டிவி சீரியல் பார்த்து கணவன் செய்தது என்ன தெரியுமா? நல்ல பாம்பு ஒன்றை விலைக்கு வாங்கி வந்து… பிறகு?

Published:

tv seriel crime - 2026

டிவி சீரியல் பார்த்த ஒரு கணவன் தன் மனைவியைக் கொல்வதற்கு நூதன திட்டத்தை செயல்படுத்திய சம்பவம் மத்தியப் பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

டிவி சீரியலைப் பார்த்து விட்டு அதே போல் தன் மனைவியைக் கொன்று ஒரு நல்லபாம்பு வாங்கி வந்து அதைக் கொண்டு மனைவியின் உடலைக் கடிக்க வைத்து பாம்புக் கடியால் தன் மனைவி இறந்து விட்டதாக போலீசாரை நம்ப வைப்பதற்கு முயற்சி செய்துள்ளார். இந்த விநோதமான சம்பவம் மத்திய பிரதேஷ் இந்தூர் நகரில் நடந்துள்ளது.

இந்தூர் நகரைச் சேர்ந்த அமிதேஷ் படாரியா (36) முன்னாள் வங்கி மேலாளர். இவன் டிவி சீரியலைப் பார்த்து தன் மனைவியைக் கொல்ல நூதன திட்டம் தீட்டினான். அமிதேஷ் தன் தங்கையோடும் தந்தையோடும் சேர்ந்து மனைவியின் முகத்தில் தலையணையை வைத்து அழுத்தி மூச்சு விட முடியாமல் செய்து கொன்றான்.

ராஜஸ்தானில் இருந்து வாங்கி வந்த நல்ல பாம்பு ஒன்றை முன்னரே வீட்டில் மறைத்து வைத்திருந்தான். அதனை வெளியில் எடுத்து மனைவியின் இறந்த உடலைக் கடிக்க வைத்தான். பின்னர் அந்த நல்ல பாம்பையும் கொன்று மனைவியின் உடல் அருகில் வைத்தான். பாம்புக் கடியால் தன் மனைவி மரணம் அடைந்து விட்டதாக போலீசாரை நம்பச் செய்ய அமிதேஷ் நாடகம் ஆடினான்.

ஆனால் அந்தப் பெண்ணின் உடலை போஸ்ட் மார்ட்டம் செய்த அறிக்கையைக் கொண்டும் அமிதேஷ் போனில் இருந்த போட்டோக்களைக் கொண்டும் அவன் தன் மனைவியைக் கொன்று விட்டு பாம்புக்கடி என்று நாடகம் ஆடுகிறான் என்பதை போலீசார் விசாரணையில் அறிந்து கொண்டனர்.

ALSO READ:  ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

இதை அடுத்து அமிதேஷ், அவன் தங்கை, தந்தை மூவரையும் கைது செய்தனர். மனைவியின் கொலை வழக்குடன், கூடவே நல்லபாம்பைக் கொன்றதற்காகவும் வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அவன் மீது போலீசார் இன்னொரு வழக்கும் பதிவு செய்தனர்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img