற்புறுத்தி முழக்கம் எழுப்பினர்.

குற்றவாளிகளை தம்மிடம் ஒப்படைக்கும்படி முழக்கம் எழுப்பிக் கொண்டு போலீஸ் ஸ்டேஷனுக்குள் புக முயன்றனர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு நிகழ்ந்தது.

குற்றவாளிகளை மருத்துவப் பரிசோதனைக்கு அழைத்துச் செல்வதற்கான வழி இல்லாததால் மருத்துவர்களை போலீஸ் ஸ்டேஷனுக்கு வரவழைத்து குற்றவாளிகளுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தினர்.

priyanka case2 - 2026

இன்னும் சற்று நேரத்தில் ஷாத்நகர் நீதிமன்றத்தில் குற்றவாளிகளை ஒப்படைக்க உள்ளனர்.

பிரியங்கா ரெட்டி குடும்பத்தினரிடம் ஆறுதல் தெரிவிப்பதற்கு தெலங்கணா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று மதியம் 3 மணிக்கு அவர்கள் வீட்டுக்கு செல்ல உள்ளார்.

ALSO READ:  ஆப்கானிஸ்தான் அணி உடனான டெஸ்ட்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!

பிரியங்கா கொலையை பெடரேஷன் ஆஃ தெலங்காணா பார் அசோசியேஷன்கள் தீவிரமாக கண்டித்தன. குற்றவாளிக்கு எந்தவித நியாய உதவியும் அளிக்கக்கூடாது என்று மெகபூப் நகர் மாவட்ட பார் அசோசியேஷன் தீர்மானித்துள்ளது. குற்றவாளிகளின் பெயிலுக்காக யாரும் உதவக்கூடாது என்று கேட்டுக்கொண்டுள்ளது.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img