இனி… குலுக்காதீங்க… கும்பிடுங்க…! இந்திய நமஸ்தேக்கு மாறுங்க! நெதன்யாகு முதல் ‘ஹு’ வரை!

Published:

handshake - 2026

கொரானா வைரஸ் பரவாமல் தடுக்க கை குலுக்குவதை தவிர்க்க வேண்டும்! என்று, உலக சுகாதார நிறுவனம் ‘ஹு’ அறிவுறுத்தியுள்ளது. அது போல், இஸ்ரேல் அதிபர் பெஞ்சமின் நெதன்யாஹுவும் தனது வேண்டுகோளில், இந்தியாவின் இரு கை கூப்பி வரவேற்கும் ‘நமஸ்தே’ முறைக்கு மாற வேண்டும், கைகுலுக்குவதை தவிர்க்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

அதுபோல், ஜெர்மனியின் அதிபர் கலந்து கொண்ட கூட்டத்திலும், கைகுலுக்குவதில் இருந்து விடை பெற்று நமஸ்தே பாணிக்கு மாறுவதைக் குறித்து விளக்கும் வகையில் வீடியோ வைரலாகி வருகிறது.

இது தொடர்பான இன்னும் சில வீடியோக்களில் கைகுலுகுவதைத் தவிர்த்து, காலால் தட்டித் தட்டி, சிநேகத்தை சீனர்கள் சிலர் வெளிப்படுத்துவது போன்ற வீடியோ சமூகத் தளங்களில் வைரலாகி வருகிறது.

இதனிடையே, இத தாண்டா! இந்த தாத்தா அப்போ இருந்து சொல்லிட்டு இருக்கேன்! எல்லாம் உங்க நல்லதுக்குதண்டா சொல்றேன்!என்று குறிப்பிட்டு, கையெடுத்துக் கும்பிடும் முறைக்கு வாங்க வழிக்கு… என்று கருத்துகள் வைரலாகி வருகின்றனன்.

கோரோனா வைரஸ், ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு, கைகுலுக்குவதாலோ, கட்டி அணைப்பதாலோ, ஒருவருடன் ஒருவர் தொட்டு உறவாடி நெருக்கம் கொண்டிருந்தாலோ, ஒருவர் பயன்படுத்திய பொருளை மற்றவர் தொட்டு பயன்படுத்துவதாலோ வைரஸ் பரவுகிறது என்று கூறுகின்றனர்.

ALSO READ:  அண்ணாமலை இளந்தலைமுறையால் ஈர்க்கப்பட்டவர்; பாஜக.,வோ தலைமுறைகளாக பெருவளர்ச்சி கண்டது!

பொதுவாக, மூக்கில் ஒழுகும் நீர், சளி, ஜலதோஷம் இவற்றின் மூலம் தொட்டுத் தொட்டு, அடுத்தவர் வழியே பரவுகிறது. இது காற்றின் மூலம் பரவுவதில்லை! எனவே முகமூடி அணிந்து கொள்வதெல்லாம் தேவையற்றது, முகமூடியை சரி செய்வதற்காக அடிக்கடி கையை முகத்தின் அருகே கொண்டு சென்று, கண்களில் தொட்டு அதன் மூலமும் இந்த வைரஸ் பரவும் என்று குறிப்பிடுகிறார்கள்.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img