மணல் கொள்ளைக்கு துணை போகும் அரசு அதிகாரிகள் மீது குண்டர் சட்டம்!

04 Aug29 Madras High Court - 2026

சென்னை: மணல் கொள்ளைக்கு உடந்தையாக இருக்கும் அரசு அதிகாரிகள் மீது குண்டர் சட்டம் பாயும் என்ற அறிவிப்புடன் சுற்றறிக்கை வெளியிட வேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மணல் கொள்ளைக்கு உடந்தையாக இருக்கும் அரசு அதிகாரிகளை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கும் வகையில், 2 வாரத்தில் சுற்றறிக்கை வெளியிட வேண்டும் என தமிழக அரசுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக ஆறுகளில் மணல் கொள்ளையை தடுக்கக் கோரி தொடர்ந்த வழக்கு, உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ராமதிலகம் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, மணல் கொள்ளையைத் தடுக்கும் வகையிலான சுற்றறிக்கையை அக்டோபர் 3ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யா விட்டால், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை தமிழக அரசு எதிர்கொள்ள நேரிடும் என எச்சரித்தனர்.

அப்போது ஆஜரான குற்றவியல் அரசு வழக்கறிஞர், சுற்றறிக்கை தொடர்பான வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டு, முதலமைச்சரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ஏற்கெனவே சட்டத்தில் உள்ள விதியை அமல் படுத்துவதற்கு எதற்காக நீண்ட நடைமுறையை மேற்கொள்ள வேண்டும் என கேள்வி எழுப்பினர்.

மேலும், குற்றத்திற்கு உடந்தையாக இருப்பதும் குற்றம்தான் என்றும், உடந்தையாக இருப்பவர்களை தண்டிக்காமல் இருக்க முடியாது என்றும் நீதிபதிகள் கூறினர்.

மணல் கொள்ளைக்கு உடந்தையாக இருக்கும் அதிகாரிகளை துறைரீதியாக தண்டிப்பதுடன், அவர்களை குண்டர் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கவும் வேண்டும் என்றும், அதை சுற்றறிக்கையில் தெரிவிக்க வேண்டும் எனக் கூறிய நீதிபதிகள், விசாரணையை அக்டோபர் 3ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்,

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

Topics

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

பஞ்சாங்கம் மே 12 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

“We are all one”, this realization of oneness is attained in the Varg : Atul Limaye

"We are all one", this realization of oneness is attained in the Varg – Atul LimayeJi - Karyakarta Vikas Varg-Dwitiya inaugurated in Nagpur

வெள்ளை அறிக்கை வெளியிடும் முன்… தேர்தல் அறிக்கையைப் பார்க்கவும்!

தமிழ் மக்கள் யாரை மன்னிக்கவில்லை என்றாலும் ஒரு நடிகனை கண்டிப்பாக மன்னிப்பார்கள்.. வாழ்த்துகள்!

Entertainment News

Popular Categories