April 28, 2025, 3:31 PM
32.9 C
Chennai

வந்துவிட்டது வெள்ளியிலும், தங்கத்திலும்.. விற்பனையாகும் முககவசம்!

கர்நாடாகாவில் திருமண நிகழ்ச்சிகளுக்காக வெள்ளியில் தயாரிக்கப்பட்ட முகக்கவசங்கள் விற்பனை செய்யப்பட்டு வருவது பொதுமக்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.

இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவை கட்டுப்படுத்த 4ம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கின் போது பொது இடங்களில் மக்கள் அதிகளவில் கூடுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளனர். திருமணங்கள், இறுதி சடங்குகள் போன்ற நிகழ்வுகளுக்கு மட்டுமே மக்களுக்கு கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கப்படுகிறது. 20 முதல் 25 பேர் மட்டுமே கலந்துகொள்ள வேண்டும் என்றும் அவர்கள் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசங்களை பயன்படுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது

இந்நிலையில் திருமணத்தின் போது மணமக்கள் தனித்து தெரிய வேண்டும் என்பதற்காக வெள்ளியில் தயாரிக்கப்பட்ட முகக்கவசம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கர்நாடக மாநிலம் பெல்காம் மாவட்டத்தை சேர்ந்த நகை வியாபாரி சந்தீப் சகோங்கர் தான் அதனை தயாரித்து வருபவர். இது குறித்து பேசிய அவர், கொரோனாவால் அனைத்து தொழில்களை போன்று தனது தொழிலும் பாதிக்கப்பட்டதாகவும். எனவே இந்த சூழ்நிலையை பயன்படுத்தி வெள்ளியில் முகக்கவசம் தயாரித்து விற்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் வெள்ளி முகக்கவசத்தை திருமண பரிசாக அளிப்பதற்காக அதிகளவில் வாடிக்கையாளர்கள் வாங்கிச் செல்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

சந்தீப் தயாரித்து வரும் இந்த வெள்ளி மாஸ்க் 25 முதல் 35 கிராம் எடை கொண்டுள்ளது. இதன் விலை ரூ.2,500 முதல் 3,500 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளி முகக்கவசத்தை வாங்க விரும்புவோர் இரு தினங்களுக்கு முன்பாக முன்பதிவு செய்ய வேண்டுமாம்.

ALSO READ:  ஆர்.எஸ்.எஸ்., பற்றிய பிரதமர் மோடியின் அனுபவங்கள்!

தங்கத்திலும் முகக்கவசம் விற்பனை செய்யப்படுகிறதா என்று அவரிடம் கேட்டபோது “சவரன் ரூ. 35 ஆயிரத்திற்கு மேல் விற்கப்படும் தங்கத்தை ஒரு முறை பயன்படுத்துவதற்காக யாரும் வாங்கி செல்லமாட்டார்கள், ஆனால் வெள்ளியில் அப்படி இல்லை. இது வரை 100க்கும் அதிகமான வெள்ளி முகக்கவசங்களை நான் விற்றுள்ளேன்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனாவால் தனது தொழிலில் பாதிப்பு ஏற்பட்டபோது, சந்தீப் சகோங்கரின் இந்த புதிய முயற்சி வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

IPL 2025: முதலிடத்துக்கு முன்னேறிய பெங்களூர் அணி

ஐ.பி.எல் 2025 – இரண்டு ஆட்டங்கள் - 27.04.2025 முனைவர் கு.வை....

ராணுவத்துக்கு நிதி அளிக்குமாறு கோரும் வாட்ஸ்அப் தகவல்கள்; தவறான வழிகாட்டல் என விளக்கம்!

வாட்ஸ்அப்பில் பரவும் தவறான செய்தி குறித்து பாதுகாப்பு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நெல்லை ரயிலுக்கு 4 பெட்டி கூடுதல் சரி, ஆனா கடும் நெரிசலுள்ள மயிலாடுதுறை ரயிலுக்கு எப்போ?

கூடுதலாக 6 பெட்டிகளை இணைத்து 16 பெட்டிகளுடன் இயக்க வேண்டுமென மக்கள் பல மாதங்களாக கோரி வருகின்றனர்.

இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது!

தென்காசி மாவட்டத்தில் இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

IPL 2025: முதலிடத்துக்கு முன்னேறிய பெங்களூர் அணி

ஐ.பி.எல் 2025 – இரண்டு ஆட்டங்கள் - 27.04.2025 முனைவர் கு.வை....

ராணுவத்துக்கு நிதி அளிக்குமாறு கோரும் வாட்ஸ்அப் தகவல்கள்; தவறான வழிகாட்டல் என விளக்கம்!

வாட்ஸ்அப்பில் பரவும் தவறான செய்தி குறித்து பாதுகாப்பு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நெல்லை ரயிலுக்கு 4 பெட்டி கூடுதல் சரி, ஆனா கடும் நெரிசலுள்ள மயிலாடுதுறை ரயிலுக்கு எப்போ?

கூடுதலாக 6 பெட்டிகளை இணைத்து 16 பெட்டிகளுடன் இயக்க வேண்டுமென மக்கள் பல மாதங்களாக கோரி வருகின்றனர்.

இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது!

தென்காசி மாவட்டத்தில் இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

அமைச்சரவை மாற்றம்; பொன்முடி, செந்தில் பாலாஜி நீக்கம்! ஆளுநர் ஒப்புதல்!

தமிழக அமைச்சர்களாக இருந்து நீதிமன்ற நடவடிக்கைகள் மற்றும் சர்ச்சைகளில் சிக்கிய பொன்முடி, செந்தில் பாலாஜி ஆகியோரின் அமைச்சர் பதவிகள் பறிக்கப்பட்டுள்ளன.

செங்கோட்டை – மயிலாடுதுறை ரயிலில் நாளைக்கு போறீங்கன்னா… இத தெரிஞ்சுக்குங்க!

செங்கோட்டை- மயிலாடுதுறை ரயில் சேவையில் மாற்றம் செய்யப் பட்டுள்ளது. பராமரிப்புப் பணிகள் காரணமாக, நாளை ரயில் சேவையில் மாற்றம்

நாய்களை வாக்கிங் கூட்டிச் சென்ற போது தகராறு : 4 பேர் மீது வழக்கு!

இதுகுறித்து அசோக்குமார் கொடுத்த புகாரின் பேரில் விருதுநகர் பஜார் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Entertainment News

Popular Categories