வந்துவிட்டது வெள்ளியிலும், தங்கத்திலும்.. விற்பனையாகும் முககவசம்!

silver mask - 2026

கர்நாடாகாவில் திருமண நிகழ்ச்சிகளுக்காக வெள்ளியில் தயாரிக்கப்பட்ட முகக்கவசங்கள் விற்பனை செய்யப்பட்டு வருவது பொதுமக்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.

இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவை கட்டுப்படுத்த 4ம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கின் போது பொது இடங்களில் மக்கள் அதிகளவில் கூடுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளனர். திருமணங்கள், இறுதி சடங்குகள் போன்ற நிகழ்வுகளுக்கு மட்டுமே மக்களுக்கு கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கப்படுகிறது. 20 முதல் 25 பேர் மட்டுமே கலந்துகொள்ள வேண்டும் என்றும் அவர்கள் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசங்களை பயன்படுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது

silver mask 1 - 2026

இந்நிலையில் திருமணத்தின் போது மணமக்கள் தனித்து தெரிய வேண்டும் என்பதற்காக வெள்ளியில் தயாரிக்கப்பட்ட முகக்கவசம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கர்நாடக மாநிலம் பெல்காம் மாவட்டத்தை சேர்ந்த நகை வியாபாரி சந்தீப் சகோங்கர் தான் அதனை தயாரித்து வருபவர். இது குறித்து பேசிய அவர், கொரோனாவால் அனைத்து தொழில்களை போன்று தனது தொழிலும் பாதிக்கப்பட்டதாகவும். எனவே இந்த சூழ்நிலையை பயன்படுத்தி வெள்ளியில் முகக்கவசம் தயாரித்து விற்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் வெள்ளி முகக்கவசத்தை திருமண பரிசாக அளிப்பதற்காக அதிகளவில் வாடிக்கையாளர்கள் வாங்கிச் செல்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

சந்தீப் தயாரித்து வரும் இந்த வெள்ளி மாஸ்க் 25 முதல் 35 கிராம் எடை கொண்டுள்ளது. இதன் விலை ரூ.2,500 முதல் 3,500 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளி முகக்கவசத்தை வாங்க விரும்புவோர் இரு தினங்களுக்கு முன்பாக முன்பதிவு செய்ய வேண்டுமாம்.

ALSO READ:  தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் 59 ஆக உயரும்: அமித் ஷா விளக்கம்!

தங்கத்திலும் முகக்கவசம் விற்பனை செய்யப்படுகிறதா என்று அவரிடம் கேட்டபோது “சவரன் ரூ. 35 ஆயிரத்திற்கு மேல் விற்கப்படும் தங்கத்தை ஒரு முறை பயன்படுத்துவதற்காக யாரும் வாங்கி செல்லமாட்டார்கள், ஆனால் வெள்ளியில் அப்படி இல்லை. இது வரை 100க்கும் அதிகமான வெள்ளி முகக்கவசங்களை நான் விற்றுள்ளேன்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனாவால் தனது தொழிலில் பாதிப்பு ஏற்பட்டபோது, சந்தீப் சகோங்கரின் இந்த புதிய முயற்சி வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Topics

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

Entertainment News

Popular Categories