தாமிரபரணி புஷ்கரம் திருவிழா நடத்த எவ்வித தடையும் விதிக்கவில்லை: மாவட்ட ஆட்சியர் தகவல்!

Published:

2018070511 e1537370276745 - 2026

திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரபரணி புஷ்கரம் திருவிழா நடத்த எவ்வித தடையும் விதிக்கவில்லை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம் தாமிரபரணி ஆற்றில் வரும் 12-10-18 முதல் 23-10-2018 வரை 18 இடங்களில் புஷ்கரம் திருவிழா நடத்த பல்வேறு ஆன்மீக அமைப்புகள் திட்டமிட்டுள்ளது.

இதில் திருநெல்வேலி குறுக்குத்துறை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் படித்துறை மற்றும் பிள்ளையார் கட்டளைக்குச் சொந்தமான நெல்லையப்பர் திருக்கோயில் படித்துறையிலும் புஷ்கரம் திருவிழா நடைபெறும் காலங்களில் வெள்ள பெறுக்கு இருக்கும் என்பதால் அந்த இரு இடங்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட வில்லை. மற்ற அனைத்து இடங்களிலும் நடத்த எவ்வித தடையும் விதிக்கவில்லை என மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தெரிவித்துள்ளார்.

Related articles

Recent articles

spot_img