சென்னை ஐ.ஜி. அலுவலகம் அருகே வழக்குரைஞருக்கு அரிவாள் வெட்டு!

Published:

ig office chennai

சென்னை:

சென்னை ஐ.ஜி. அலுவலகம் அருகே வழக்குரைஞர் கேசவன் என்பவரை மர்ம நபர்கள் சராமரியாக அரிவாளால் வெட்டினர். இதில் அவர் படுகாயமடைந்தார்.

சென்னை கடற்கரை ஐ.ஜி. அலுவலகம் அருகே கலங்கரை விளக்கம் ரயில் நிலையம் அருகில், இன்று காலை சுமார் 8.30 மணி அளவில் வழக்குரைஞர் கேசவன் வந்து கொண்டிருந்தார்.  அப்போது, இரு சக்கர வாகனங்களில் வந்த 5 பேர் கொண்ட கும்பல், கேசவனை சராமரியாக அரிவாளால் வெட்டி விட்டு  வந்த வாகனங்களில் தப்பியோடியது.

மக்கள் நடமாட்டம் நிறைந்த பகுதியில் நடைபெற்ற இந்தச் சம்பவத்தால், மக்கள் மற்றும் ரயில் பயணிகள் அலறியடித்துக் கொண்டு  ஓடினர். பட்டப்பகலில் வழக்குரைஞர் ஒருவரை அரிவாளால் ஒரு கும்பல் வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து அருகில் இருந்தவர்கள் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனர்.

தகவலறிந்து வந்த போலீசார், உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த கேசவனை, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ALSO READ:  ஸ்ரீ வைணவப் பேரறிஞர் ஏ.வி. ரங்காச்சாரி பரமபதித்தார்!

முன்விரோதம் காரணமாக இந்தச் சம்பவம் நடைபெற்றிருக்கலாம் என்று முதல்கட்ட விசாரணையில் போலீஸார் தெரிவித்தனர்.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img