December 6, 2025, 1:01 AM
26 C
Chennai

திருப்பதி லட்டுவுக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்கு!

Laddu prasadam for Vaikunta Ekadashi 2015, Enarada.com
Laddu prasadam for Vaikunta Ekadashi 2015, Enarada.com

திருப்பதி:

திருப்பதி திருமலை வேங்கடாசலபதி திருக்கோயிலில் பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவுக்கு, ஜி.எஸ்.டி. வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

நாடு முழுவதும் ஒரே சீரான வரி விதிப்பாக, சரக்கு மற்றும் சேவை வரி ஜூலை 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதனை அமல் படுத்துவதற்கான முழு வீச்சில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. சுமார் 1200 பொருட்கள், 500 சேவைகளுக்கான வரிகள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், ஆந்திர மாநிலத்தில் அமைந்துள்ள திருமலை திருப்பதி திருக்கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டு, செய்யப் பயன்படும் மூலப்பொருட்கள் ஆகியவற்றுக்கும் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப் பட்டிருந்தது. இதனால், லட்டு விற்பனை விலை அதிகரிக்கும் என்றும், அவ்வளவு பக்தர்களுக்கு லட்டு வழங்க இதனால் இயலாது என்றும் தேவஸ்தானம் தரப்பில் அதிருப்தி தெரிவிக்கப் பட்டது. மேலும், லட்டு தயாரிப்பை குறைப்பது அல்லது நிறுத்துவது என்று முடிவுகள் எடுக்கப் பட்டன. மேலும், ஏழை எளியவர்கள் அதிகம் வந்து செல்லும் திருப்பதியில் உள்ள விடுதிகளுக்கான கட்டணமும் அதிகரிக்கப்படும் என்று தெரிவிக்கப்  பட்டிருந்தது.

இதை அடுத்து, திருப்பதி லட்டுவுக்கு வழங்கப்படும் இடு பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரியில் இருந்து விலக்கு அளிக்க தேவஸ்தானம் சார்பில் ஆந்திர மாநில நிதி அமைச்சர் யனமாலா ராமகிருஷ்ணடுக்கு கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் திருப்பதி லட்டு தயாரிக்கப் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களுக்கு, ஜி.எஸ்.டி. வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பு, திருப்பதி தேவஸ்தான நிர்வாகிகள் மற்றும் பக்தர்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது. அவர்கள், திருப்பதி கோயில் நடைமுறைகள் தொய்வின்றி தொடரும் என்று நம்பிக்கையும் மகிழ்ச்சியும் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories