அடப்பாவமே! சப்போட்டா பழம் சாப்பிட்டு குழந்தை மரணமாம்!

Published:

sappotta eatten boy died - 2026

சப்போட்டா பழம் தின்று சின்னக் குழந்தை மரணம் அடைந்தது அந்தக் குடும்பத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தெலங்கானா மாநிலம் ஜகித்யால மாவட்டத்தில் இந்த சோக சம்பவம் நேர்ந்தது. ஒரு தாயின் சிறிய கவனக்குறைவினால் கள்ளம் கபடம் அறியாத சிறு குழந்தை உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த அன்னையின் ஒரு சிறு கவனக்குறைவு அன்போடு பெற்று வளர்த்த மகனை பலி வாங்கிவிட்டது. என்ன சாப்பிடுகிறோம், என்ன செய்கிறோம் என்று தெரியாத சிறுவன் சப்போட்டா பழம் சாப்பிட்டு உயிரிழந்தான்.

ஜகித்யால மாவட்டம் மல்லாபூர் கிராமத்தைச் சேர்ந்த அனுபுரம் சுஜாதா, லிங்காகௌட் தம்பதிகளுக்கு இரு மகன்கள். வேலைவாய்ப்புக்காக லிங்காகௌட் சவுதிக்குச் சென்றார். பீடி தொழிலாளியான சுஜாதா தன் இரு பிள்ளைகளையும் வளர்த்துக்கொண்டு இங்கேயே இருந்தார்.

திங்கள் கிழமை அன்று மாலை சுஜாதா குழந்தைகளுக்காக சப்போட்டா பழம் வாங்கி வந்து வீட்டில் வைத்தார். அவற்றை பிள்ளைகளுக்கு தின்னக் கொடுக்கும் போது இரண்டாவது மகன் (4 வயது) சிவகுமாரின் தொண்டையில் சப்போட்டா விதை மாட்டிக்கொண்டது. அதனால் அவன் மூச்சு விட முடியாமல் தொல்லைக்கு ஆளானான்.

இதனால் அச்சமடைந்த சுஜாதா, குடும்பத்தினர் உதவியோடு உடனே மெட்பல்லியிலிருக்கும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கே சிகிச்சை அளித்தும் சிவகுமார் உயிர் பிழைக்கவில்லை. அதனால் அந்த குடும்பத்தினர் பெரும் சோகத்தில் ஆழ்ந்தனர்.

ALSO READ:  யுபிஐ கட்டணத்துக்கு வரியா? பரவும் வதந்தியும் அரசின் விளக்கமும்!
ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img