ஜோதிராதித்யா சிந்தியா காங்கிரஸில் இருந்து விலகல்! ம.பி.,யில் ஆட்சி மாற்றம்?

scindia kamalnath - 2026

மத்திய பிரதேச காங்கிரஸ் அரசு மீது அதிருப்தியில் இருக்கும் அக்கட்சித் தலைவர்களில் ஒருவரான ஜோதிராதித்யா சிந்தியா, இன்று காலை தில்லியில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். தொடர்ந்து தனது ராஜினாமா கடிதத்தையும் காங்கிரஸ் தலைமைக்கு அனுப்பி வைத்தார்.

காங்கிரஸ் ஆட்சி நடக்கும் மத்தியப் பிரதேச முதல்வர் கமல்நாத் தலைமையிலான அமைச்சரவையில் ஆறு அமைச்சர்கள், 10 எம்.எல்.ஏ.,க்கள் என 16 பேர், மூன்று சிறப்பு விமானம் மூலம், மத்திய பிரதேசத்தின் போபால் நகரிலிருந்து புறப்பட்டு, பெங்களூருக்குச் சென்றனர். அவர்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தனியார் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுனர்.

தற்போது, 24 எம்.எல்.ஏ.,க்கள் அதிருப்தியில் காணாமல் போனதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் சிந்தியா தனது ஆதரவாளர்களுடன் இன்று தில்லி சென்றார். பிரதமர் மோடியின் இல்லத்தில் முக்கிய ஆலோசனை நடத்தினார். அப்போது அமித்ஷாவும் உடன் இருந்தார்.

பேச்சுவார்த்தை முடிந்து வெளியே வந்த சிந்தியா, காங்கிரசில் இருந்தால் நாட்டுக்கும் மக்களுக்கும் எதுவும் செய்ய முடியாது என்றார்.

scindia - 2026

பின்னர், காங்கிரஸ் கட்சி மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக அக்கட்சியில் இருந்து ஜோதிர் ஆதித்யா சிந்தியா இன்று ராஜினாமா செய்து, கடிதத்தை அனுப்பியுள்ளார். அவர், காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு எழுதிய ராஜினாமா கடிதத்தில், காங்கிரசில் இருந்தால் நாட்டுக்கும் மக்களுக்கும் எதுவும் செய்ய முடியாது என்று தெரிவித்துள்ளார்.

ALSO READ:  இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

மேலும் அந்தக் கடிதத்தில், “காங்கிரஸில் இருந்தால் நாட்டுக்கும் எனது மாநில மக்களுக்கும் பணியாற்ற முடியாது. முன்னேறிச் செல்ல வேண்டும் என்றால் புதிய தொடக்கம் அவசியம். இதனால் காங்கிரஸ் கட்சியில் இருந்து பதவி விலகுகிறேன். 18 ஆண்டுகளாக இக்கட்சியில் இருந்திருக்கிறேன். – தற்போது விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஓராண்டாகவே நான் இந்தப் பாதையில் இருந்தேன்” என்று தெரிவித்துள்ளார்.

மத்தியபிரதேசத்தை பொறுத்தவரை மொத்தம் 230 எம்எல்ஏ.,க்கள் உள்ளனர். பெரும்பான்மைக்கு 116 பேர் ஆதரவு தேவை. தற்போது ஆளும் கட்சியில் 114 எம்எல்ஏ.,க்கள் சமாஜ்வாடி, பகுஜன்சமாஜ் கட்சியினர் 2 பேர் என காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது

அதே நேரம், பாஜக.,வில் 107 எம்எல்ஏ.,க்கள் உள்ளனர். தற்போது அதிருப்தியில் உள்ள 24 பேர் பாஜக.,வுக்கு ஆதரவு அளித்தால் இங்கு பாஜக, ஆட்சி அமையும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

ம.பி.யில் 19 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ததால் காங்கிரஸ் ஆட்சி கவிழும் என்று தெரிகிறது. அதே நேரம் ஆட்சியமைக்க 105 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருந்தாலே போதும் என்ற நிலையில் பா.ஜ.க.விடம் 107 எம்.எல்.ஏக்கள் கைவசம் இருப்பதால், ஆட்சியைப் பிடிக்கும் வாய்ப்பு பாஜக,வுக்கு ஏற்பட்டுள்ளது.

ALSO READ:  1 முதல் 9ம் வகுப்பு வரை... முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

*மத்திய பிரதேசத்தில் ஜோதிராதித்ய சிந்தியா ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர் ராஜினாமா செய்த பின் பெங்களூருவில் உள்ள சொகுசு விடுதியில் உள்ளனர். இதற்கிடையில் முதல்வர் கமல்நாத் தனது ஆதரவாளர்களுடன் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 9 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆப்கானிஸ்தான் அணி உடனான டெஸ்ட்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!

இந்தியா – ஆஃப்கானிஸ்தான் டெஸ்ட்முனைவர் கு. வை. பாலசுப்பிரமணியன்இந்திய அணி முதல்...

முழுமையான நன்மைக்கு சனாதன தர்மம்!

அனைவரின் நன்மைக்காகவும் நாட்டின் ஒருமைப்பாட்டிற்காகவும் பாடுபடுபவர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்துக்களே என்பது மறுக்க முடியாத உண்மை. எனவே ஒட்டுமொத்த நாடும் செழிப்படைந்து முழுமையான வளர்ச்சியை நோக்கி முன்னேற வேண்டுமானால்  ஆட்சி நிர்வாகம் சனாதன தர்மத்தின் அடிப்படையில் வழிநடத்தப்பட வேண்டும்.

பஞ்சாங்கம் ஜூன் 8 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலை இளந்தலைமுறையால் ஈர்க்கப்பட்டவர்; பாஜக.,வோ தலைமுறைகளாக பெருவளர்ச்சி கண்டது!

அண்ணாமலையால் இளைய தலைமுறையினர் பலர் ஈர்க்கப்பட்டார்கள் என்பது உண்மை, ஆனால் பல தலைமுறைகளாக சித்தாந்தத்தால் பெரு வளர்ச்சி கண்ட கட்சி பாரதீய ஜனதா என்பதை மறந்துவிடக் கூடாது.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 9 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆப்கானிஸ்தான் அணி உடனான டெஸ்ட்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!

இந்தியா – ஆஃப்கானிஸ்தான் டெஸ்ட்முனைவர் கு. வை. பாலசுப்பிரமணியன்இந்திய அணி முதல்...

முழுமையான நன்மைக்கு சனாதன தர்மம்!

அனைவரின் நன்மைக்காகவும் நாட்டின் ஒருமைப்பாட்டிற்காகவும் பாடுபடுபவர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்துக்களே என்பது மறுக்க முடியாத உண்மை. எனவே ஒட்டுமொத்த நாடும் செழிப்படைந்து முழுமையான வளர்ச்சியை நோக்கி முன்னேற வேண்டுமானால்  ஆட்சி நிர்வாகம் சனாதன தர்மத்தின் அடிப்படையில் வழிநடத்தப்பட வேண்டும்.

பஞ்சாங்கம் ஜூன் 8 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலை இளந்தலைமுறையால் ஈர்க்கப்பட்டவர்; பாஜக.,வோ தலைமுறைகளாக பெருவளர்ச்சி கண்டது!

அண்ணாமலையால் இளைய தலைமுறையினர் பலர் ஈர்க்கப்பட்டார்கள் என்பது உண்மை, ஆனால் பல தலைமுறைகளாக சித்தாந்தத்தால் பெரு வளர்ச்சி கண்ட கட்சி பாரதீய ஜனதா என்பதை மறந்துவிடக் கூடாது.

வெல்டன் அமித்ஷா… வாழ்த்துகள் அண்ணாமலை!

மத்தியில் கூட்டாட்சி; மாநிலத்தில் சுயாட்சி என்ற இந்திய தேசியத்தின் அடிப்படை. பாரதிய ஜனதா கட்சியில் அதை நடைமுறைப்படுத்துவதில் எழுந்த சிக்கலுக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு இது.

பஞ்சாங்கம் ஜூன் 7 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

அண்ணாமலையின் அதிரடி அரசியலா அல்லது அமைதி புரட்சியா?

அண்ணாமலை பாஜகவிலிருந்து விலகிவிட்டார். இப்போது  We The Leaders ( https://wetheleader.org/ ) என்ற 2020 தொடங்கிய ஒரு அமைப்பை அரசியல் கட்சி தொடங்குமுன் ஒரு அமைப்பாக முன்னெடுக்கிறார்.

Entertainment News

Popular Categories