மது கொடுத்து… கொன்று… 27 கி.மீ., லாரியில் எடுத்துச் சென்று எரித்து…! காலை பால்காரன் சொன்ன பிறகே போலீஸுக்கு தெரிந்தது!

hyderabad rape case accusts - 2026

தெலங்கானாவில் எரித்துக் கொல்லப்பட்ட இளம் பெண் கால்நடை மருத்துவர் பிரியங்கா ரெட்டியின் வாயில் மதுவை ஊற்றி கொடுமைப்படுத்தி கொன்று எரித்துள்ளது அவர்களிடம் நடத்தப் பட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

தெலங்கானா மாநிலம் ஷம்ஷாபாத் பகுதியில் கால்நடை மருத்துவரான 26 வயது இளம்பெண் பிரியங்கா, முன்னிரவு வீடு திரும்பும் முன், லாரி டிரைவர் மற்றும் உதவியாளர் என 4 பேர் பாலியல் பலாத்காரம் செய்து, அந்தப் பெண்ணை 27 கி.மீ., தொலைவில் உள்ள பாலத்தின் அடியில் போட்டு தீயிட்டு எரித்துக் கொன்றுள்ளனர்.

இது தொடர்பாக 4 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், 4 பேரில் ஒருவன் பெண்ணின் பைக்கை பஞ்சர் செய்துள்ளான். இரவு 9.15க்கு வீட்டிற்கு புறப்படும் போது பஞ்சர் ஆனதை உணர்ந்த அந்தப் பெண்ணுக்கு உதவுவது போல் 4 பேரும் முன் வந்துள்ளனர்.

ஆனால் அவர்கள் நான்கு பேரும் மது அருந்தி இருந்ததால் அவர்கள் மீது சந்தேகம் கொண்ட அந்தப் பெண், தன் சகோதரியிடம் தொடர்ந்து பேசிக் கொண்டே இருக்குமாறு கூறியுள்ளார். ஆனால் இதைப் பார்த்த ஒருவன், அந்த செல்போனைப் பிடுங்கிக் கொண்டுள்ளான். பிறகு அந்தப் பெண்ணை புதருக்குள் வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்று போனை சுவிட்ச் ஆப் செய்துள்ளனர்.

hyd cops - 2026

அந்தப் பெண் கத்துவது வெளியில் கேட்காமல் இருக்க வாயில் மதுவை ஊற்றி அதன்பின், பலாத்காரம் செய்துள்ளனர். அந்தப் பெண் மயங்கிய நிலையில் லாரியில் ஏற்றி 27 கி.மீ., தொலைவில் உள்ள பாலத்தின் அடியில் போட்டு, நள்ளிரவு 2.30 மணி அளவில் எரித்துக் கொன்றுள்ளனர். .. இது போலீஸாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

அதே நேரம், இந்த விவகாரம் ஒரு பால்காரரின் தகவலின் பேரில்தான் போலீஸாருக்கே தெரியவந்துள்ளது.

காலையில் ஒரு பால்காரர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். பொதுவாக வாகனங்களும் மக்களும் அந்த மேம்பாலத்துக்கு மேலாகவே செல்வது வழக்கம். பாலத்தின் கீழுள்ள பாதை குண்டும் குழியுமாக இருக்கும். ஆனால் அதுதான் குறுக்குவழி.

அதனால் நிறைய மாடுகள் உள்ள பால்காரர் பாலைக் கறந்து கொண்டு காலை 5 மணிக்கு அந்தப் பக்கமாக சென்றிருக்கிறார். அப்போது நெருப்பு எரிவதைப் பார்த்து இருக்கிறார். ஆனால் யாரோ குளிர் காய்வதற்காக நெருப்பு மூட்டியிருக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டு சென்று விட்டாராம். இருட்டாகக்கூட இருந்தது.

அவர், ஏழரை மணிக்கு திரும்பி வரும்போது அங்கே எரிந்தது ஒரு உடல் என்று கண்டுபிடித்து தன் கையில் போன் இல்லாததால் தன் வீட்டுக்குச் சென்று அங்கிருந்து போனை எடுத்து போலீசாருக்கு போன் செய்த பிறகு அவர்கள் அந்த இடத்துக்கு வந்துள்ளனர். தொடர்ந்து அந்த பால்காரரிடம் அவர் கண்டது குறித்து விசாரித்து தகவல் கேட்டுள்ளனர்.

ஒரு நகரத்தில் இவ்வளவுக்கு ஒரு படுகொலை, நடக்கும் நிலையில் போலீஸாரின் விழிப்பு உணர்வு எப்படி உள்ளது என்று இப்போது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப் பட்டு வருகின்றன. குறிப்பாக, பெண்ணின் பெற்றோர் நள்ளிரவே புகார் அளித்தும், அது குறித்து நடவடிக்கை எடுக்காமல், மெத்தனமாக இருந்து, சிசிடிவி காட்சிகளைப் போட்டுப் பார்த்து, மிகவும் அசட்டையாக இருந்துள்ளனர் போலீஸார்.

அந்த நள்ளிரவே ரோந்து வாகனத்தில் எடுத்துக் கொண்டு, புகார் வந்தவுடன் சாலையில் தேடுதல் வேட்டையைத் தொடங்கியிருந்தால், அதிகாலை 2.30க்கு அந்தப் பெண்ணை எரிக்கும் வரை அந்தக் குற்றவாளிகளுக்கு அவகாசம் கொடுக்காமல் இருந்திருக்க முடியும். அந்தப் பெண்ணையும் காப்பாற்றியிருக்கலாம் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories