திருப்பதி ஹாதிராம்ஜி மட நிலம் தொடர்பில்… அரசு முக்கிய முடிவு!

Published:

tirumala ramji mutt - 2026

திருப்பதி ஹாத்திராம்ஜி மடத்தின் நிலங்கள் தொடர்பாக ஆந்திர அரசாங்கம் முக்கிய தீர்மானம் எடுத்துள்ளது. மடத்தின் நிலங்களை முறைகேடாக பயன்படுத்துகிறார்கள் என்று குற்றச்சாட்டு எழுந்ததைத் தொடர்ந்து, ஹாத்திராம்ஜி மடத்தின் மஹந்த் அர்ஜுன்தாஸுக்கு பதவிநீக்க உத்தரவைக் கொடுத்துள்ளது அரசு. மேலும், ஸ்ரீகாளஹஸ்தி ஆலய செயல் அலுவலருக்கு கூடுதல் பொறுப்புகள் வழங்கப் பட்டுள்ளன.

திருப்பதியில் உள்ள ஹாத்திராம்ஜி மடத்து நிலங்கள் தொடர்பான விவகாரத்தில் ஆந்திர அரசாங்கம் முக்கியமான முடிவெடுத்துள்ளது. மடத்து நிலங்களை தவறாக பயன்படுத்துகிறார்கள் என்று மடத்தின் மஹந்த் அர்ஜுன் தாஸ் மீது சஸ்பென்ஷன் ஆர்டர் கொடுத்துள்ளது ஆந்திர அரசு.

ஸ்ரீகாளகஸ்தி செயல் அலுவலரை கூடுதல் பொறுப்புகள் எடுத்துக்கொள்ள வேண்டுமென்று ஆணையிட்டுள்ளது. ஹாதிராம்ஜி மட நிலங்களின் அக்கிரமங்களை பற்றி அண்மையில் வருவாய்த்துறை தீவிரமாகக் கண்டித்தது. உப்பரபல்லியில் சுமார் 50க்கு மேற்பட்ட முறைகேடாகக் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை ஜெசிபி இயந்திரங்களைக் கொண்டு ஊழியர்கள் இடித்துத் தள்ளினார்கள்.

tirupathi ramjimutt land - 2026

இந்த வரிசையில் பல கட்சிகள் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அதிகாரிகளின் மீது தீவிரமான அழுத்தம் கூட எடுத்து வந்தார்கள். திருப்பதியில் ஹாதிராம்ஜி மடத்திற்கு நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்கள் உள்ளன.

குறைந்த விலைக்கே கிடைக்கின்றது என்று சிலர் மடத்தின் நிலங்களை வாங்கினார்கள். மடத்தின் நிலங்களில் ரியல் எஸ்டேட் வியாபாரம் நடக்கிறது என்று குற்றச்சாட்டுகள் எழுந்தன.

ALSO READ:  அதிர்ச்சி... அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!
ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img