இந்தியா -பாக்., போட்டியும், உருவான சர்ச்சைகளும்!

cricketers-indian

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடந்து வருகிறது. இந்தியா – பாகிஸ்தானுக்கு இடையில் நடந்த சாம்பியன்ஸ் ட்ராபி போட்டியில், பாகிஸ்தான் படுதோல்வி அடைந்தது. இந்திய அணி 124 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதை இந்திய ரசிகர்கள் கொண்டாடினர். பாகிஸ்தான் ரசிகர்கள் அணியை திட்டித் தீர்த்தனர். பாகிஸ்தான் அணியின் செயல்பாடுகளை சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். பாகிஸ்தானில் பல இடங்களில் இந்தப் போட்டியைக் காண சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. போட்டியைக் கண்டு கொண்டிருந்த ரசிகர்கள், பெரும் டென்ஷன் அடைந்தனர். அதுவும், பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்ததும் விரக்தியின் உச்சத்திற்கே சென்ற அவர்கள், பல இடங்களில் டிவி.,க்களை அடித்து உடைத்தனர்.

ரசிகர்கள் மட்டுமின்றி, அந்நாட்டின் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் தங்கள் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். டுவிட்டரில் தொடர்ச்சியாக கருத்துகளை பதிவிட்ட இம்ரான் கான், அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்தை சரமாரியாக சாடினார். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் மாற்றம் கொண்டுவரவில்லை என்றால் இந்தியா- பாகிஸ்தான் இடையிலான இடைவெளி மேலும் நீடிக்கும் என குறிப்பிட்டார். மேலும், தோல்வியும், வெற்றியும் விளையாட்டின் அங்கம் என ஒரு விளையாட்டு வீரரான எனக்கும் தெரியும். ஆனால் பாகிஸ்தான் எந்த ஒரு நெருக்கடியும் கொடுக்காமல் இந்தியாவால் தொடர்ச்சியாக வீழ்த்தப்பட்டு வருவது பெரும் வலியைத் தருகிறது என தெரிவித்துள்ளார்.

இந்தத் தோல்விக்குப் பின் பாகிஸ்தான் அணியின் ஆட்டம் குறித்து சரமாரியாக விமர்சித்துள்ளார் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி. இது குறித்து கருத்து தெரிவித்த அப்ரிடி, ‘இந்தியா – பாகிஸ்தான் இடையில் ஒரு போட்டி நடக்கிறது என்றால், நம்மை அறியாமல் ஒரு ஆர்வம் தொற்றிக் கொள்ளும். ஆனால் எதிர்பார்ப்புகளைத் தகர்த்தெறிவது போல்தான் போட்டி அமைந்தது. ஒரு பாகிஸ்தான் ஆதரவாளராக இந்தப் போட்டியைப் பார்ப்பதற்கு மிகவும் கடினமாக இருந்தது. இந்தியா முதலிலிருந்தே போட்டியை வெல்வது போல்தான் ஆடியது. கடைசி வரையிலும் அதை அப்படியே தக்கவைத்துக் கொண்டது. என்று கூறியுள்ளார்.

இதனிடையே, பாகிஸ்தானுடன் ராணுவ உறவுகள் மோசமடைந்து வரும் நிலையில் இப்படி ஒரு போட்டி தேவையா என்று கேள்வி எழுப்பினர் பலரும். இந்திய ராணுவம், இனி இந்திய கிரிக்கெட்டர்களுக்கு மரியாதை அளித்து, அவர்களின் உடையை அணிவித்து அழகு பார்க்கக் கூடாது என்ற கோரிக்கை எழுந்தது. இதனை ராணுவம் பரிசீலிக்கிறது என்று சிலர் டிவிட்டரில் கூறியிருந்தனர்.

 

ALSO READ:  பாஜக.,விலிருந்து விலகி, பழைய இயக்கத்தை புதுப்பித்தார் அண்ணாமலை!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

Entertainment News

Popular Categories