ஊரடங்கு: இந்தியாவில் மட்டும் 2 கோடி குழந்தைகள் பிறக்க வாய்ப்பு! ஆய்வின் தகவல்!

baby

இந்தியாவில் இந்த ஆண்டு இறுதிக்குள் சுமார் 2 கோடி குழந்தைகள் பிறக்கும் என மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், யூனிசெஃப் அமைப்பு எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

கோவிட்-19 என்ற கொரோனா வைரஸ் நோய் ஒரு தொற்று நோயாக அறிவிக்கப்பட்ட கடந்த மார்ச் 11 முதல் டிசம்பர் 16ஆம் தேதிக்குள் இந்தப் பிறப்பு எண்ணிக்கை கணக்கிடப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் மற்றும் ஊரடங்கு காரணமாக நாடு முழுவதும் முடங்கிக் கிடக்கும் நிலையில், கர்ப்பிணிகள் பிறக்கும் குழந்தைகளின் உடல்நலம் குறித்து ஐ.நா. குழந்தைகள் அமைப்பான யூனிசெஃப் கவலை தெரிவித்துள்ளது.

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதில் பெரும்பாலான மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களின் முழு கவனமும் இருப்பது இதற்கு ஒரு காரணமாகும்.

மேலும், மருத்துவமனைகளில் உள்ள உபகரணங்களும் கொரோனா நோயாளிகளுக்காகப் பயன்படுத்தப்பட்டு வருவதால், கர்ப்பிணிகள் மற்றும் பிறக்கும் குழந்தைகளுக்கான மருத்துவ உபகரணங்களின் அவசியம் கேள்விக்குறியாக உள்ளது.

இந்தியாவில் மட்டுமல்ல, அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த & வசதியான நாடுகளில் கூட இந்தப் பிரச்சனை உள்ளது.

வரும் 10ஆம் தேதி அன்னையர் தினம் கொண்டாடவுள்ள நிலையில், புதிதாகப் பிறக்கும் 20 கோடி இந்தியக் குழந்தைகளின் தாய்மார்கள் முழு கவனத்துடன் தங்கள் குழந்தைகளைப் பராமரிக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.

இந்த மார்ச் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில், உலகிலேயே இந்தியாவில்தான் அதிக அளவு குழந்தைகள் பிறக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த 9 மாதங்களில் சீனாவில் 1.35 கோடி குழந்தைகளும், நைஜீரியாவில் 64 லட்சம் குழந்தைகளும், பாகிஸ்தானில் 50 லட்சம் குழந்தைகளும், இந்தோனேசியாவில் 40 லட்சம் குழந்தைகளும் பிறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

Topics

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

Entertainment News

Popular Categories