அவர்கள் உண்மையாகவே இறந்து போக வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்களா? ஓவைசிக்கு கிஷன் ரெட்டி கேள்வி.
கொரோனாவை மதத்தை கவனத்தில் கொண்டு பார்க்க கூடாது என்றும் அவர்களை அவமானப்படுத்த வேண்டாம் என்றும் கிஷண் ரெட்டி கூறினார் .
நோய் தொற்று உள்ளவர்களைத் தூண்டுவதற்கு முயற்சிக்க வேண்டாம் என்றும் கொரோனா நோயால் இறந்தவர்களை அமர வீரர்கள் என்றும் அல்லாஹ் அருகில் சென்றவர்கள் என்றும் கூறிய விமர்சனத்திற்கு அர்த்தம் என்ன என்றும் கேள்வி கேட்டார்.
எம்ஐஎம் எம்பி அஸதுத்தீன் ஒவைசி பேசிய கருத்துக்கள் குறித்து மத்திய அமைச்சர் ஜி கிஷண் ரெட்டி வினா எழுப்பினார்.
கொரோனாவால் மரணித்தவர்கள் அனைவரும் தியாக வீரர்கள் என்று ஒவைசி கூறிய வியாக்கியானங்களை குறித்து… அமர வீரர்கள் என்று கூறுகிறார்கள் என்றால் கொரோனா வந்தவர்கள் அனைவரும் இறக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறாரா என்று கிஷண் ரெட்டி கேள்வி கேட்டார்.
சனிக்கிழமை டெல்லியில் கிஷண் ரெட்டி செய்தியாளர்களிடம் பேசினார்.
நாட்டில் தற்போது அதிகமாகிவரும் கொரோனா கேசுகள் எல்லாம் மர்கஜ் மூலம் பரவியவையே என்று கூறினார்.
கொரோனாவை மதக் கண்ணோட்டத்தோடு பார்க்கக் கூடாது என்றும் அவர்களை அவமதிக்க வேண்டாம் என்றும் கிஷண் ரெட்டி தெரிவித்தார். ஒவைசி தூண்டி விட முயற்சி செய்ய வேண்டாம் என்றும் கொரோனாவால் இறந்தவர்களை அமர வீரர்கள், அல்லாஹ்விடம் சென்றார்கள் என்று அவர் கூறியதன் பொருள் என்ன என்று வினவினார். அதாவது அவர்கள் அனைவரும் இறக்க வேண்டும் என்பதை மறைமுகமாகக் கூறுகிறாரா என்று கேள்வி கேட்டார்.
தற்போது நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் இரண்டாவது கட்டத்தில் மட்டுமே இருக்கிறது என்று கிஷண்ரெட்டி விவரித்தார். நம் நாட்டு தட்பவெப்ப சூழ்நிலைகள், வாழ்க்கை வழிமுறைகளின் காரணமாக 28 அல்லது 30 நாட்களுக்குப் பிறகு கூட நோய் அறிகுறி வெளியில் தெரியாமல் வந்தவர்கள் உள்ளார்கள் என்று கிஷண்ரெட்டி கூறினார். சிலர் இறக்கும்வரை நோய் அடையாளம் தெரியாதவர்கள் கூட உள்ளார்கள் என்று கூறினார்.