கொரோனா வந்தவங்க எல்லாரும் சாகணும்னு ஓவைஸி நினைக்கிறாரு…

Published:

IMG 20200416 WA0001 - 2026

அவர்கள் உண்மையாகவே இறந்து போக வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்களா? ஓவைசிக்கு கிஷன் ரெட்டி கேள்வி.

கொரோனாவை மதத்தை கவனத்தில் கொண்டு பார்க்க கூடாது என்றும் அவர்களை அவமானப்படுத்த வேண்டாம் என்றும் கிஷண் ரெட்டி கூறினார் .

நோய் தொற்று உள்ளவர்களைத் தூண்டுவதற்கு முயற்சிக்க வேண்டாம் என்றும் கொரோனா நோயால் இறந்தவர்களை அமர வீரர்கள் என்றும் அல்லாஹ் அருகில் சென்றவர்கள் என்றும் கூறிய விமர்சனத்திற்கு அர்த்தம் என்ன என்றும் கேள்வி கேட்டார்.

எம்ஐஎம் எம்பி அஸதுத்தீன் ஒவைசி பேசிய கருத்துக்கள் குறித்து மத்திய அமைச்சர் ஜி கிஷண் ரெட்டி வினா எழுப்பினார்.

கொரோனாவால் மரணித்தவர்கள் அனைவரும் தியாக வீரர்கள் என்று ஒவைசி கூறிய வியாக்கியானங்களை குறித்து… அமர வீரர்கள் என்று கூறுகிறார்கள் என்றால் கொரோனா வந்தவர்கள் அனைவரும் இறக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறாரா என்று கிஷண் ரெட்டி கேள்வி கேட்டார்.

சனிக்கிழமை டெல்லியில் கிஷண் ரெட்டி செய்தியாளர்களிடம் பேசினார்.

ALSO READ:  உங்களால் இந்த தேசத்துக்கு என்ன ஆதாயம் ஏற்படும் என்பதை சிந்தியுங்கள்!

நாட்டில் தற்போது அதிகமாகிவரும் கொரோனா கேசுகள் எல்லாம் மர்கஜ் மூலம் பரவியவையே என்று கூறினார்.

கொரோனாவை மதக் கண்ணோட்டத்தோடு பார்க்கக் கூடாது என்றும் அவர்களை அவமதிக்க வேண்டாம் என்றும் கிஷண் ரெட்டி தெரிவித்தார். ஒவைசி தூண்டி விட முயற்சி செய்ய வேண்டாம் என்றும் கொரோனாவால் இறந்தவர்களை அமர வீரர்கள், அல்லாஹ்விடம் சென்றார்கள் என்று அவர் கூறியதன் பொருள் என்ன என்று வினவினார். அதாவது அவர்கள் அனைவரும் இறக்க வேண்டும் என்பதை மறைமுகமாகக் கூறுகிறாரா என்று கேள்வி கேட்டார்.

தற்போது நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் இரண்டாவது கட்டத்தில் மட்டுமே இருக்கிறது என்று கிஷண்ரெட்டி விவரித்தார். நம் நாட்டு தட்பவெப்ப சூழ்நிலைகள், வாழ்க்கை வழிமுறைகளின் காரணமாக 28 அல்லது 30 நாட்களுக்குப் பிறகு கூட நோய் அறிகுறி வெளியில் தெரியாமல் வந்தவர்கள் உள்ளார்கள் என்று கிஷண்ரெட்டி கூறினார். சிலர் இறக்கும்வரை நோய் அடையாளம் தெரியாதவர்கள் கூட உள்ளார்கள் என்று கூறினார்.

ALSO READ:  ஆப்கானிஸ்தான் அணி உடனான டெஸ்ட்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!
ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img