December 6, 2025, 9:00 AM
26.8 C
Chennai

மாடுகளை பலியிட தடை; இறைச்சிக்காக விற்கவும் தடை: மத்திய அரசின் அசத்தல் விதிமுறைகள் முழு விவரம் இதோ!

புது தில்லி:

மிருகவதைக்கு எதிராக புதிய விதிமுறைகளை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.
இதன்படி, நாடு முழுதும் இறைச்சிக்காக மாடுகள், காளை, எருமை, பசுமாடு, ஒட்டகம் ஆகியவற்றை விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

வர்த்தக நோக்கில் மாடுகளை விற்கக் கூடாது. விவசாயிகள் மட்டும் சந்தைகளில் மாடுகளை விற்கலாம்.

cattle trafficking 3 - 2025
இதற்கு வருகிறது ஒரு விடிவு காலம்: இறைச்சிக்கு மாடுகளைக் கொண்டு செல்ல மத்திய அரசு தடை!

கருவுள்ள பசுக்களை வாகனங்களில் அடைத்துக் கொண்டு செல்லக் கூடாது. சந்தைக்கு கால்நடைகள் கொண்டு செல்லப் படும்போது துன்புறுத்தக்கூடாது என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் புதிய அறிவிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. மிருக வதை தடுப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து இந்தப் புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவின் படி,
இறைச்சிக்காக மாடுகளை விற்கக் கூடாது. சந்தைகளில் விவசாயத் தேவைகளுக்காக மட்டுமே மாடுகளை விற்கவோ, வாங்கவோ செய்யலாம்.

கசாப்புக் கடைகள், இறைச்சி தேவை கருதி பசு, ஒட்டகம், காளை, எருமை மாடுகளை வாங்கவோ, விற்கவோ கூடாது.

வயதில் குறைந்த கால்நடைகளை சந்தைக்குக் கொண்டுவரக் கூடாது. இவற்றை சந்தைக்குக் கொண்டு வருவோர் அதன் உரிமையாளர் கையெழுத்துடன் கூடிய ஒப்புதலுடன் வர வேண்டும். விலங்கின் உரிமையாளர் முகவரி, போட்டோ அடையாள அட்டை நகல் ஆகியவை அவசியம்.

கால்நடையின் அடையாளங்களை தெரியப்படுத்த வேண்டும்
இறைச்சித் தேவைக்காக கால்நடை சந்தைக்குக் கொண்டுவரப்படவில்லை என உறுதிப்படுத்த வேண்டும்.

கால்நடையை வாங்குபவரின் அடையாள அட்டை நகல், முகவரி உள்ளிட்ட விவரம் கொடுக்கப்பட வேண்டும்.

விவசாயத் தேவைக்காகவே கால்நடை வாங்கப்படுகிறது என்ற தகவலை உறுதி செய்யத் தேவைப்படும் ஆதாரங்களைப் பெறவேண்டும்

கால்நடையை வாங்குவோர் அடுத்த 6 மாத காலத்திற்குள் அதை விற்பனை செய்யமாட்டேன் என்று உறுதியளிக்க வேண்டும். அடுத்த ஆறுமாத காலத்துக்கு அந்த ஆவணங்களைப் பராமரிக்க வேண்டும். சோதனை செய்யும் அதிகாரியிடம் இந்த ஆவணங்களை தேவைப்படும் போது காட்ட வேண்டும்.

கால்நடையை வாங்கியவர் அதை இறைச்சிக்காக கசாப்புக்கடைக்கு விற்பனை செய்யக் கூடாது. மாநில அரசின் கால்நடை பாதுகாப்பு சட்டங்களை மதித்து நடக்க வேண்டும்.

மதம் தொடர்பான விழாக்களில் இந்தக் கால்நடைகளை (மாடு, எருமை, ஒட்டகம், காளை) பலியிடக்கூடாது.

மாநில அரசின் சட்ட விதிமுறைகளுக்கு அப்பாற்பட்டு வேறு மாநிலங்களுக்கு இந்தக் கால்நடைகளை விற்பனை செய்யக் கூடாது.

கால்நடை சந்தையில் நடைபெறும் விற்பனையின்போது அதுகுறித்து 5 நகல்கள் எடுத்து வைக்கப்பட வேண்டும்.
ஒன்று விற்பனையாளரிடமும், இரண்டாவது வாங்கியவரிடமும், 3வது நகல் வாங்கியவர் வாழும் தாலுகா அலுவலகம், 4வது நகல் மாவட்ட தலைமை கால்நடை அலுவலர், 5வது நகல் கால்நடை சந்தை கமிட்டியிடம் என ஐந்து நகல்கள் இருக்க வேண்டும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories