தமது இல்லத்தை காஞ்சி மடத்தின் வேதபாடசாலைக்காக அளித்த எஸ்.பி.பாலசுப்ரமணியன்.,!

Published:

spb sankara vijayendrar - 2026

பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியன், தமது மூதாதையர் இல்லத்தை காஞ்சி மடத்தின் வேத பாடசாலை அமைக்க, முறைப்படி ஒப்படைத்தார்.

நெல்லூருக்கு வந்திருந்தார் பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியன். நெல்லூரில் திப்பராஜுவாரி தெருவில் அவருக்குச் சொந்தமான வீடு ஒன்று உள்ளது. இதனை வேதபாடசாலை அமைக்க அளிக்க வேண்டும் என்று எண்ணினார் எஸ்.பி.பி.,

இந்த நேரத்தில், நெல்லூருக்கு பல்வேறு நிகழ்ச்சிகளை முன்னிட்டு வந்திருந்தார் காஞ்சி ஸ்ரீ சங்கர மடத்தின் பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள். இந்நிலையில் எஸ்.பி.பாலசுப்பிரமணியமும் நெல்லூருக்கு வந்து, சுவாமிகளை தரிசித்து ஆசி பெற்றார். அப்போது, தமது நெல்லூர் இல்லத்தை காஞ்சி மடத்தின் சார்பில் நிறுவப் படவுள்ள சம்ஸ்க்ருத வேதபாடசாலைக்காக அளிப்பதாகக் கூறி, முறைப்படி ஒப்படைத்தார்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img