விஜயவாடா மாணவர் மோதலில்… படுகாயம் அடைந்த இளைஞர் மரணம்!

Published:

vijayawada boy died

விஜயவாடா நகரில் பரபரப்பை ஏற்படுத்திய கல்லூரி மாணவர்களின் குழுச் சண்டையில் இளைஞர் ஒருவர் காலமானார்.

நிலத்தகராறு விஷயமாக மணிகண்டா, தோட்ட சந்தீப் என்ற இருவரிடையே எழுந்த விவாதம் தீவிரமான சண்டையில் முடிந்தது. இந்த சம்பவத்தில் காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் போது இறந்தார். இதனால் மருத்துவமனை அருகில் பரபரப்பு சூழல் நிலவுகிறது.

சந்தீப் உடலை அரசாங்க மருத்துவமனையில் மார்ச்சுவரியில் வைத்துள்ளனர். சண்டையில் காயம் அடைந்த மற்றும் சிலர் இதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சுமார் 40 பேர் இந்த சண்டையில் பங்கு கொண்டார்கள். அவர்களுள் ஓடிப்போன குற்றவாளிகளை பிடிப்பதற்காக ஆறு குழுக்களாக போலீசார் தொடர்ந்து தேடி வருகிறார்கள்.

students vijayawada
students vijayawada

நேற்று விஜயவாடா நகரில் கத்திகளாலும் பெரிய பெரிய கற்களாலும் தாக்கி கொண்ட இளைஞர்கள் மக்களிடம் பீதியை ஏற்படுத்தினார்கள். நகரத்தில் இரண்டு மாணவர் குழுக்கள் இடையே விவாதம் ஏற்பட்டு ஒருவருக்கொருவர் சண்டையிட தொடங்கினார்கள். இந்த விவகாரத்தில் முன்னாள் ரௌடி ஷீட்டர் ஒருவர் தலையீடு இருப்பதாக உள்ளூர் மக்கள் தெரிவித்தனர்.

இரு பிரிவுகளிடையே கத்தி கம்புகளால் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டதால் காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்திருந்தார்கள்.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அஸ்ஸாம்
ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img