
புது தில்லி:
போருக்கு தயாராகும் பாகிஸ்தான் எல்லையில் போர் விமானங்கள், வீரர்களை குவித்து வருகிறது என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தான் நிலைகளை இந்திய ராணுவம் நேற்று தாக்கி அழித்த வீடியோக்கள் வெளியான நிலையில், எல்லைப் பகுதியில் அதிக ராணுவ வீரர்களை பாகிஸ்தான் இன்று குவித்து வருகிறது. எல்லைப்பகுதியில் விமான தளங்களை தயார் நிலையில் வைத்திருக்கும்படி பாகிஸ்தான் ராணுவத்துக்கு அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.
உலகின் மிக உயரமான போர் முனை என்று கூறப்படும் சியாசின் பகுதியில் பாகிஸ்தானின் போர் விமானங்கள் சுற்றி வர அந்நாட்டு ராணுவம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில்,
எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஆதரிக்கும் பாகிஸ்தான் மீது இந்தியா கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும் என்றும், அது பாகிஸ்தானை திருப்பித் தாக்கும் என்றும் அமெரிக்கா கணித்துள்ளது. அமெரிக்காவின் ராணுவ உளவு ஏஜென்சியின் இயக்குனர் வின்சென்ட் ஸ்டிவர்ட் இதனைக் கூறியுள்ளார்.



