அம்மன் கோவிலுக்கு ரூ.10 கோடி கொடுக்கணும்… அப்படியே மசூதிக்கு ரூ.3 கோடி..! கேட்பவர் அக்பருதீன் ஓவைஸி!

Published:

akbaruddin owaisi - 2026

அம்மன் கோவில் வளர்ச்சிக்காக 10 கோடி ரூபாய் கொடுங்கள்… அப்படியே மசூதிக்கு ரூ.3 கோடி கொடுங்கள் என்று தெலங்காணா முதல்வரிடம் அக்பருதீன் ஒவைசி கோரிக்கை மனுவை அளித்திருக்கிறார்.

ஹைதராபாத் பழைய பஸ்தியில் உள்ள லால்தர்வாஜா என்ற இடத்தில் அமைந்துள்ள சிம்மவாகினி மகாகாளி ஆலயத்தில் சீரமைப்பு மற்றும் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்று எம்ஐஎம் கட்சி எம்எல்ஏ அக்பருதீன் ஒவைசி தெலங்காணா முதலமைச்சர் சந்திரசேகர ராவிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தார்.

ரூபாய் 10 கோடி செலவில் ஆலயத்தை விரிவாக்கம் செய்து, வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார். அதேபோல் பழைய பஸ்தியில் உள்ள அப்ஜல்கஞ்ச் மசூதிக்காக ரூ 3 கோடி ஒதுக்க வேண்டும் என்றும் அக்பருதீன் ஓவைஸி முதல்வரிடம் கோரிக்கை விடுத்தார்.

அக்பருதீன் ஓவைஸியின் விண்ணப்பத்திற்கு முதல்வர் அனுகூலமான பதிலை அளித்துள்ளதாகத் தெரிகிறது.

taslima nasrin - 2026

இதனிடையே, எழுத்தாளரும் விமர்சகருமான தஸ்லிமா நஸ்ரின் அவரது இந்தச் செயல் குறித்து கருத்து தெரிவித்த போது, போலீஸார் மட்டும் 15 நிமிடம் விலக்கிக் கொள்ளப்பட்டு இருந்தால், ஹிந்துக்கள் அனைவரையும் கொன்று விடுவேன் என்று கூறியவர், தற்போது மகாகாளி கோயிலின் வளர்ச்சிக்கு ரூ.10 கோடி கேட்கிறாரே… அவர் என்ன இப்போது முகமூடி போட்டுக் கொண்டிருக்கிறாரா அல்லது நல்ல மனிதர் ஆகிவிட்டாரா? என்று விமர்சனம் செய்திருக்கிறார்.

ALSO READ:  அந்த 7 போக்குகள் : 80வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி சொன்ன விஷயம்!
ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img