ஊரடங்கு மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப் படலாம்: 70 சதவீத கேஸ்களுடன் 11 நகரங்கள் மீது கவனம்!

lockdown
lockdown

இந்தியாவில் கொரோனா பாதிப்பில் 70 சதவீத பாதிப்புகளை கொண்ட 11 நகரங்களில் மட்டும் முழு கவனம் செலுத்தி, மே 31ம் தேதிக்குப் பிறகு 2 வாரங்கள் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

இது குறித்து வரும் 31ஆம் தேதி ‘மன்கி பாத்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி அறிவிப்பார் என்று கூறப் படுகிறது.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் 4 கட்டங்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது அமலில் உள்ள 4ஆம் கட்ட ஊரடங்கு மே 31ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. ஆயினும், தற்போதும் கூட கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், 5வது கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

இந்நிலையில் நாட்டில் கொரோனா பாதிப்பில் 70 சதவீதம் பாதிப்பு இருக்கக் கூடிய 11 நகரங்களை மட்டும் தீவிர கவனத்துடன் கண்காணித்து, அங்கு மட்டும் மே 31ஆம் தேதிக்குப் பிறகு ஊரடங்கு சில தளர்வுகளுடன் நீட்டிக்கப்படும் என்று கூறப் படுகிறது.

நாட்டில், கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மும்பை, தில்லி, பெங்களூரு, சென்னை, கோல்கட்டா, ஆமதாபாத், புனே, தானே, ஜெய்ப்பூர், இந்தூர் மற்றும் சூரத் ஆகிய 11 நகரங்களில் சில தளர்வுகளுடன் ஊரடங்கு மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்படும் என தெரிகிறது.

கர்நாடகத்தில் முதல்வர் எடியூரப்பா, மே 31ஆம் தேதிக்குப் பின்னர் மத்திய அரசு அனுமதி அளிக்கப் படும் பட்சத்தில், கோயில்கள், வழிபாட்டிடங்கள் உடனே திறக்கப் படும் என்று கூறியிருந்தார். இது போல், மால்கள், சினிமா அரங்குகள், பள்ளிகள், கல்லூரிகள் கல்வி நிலையங்கல் என அனைத்தும் திறப்பதற்கு காத்திருக்கின்றன. மத்திய அரசின் அனுமதிக்காகக் காத்திருக்கிறோம். அனுமதி கிடைத்த உடனேயே அனைத்தும் இயங்கும் என்று கூறியுள்ளார் கர்நாடக முதல்வர். இதே எண்ணத்தை மற்ற சில மாநிலங்களும் வெளிப்படுத்தியுள்ளன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

Entertainment News

Popular Categories