‘இந்த’ சட்டத்தின் வன்கொடுமையால்… சொந்த வீடுகளை விற்றுவிட்டு… ஊரைக் காலி செய்யும் மக்கள்!

uttar pradesh house - 2026

உ.பி., மாநிலம், கோதுவா கிராமத்தில் மக்கள் தங்கள் வீடுகளை வலுக்கட்டாயமாக விற்று விட்டு வெளியூர்களுக்குச் செல்கின்றனர். இதற்கான காரணமாக அவர்கள் கூறுவது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒருபுறம் தங்களுக்கு அளிக்கப் படும் சலுகைகளால் மிதப்பு ஏறி இருக்கும் சிறுபான்மையினர் அரசியல் கட்சிகளை மிரட்டி கைக்குள் போட்டுக் கொண்டு செய்து வரும் அடாவடிகள் ஒருபுறம் என்றால், இன்னொரு புறம் இந்த கிராம மக்களை வாட்டி வதைக்கிறது, நாட்டின் பழைமையான சட்டம் ஒன்று. அது, எஸ்சி எஸ்டி வன்கொடுமைச் சட்டம் முறைகேடாகக் கையாளப் படுவதுதான்!

இதுபற்றி இந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கூறுகையில், ஒவ்வொரு வருடமும் ஏதாவது பிரச்னைகளில் எஸ்சி எஸ்டி வன்கொடுமைச் சட்டத்தின் அடிப்படையில் பொய்யான புகார்கள் கொடுக்கப் பட்டு, அதன்கீழ் வழக்குகளைப் பதிவு செய்து, எங்களை வாழ விடாமல் செய்கிறார்கள். நாங்கள் இதனால் பெரிதும் சோர்ந்து ஏமாற்றமும் வேதனையும் அடைகிறோம். எனவே நாங்கள் எங்கள் கிராமத்தை விட்டுச் சென்றுவிட எண்ணுகிறோம் என்று உள்ளம் குமுறிக் கூறுகின்றனர்.

இது குறித்த தகவல்கள் சமூகத் தளங்களில் வெளியாகி பலத்த விவாதத்தை ஏற்படுத்தி வருகிறது. வரதட்சிணை மற்றும் குடும்ப வன்முறைச் சட்டத்தைப் போல், எஸ்சி எஸ்டி வன்கொடுமைச் சட்டமும் தவறாகப் பயன்படுத்தப் படுகிறது என்று சிலர் கருத்து தெரிவிக்கின்றனர். எந்த அரசுக்கும் இதில் கைவைக்க தைரியமில்லை, வாக்கு வங்கி அரசியலால் பொதுவானவர்கள் பெரிதும் பாதிக்கப் படுகிறார்கள். அவர்களுக்காகப் பரிந்து பேச இங்கு எவருமே இல்லை என்று தங்களது வேதனையை வெளிப்படுத்துகின்றனர்.

பாஜக., ஆளும் உத்தரப் பிரதேசத்தில் இது போன்ற பிரச்னை ஏற்படுவது யோகி ஆதித்யநாத்துக்கு அவப்பெயர்தான் என்று கூறும் சிலர், அவர்களின் துயர் துடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர். அதே நேரம், இப்போதும் ஜாதியின் பெயரால் பெண்களுக்கு வன்கொடுமைகள் இழைக்கப் படுகின்றன; இவை உத்தரப் பிரதேசத்தில் இன்னமும் ஜாதீயக் கட்டுமானத்தின் பெயரால் நடக்கின்றன; எனவே இது போன்ற சட்டங்கள் இன்னும் தேவைதான் என்றும் பதில் கருத்துகளைப் பதிவு செய்து வருகின்றனர் சிலர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories