April 21, 2025, 5:22 PM
34.3 C
Chennai

ரயில் சேவையை ஜூன் 30 வரை ரத்து செய்ய ரயில்வே அமைச்சகம் முடிவு!

kolkatta train
kolkatta train

நாடு முழுவதும் ரயில்வே நேர அட்டவணையில் உள்ளபடி இயங்கும் ரயில்கள் அனைத்தையும் ஜூன் 30ஆம் தேதி வரை ரத்து செய்ய ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு மேலும் நீட்டிக்கப் பட்டுள்ளது. தொடர்ந்து 4 வது லாக்டவுன் அமல்படுத்தப் படும் என்று பிரதமர் மோடி அறிவித்திருக்கும் நிலையில், நாடு முழுவதும் இயங்கி வந்த 3,500 முன்பதிவு ரயில்கள், 4,600 முன்பதிவில்லா ரயில்கள், 5,000 மின்சார ரயில்கள் என மொத்தம் 13,100 ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில், ரயில் போக்குவரத்தை மீண்டும் தொடங்க ரயில்வே அமைச்சகம் முடிவு செய்தது. இதை அடுத்து வரும் ஜூன் 12ஆம் தேதி முதல் படிப்படியாக ரயில் சேவை தொடங்கும் என்று அறிவித்திருந்தது. இதை அடுத்து, தில்லியில் இருந்து இயங்கும் சிறப்பு ரயில்கள் சேவை என 15 சிறப்பு ரயில் சேவைகளும் அறிவிக்கப் பட்டு ஐஆர்டிசி இணையதளம் மூலம் முன்பதிவும் தொடங்கப்பட்டது. முன்பதிவு தொடங்கப்பட்ட மாலை நேரத்தில் அந்த இணையதளமே முடங்கியது. அந்த அளவுக்கு லட்சக்கணக்கானோர் அந்த நேரத்தில் முண்டியடித்து அந்த ரயில்களில் பயணம் செய்ய காத்திருந்தனர்

ALSO READ:  IPL 2025: சொதப்பல் திலகமாய் சென்னை அணி!

இந்நிலையில் ரயில்வே கால அட்டவணைப்படி ஜூன் 30ஆம் தேதி வரை இயங்கும் ரயில்களுக்கான முன்பதிவு கட்டணத்தை முழுமையாக திருப்பித் தரும்படி ரயில்வே அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இதன்மூலம் முன்பதிவு செய்யும் வசதியுடைய பயணிகள் ரயில்கள் வரும் ஜூன் 30 ஆம் தேதி வரை இயங்காது என்று தெரிகிறது! இருப்பினும் மாநிலங்களை விட்டு இடம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவது தொடரும் என்றும் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 21 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

IPL 2025: அதிரடி காட்டிய ரோஹித், கோலி!

          ஆட்டநாயகனாக அதிரடி ஆட்டக்காரர், ரோஹித் ஷர்மா அறிவிக்கப்பட்டார். 

கூட்டணி விஷயத்தில் பாஜக., அவசரப்பட்டு விட்டதா?

அதிமுக-பாஜக கூட்டணி 2026 வரை நிலைக்குமா? பாஜக அவசரப்பட்டு விட்டதா?

பஞ்சாங்கம் ஏப்ரல் 20 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

IPL 2025: பட்லர் அடிச்ச அடி… பராக்கு பாத்த டெல்லி அணி!

          குஜராத் அணியின் மட்டையாளர், மூன்று ரன்னில் சதத்தைத் தவறவில்ல்ட ஜாஸ் பட்லர் இன்றைய ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 21 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

IPL 2025: அதிரடி காட்டிய ரோஹித், கோலி!

          ஆட்டநாயகனாக அதிரடி ஆட்டக்காரர், ரோஹித் ஷர்மா அறிவிக்கப்பட்டார். 

கூட்டணி விஷயத்தில் பாஜக., அவசரப்பட்டு விட்டதா?

அதிமுக-பாஜக கூட்டணி 2026 வரை நிலைக்குமா? பாஜக அவசரப்பட்டு விட்டதா?

பஞ்சாங்கம் ஏப்ரல் 20 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

IPL 2025: பட்லர் அடிச்ச அடி… பராக்கு பாத்த டெல்லி அணி!

          குஜராத் அணியின் மட்டையாளர், மூன்று ரன்னில் சதத்தைத் தவறவில்ல்ட ஜாஸ் பட்லர் இன்றைய ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

மதுரையிலிருந்து ராஜஸ்தானுக்கு கோடை விடுமுறை சிறப்பு ரயில்!

இந்த ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது.

சுமங்கலி கேபிள் விஷன், ரெட் ஜெயண்ட் வரிசையில்… ‘வானம்’!

இவற்றை எல்லாம் வைத்து பார்க்கும் போது சுமங்கலி கேபிள் விஷன் வந்த போதான விளைவுகளை கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தி விடுகிறது.

காகித கப்பல் விட்ட அமைச்சர் சேகர்பாபு!

இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கையின் போது காகிதக் கப்பல் விட்ட அமைச்சர் சேகர்பாபு வெறும் கண்துடைப்பு வசனங்களை பேசவேண்டாம்

Entertainment News

Popular Categories