சென்னையில் சிருங்கேரி மடத்தின் சார்பில் 4 ஆயிரம் பேருக்கு நாள்தோறும் அன்னதானம்!

sringeri mutt chennai

நாடு முழுதும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், பொதுமக்கள் பலர் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு சேவை அமைப்புகள் அன்னதானம் உள்ளிட்ட உதவிகளைச் செய்து வருகின்றனர்.

சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம் சார்பாக சென்னையில் தினமும் 4 ஆயிரம் பேருக்கு மேல் அன்னதானம் அளிக்கப்பட்டு வருகிறது. கொரோனா நோய்த் தாக்குதல் குறித்த செய்தி வெளியானது முதல், சிருங்கேரி ஸ்ரீசாரதா பீடத்தின் மஹா சன்னிதானம் ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகளும், சன்னிதானம் ஸ்ரீ விதுசேகர பாரதீ ஸ்வாமிகளும் நாட்டில் உள்ள சிருங்கேரி மடங்களின் சீடர்களுக்கு நலிவுற்று உள்ள ஏழை மக்களுக்கு இனம் மதம் ஜாதி வித்தியாசம் பார்க்காமல் ஒரு வேளையாவது அன்னதானம் வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்கள். இது குறித்து நாடெங்கிலும் உள்ள கிளை மடங்களின் வழியே அந்த அந்தப் பகுதிகளில் உதவிப் பணிகளில் ஈடுபட சிருங்கேரி மடத்தின் தலைமை நிர்வாகி கௌரிசங்கர் வழிகாட்டினார்.

ALSO READ:  நல்ல வாய்ப்பை வீணடித்து விட்டார்கள் இண்டி கூட்டணியினர்!

அதன்படி சென்னை சிருங்கேரி பாரதீ வித்யாஸ்ரமத்தின் தலைவரும், அமால்கமேஷன் லிமிடெட் தலைவருமான ஏ.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் அறிவுரைப்படி, பாரதீ வித்யாஸ்ரமத்தின் செயலாளர் ஜே.எஸ்.பத்மநாபன் மேற்பார்வையில் ஊரடங்கு காரணமாக அவதிக்கு உள்ளாகி இருக்கும் சாலையோர வாசிகள் தொழிலாளர்கள், காவல் துறையினர், மாநகராட்சி ஊழியர்கள், குடிநீர் வாரிய ஊழியர்கள், மீனவர்கள், துப்புரவு தொழிலாளர்கள் போன்ற 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு சுகாதாரமான முறையில் அரசின் விதி முறைப்படி அன்னதானம் தயாரிக்கப்பட்டு, குடிநீரும் வழங்கப்பட்டு வருகிறது

sringeri mutt chennai1

மயிலாப்பூரில் அந்தத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நட்ராஜ் மூலம் மயிலாப்பூர் பகுதியில் உள்ள 60க்கும் மேற்பட்ட குடிசைவாழ் பகுதி மக்களுக்கும் மற்றும் ஆவடி சத்சங்கம் மூலம் கண்பார்வையற்ற 500 பேருக்கும் மேல் உணவு வழங்கப்படுகிறது

இந்த சேவையானது ஊரடங்கு அறிவித்த நாள் முதல் செயல்பட்டு வருகிறது என்றும், இதற்காக அதிக அளவில் தன்னார்வலர்கள் பொருள் உதவியும் பண உதவியும் செய்து வருகிறார்கள் என்றும் இந்த அன்னதான குழுவின் ஒருங்கிணைப்பாளர் தர்மசங்கர ஐயர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.

ALSO READ:  தேர்தலில் வாக்களிக்க... சிறப்பு ரயில்கள் இயக்கம்; விவரம் இதோ!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 18 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 18 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

Entertainment News

Popular Categories