பிரதமரிடம் புத்தாண்டு பரிசு கேட்டு வாங்கிக் கொண்ட இளைஞர்!

modi 3 - 2026

நாடு முழுவதும் நேற்று புத்தாண்டை கோலாகலமாக மக்கள் கொண்டாடி மகிழ்ந்த நேரத்தில், புத்தாண்டு பரிசாக தன் ட்விட்டர் கணக்கை பின் தொடர வேண்டுமென கேட்ட இளைஞரின் ட்விட்டர் கணக்கை பின் தொடர்ந்து அவரை மகிழ்ச்சியடையச் செய்துள்ளார் பிரதமர் மோடி!

2009-ஆம் ஆண்டு குஜராத் முதல்வராக இருந்த போது நரேந்திர மோடி ட்விட்டர் பக்கத்தில் தனது கணக்கைத் தொடங்கினார்.

தற்போது நாட்டின் பிரதமராக இருக்கும் மோடியின் ட்விட்டர் கணக்கை 52 மில்லியனுக்கும் அதிகமானோர் பின் தொடர்ந்து வருகிறார்கள்.

இதன்மூலம் 111.6 மில்லியன் லட்சம் பேர் பின்தொடரும் அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா மற்றும் 67.4 மில்லியன் பேர் பின்தொடரும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோருக்கு அடுத்தப்படியாக ட்விட்டரில் அதிகம் பேர் பின்தொடரும் பட்டியலில் மோடி 3வது இடத்தை மீண்டும் பெற்றுள்ளார்.

தற்போது இந்திய பிரதமர் மோடி, 2381 பேரின் ட்விட்டர் கணக்குகளை ஃபாலோ செய்து வருகிறார். முக்கிய அரசியல் தலைவர்கள், உலக தலைவர்களை ஃபாலோ செய்யும் பிரதமர் மோடி சில சாமானியர்களையும் ஃபாலோ செய்கிறார்.

ALSO READ:  எரிவாயு சிலிண்டர், பெட்ரோல்; மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: பிரதமர் மோடி பேச்சு!

அதன்படி நேற்று பிரதமர் மோடியை டேக் செய்து ட்வீட் செய்த அங்கிட் துபே என்ற இளைஞர், மதிப்பிற்குரிய பிரதமர் அவர்களுக்கு, நான் உங்கள் தீவிர ரசிகர். புத்தாண்டு பரிசாக நான் ஒன்று கேட்பேன். அதை தருவீர்களா? நீங்கள் என் ட்விட்டர் கணக்கை தயவு செய்து பின் தொடர வேண்டும் என பதிவிட்டார்.

அந்த இளைஞரின் கோரிக்கைக்கு உடனடியாக பதிலளித்த பிரதமர் மோடி, செய்து விட்டேன். சிறப்பான வருடமாக அமைய வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடியின் பதிலால் மகிழ்ச்சியடைந்த அங்கிட், நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். பிரதமர் மோடி ட்விட்டரில் என்னை பின் தொடர்வது இந்த புத்தாண்டின் சிறந்த பரிசு. பிரதமர் மோடிக்கு மனதார நன்றி தெரிவிக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து, பிரதமர் மோடி தனது டுவிட்டர் கணக்கை பின் தொடர்ந்ததை புகைப்படமாக எடுத்த அங்கிட், தனது டுவிட்டர் கணக்கில் அந்த புகைப்படத்தை முகப்பு படமாக மாற்றி தனது மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ளார்.

ALSO READ:  செங்கோட்டை - பெங்களூரு கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

பஞ்சாங்கம் மே 31- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

டெட் மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பில் உடனடி சட்ட நிவாரணம் தேவை!

ஆசிரியர் சமூகத்தின் கவலைகளுக்கு மதிப்பளித்து, அரசாங்கம் இந்த விஷயத்தில் இரக்கத்துடனும் உறுதியுடனும் செயல்படும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

பஞ்சாங்கம் மே 30 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

பஞ்சாங்கம் மே 31- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

டெட் மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பில் உடனடி சட்ட நிவாரணம் தேவை!

ஆசிரியர் சமூகத்தின் கவலைகளுக்கு மதிப்பளித்து, அரசாங்கம் இந்த விஷயத்தில் இரக்கத்துடனும் உறுதியுடனும் செயல்படும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

பஞ்சாங்கம் மே 30 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் மே 29 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ஒரு துரதிர்ஷ்டவசமான பிரதமர்

நரேந்திர மோதிஜி பிரதமராகப் பதவியேற்று 12 வருடங்கள் நிறைவடைவதையொட்டி சிறப்புப் பதிவு:

பஞ்சாங்கம் மே 28 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories