அம்மாடியோ… எத்தன பாம்புகள்… அதுவும் வீட்டு சுவர்ல இருந்து…? எப்படித்தான் வாழ்ந்தாங்களோ?!

Published:

snakes in house well
snakes in house well

அம்மாடியோ…! அந்த வீட்டிலிருந்து எத்தனை பாம்புகள்…! ஓ.. அவர்கள் என்ன பார்த்தார்கள் தெரியுமா? வீட்டுச் சுவரில் இருந்து வெளிவந்த 63 பெரிய பெரிய பாம்புகள். கிராமத்தார் அடித்துக் கொன்றனர். அங்கேயே நூற்றுக்கும் அதிகமான பாம்பு முட்டைகள் தென்பட்டதால் அவற்றையும் அழித்தனர்.

சாதாரணமாக நமக்கு எப்போதோ ஒருமுறை பாம்பு கண்ணில் படும். எங்காவது வீட்டிற்குள் பாம்பு நுழைந்தாலே பயத்தால் இறந்து போவார்கள் மக்கள். ஆனால் அப்படி இருக்கையில் ஒரு வீட்டில் ஒரேடியாக 63 பாம்புகள் வெளிப்பட்டன. அதனால் வீட்டில் இருந்தவர்கள் மட்டுமல்ல. ஊர் மொத்தமும் பயத்தால் நடுங்கியது.

இந்த சம்பவம் காமாரெட்டி மாவட்டத்தில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

காமாரெட்டி மாவட்டம் பிக்கனூரு மண்டலம் இசன்னபல்லி கிராமத்தில் கும்மரி பூமய்யா என்பவர் வெள்ளிக்கிழமை இரவு தன் குடும்பத்தாரோடு சேர்ந்து வீட்டில் டிவி பார்த்துக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் அவர் வீட்டுச் சுவரில் ஒரு சிறு துவாரத்திலிருந்து ஒரு பாம்பு வெளி வந்தது.

அதனை கவனித்த குடும்பத்தார் ஓட்டமாக ஓடி அண்டை அயலாரை அழைத்தனர். அவர்கள் வந்து அந்த சுவரையே தோண்டியதில் அங்கிருந்து பாம்புகள் கும்பல் கும்பலாக வெளிவந்தன. அதனால் ஒரேடியாக அவர்கள் அனைவரும் பயத்தால் நடுக்கம் எடுத்தனர். உடனே எச்சரிக்கை அடைந்து 63 பாம்புகளையும் கொன்று குவித்தனர். அதோடுகூட நூற்றுக்கும் மேலாக முட்டைகளும் தென்பட்டதால் அவற்றையும் அழைத்தனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு நிலவியது.

ALSO READ:  சாவர்க்கரும் ஜனநாயகமும்
snakes in house1
snakes in house1

சில நாட்களுக்கு முன்பு மேதக் மாவட்டம் சின்ன சங்கரன் பேட்டை மண்டலம் கவலபல்லி கிராமத்தில் கொங்க லச்சல், அவர் மனைவி சொரூபாவோடு வசித்து வருகையில் வீட்டில் இருந்த சிமெண்ட் பலகைகளை நகர்த்தியபோது 50 க்கும் அதிகமாக பாம்பு குட்டிகள் வெளிவந்த செய்தி பத்திரிகைகளில் வெளிவந்தது. இந்த சம்பவம் நடைபெற்ற சிறிது நாட்களிலேயே காமாரெட்டி மாவட்டத்தில் 67 பாம்புக் குட்டிகள் வெளிவந்தன. இதனால் மக்கள் வீடுகளில் இருப்பதற்குக் கூட பயப்படுகின்றனர்.

புதிதாக அதே மாவட்டத்தில் சுவரில் இருந்த சிறிய துவாரத்திலிருந்து பாம்புக்குட்டி அல்ல… பெரிய பாம்பே வெளிவந்ததை பார்த்த வீட்டார் பயந்து நடுங்கி வெளியில் ஓட்டம் எடுத்தனர். அவர்களின் கூச்சலை கேட்டு அந்தப் பாம்பு மீண்டும் அதே துவாரத்திற்குள் நுழைந்துவிட்டது. அந்தப் பாம்பு மீண்டும் எப்போது வேண்டுமானாலும் வெளிவரும்… தம்மை கடித்துவிடும் என்று அஞ்சிய கும்மரி பூமய்யா அண்டை அயலாரின் உதவியோடு சுவரை இடித்தபோது 63 பாம்புகளும் நூற்றுக்கும் அதிகமான முட்டைகளும் வெளிவந்தன.

ALSO READ:  கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

ஆனால் வெயில் காலமானதால் பாம்புகள் எல்லாம் வீட்டைத் தேடி வருகின்றன என்று மக்கள் அச்சம் அடைகின்றனர்

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img