“வெள்ளத்தை கட்டுப்படுத்திய ஒரு பரோபகாரியாக”-பெரியவா

1507603 10202994818654217 4035239553088867808 n - 2026

“வெள்ளத்தை கட்டுப்படுத்திய ஒரு பரோபகாரியாக”-பெரியவா

“சந்தோஷத்துல தலைகால் தெரியாம குதிக்கக்கூடாது.
துக்கத்துல துவண்டு போயிடவும் கூடாது.நிதானம்
மனுஷ லட்சணம். அது வந்துட்டா சமாதானம் வந்துடும்.
சமாதானம் வந்துட்டா எல்லா தானமும் வந்து மனுஷன்
பரோபகாரியா ஆயிடுவான்.பரோபகாரியை
பஞ்ச பூதங்கள் எப்பவுமே பாதுகாக்கும்.கஷ்டப்படுத்தாது”

கட்டுரை ஆசிரியர்-இந்திரா சௌந்தர்ராஜன்.
புத்தகம் மகாபெரியவர் பாகம்-1 ..(46)
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

பெரியவா பண்டரிபுரத்தில் தங்கி இருந்த சமயத்துல
அந்த இடத்திற்கு அருகிலேயே சந்திரபாகா என்னும்
நதி ஓடிக்கொண்டிருந்தது.நமக்கு காவேரி போல
பண்டரிபுரத்துக்கு சந்திரபாகா நதி விளங்குகிறது.
இதில் சில சமயங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்.
நதிகளில் வெள்ளம் பெருகலாம். அது ஊருக்குள்
புகுந்து நாசம் ஏற்படுத்தும் அபாயமும் உண்டு.

அன்று பெரியவர் தங்கி இருந்த கோசாலைக்குள்ளேயும்
வெள்ளம் புகுந்து விட்டது.

படிப்படியாக அது உயர்ந்து கொண்டும் சென்றது.
எல்லாரும் அச்சப்பட தொடங்கிவிட்டனர்.

நிச்சயம் அழிவு நேரப்போகிறது என்றும் கருதினர்.
பெரியவா முன்னால் எல்லாரும் பரிதாபமாக நின்றனர்.

பெரியவர் சிரித்தார்,

“மழை பெய்யலைன்னா பெய்யலங்கிற வருத்தம்.
பெஞ்சா இப்படி பெய்யறதேகிற வருத்தம்…
அப்படித்தானே?” என்று கேட்டார். எல்லாரிடமும் மவுனம்.

“நாம எப்படி இருக்கோம்கிறதைதான் இந்த வெள்ளம் சொல்றது.
நாம் ஒண்ணு வருத்தப்படுறோம்.இல்லைன்னா ரொம்ப
சந்தோஷமா ஒரே கூத்தும் பாட்டுமா இருக்கோம்.நிதானமா
அளவா நாம நடந்துக்கிறதேயில்லை.அதைத்தான் இயற்கை
ரூபத்துல இந்த மழை சொல்றது” என்ற பெரியவரை எல்லாரும்
மவுனமாக வெறித்தனர்.

மழை வெள்ளத்தை வைத்து மனித மனதோடு அதை
தொடர்புபடுத்தி பெரியவர் ஒரு பக்கம் உபதேசம் செய்த
போதிலும் அவர் கைகள் இரண்டும் வெள்ள நீரை
தள்ளிவிட்டபடியே, ‘போயிடு…போயிடு’ என்றன அவ்வப்போது.

சில மணிநேரங்களில் வெள்ளம் வடிந்து சந்திரபாகா நதி
அமைதியாக ஓடத்தொடங்கியது.

பெரியவரும்,”இது என் பேச்சை கேட்டுடுத்து….
நீங்களும் கேட்கணும்.

“சந்தோஷத்துல தலைகால் தெரியாம குதிக்கக்கூடாது.
துக்கத்துல துவண்டு போயிடவும் கூடாது.நிதானம்
மனுஷ லட்சணம். அது வந்துட்டா சமாதானம் வந்துடும்.
சமாதானம் வந்துட்டா எல்லா தானமும் வந்து மனுஷன்
பரோபகாரியா ஆயிடுவான்.பரோபகாரியை
பஞ்ச பூதங்கள் எப்பவுமே பாதுகாக்கும்.கஷ்டப்படுத்தாது”

என்ன ஒரு அரிய உபதேசம்! இதை அவர் வார்த்தைகளால்
மட்டும் கூறவில்லை. வெள்ளத்தை கட்டுப்படுத்திய
ஒரு பரோபகாரியாக அவரே முன் உதாரணமாக திகழ்ந்து
கொண்டு கூறினார்.

அதுதான் பெரியவரின் பெரும் சிறப்பு.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Topics

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஐபிஎல் 2026: ரன் மழை விருந்து!

இருபத்தியெட்டாவது ஆட்டம் ராஜஸ்தான் vs கொல்கொத்தா – ஈடன் கார்டன்ஸ், கொல்கொத்தா - ஏப்ரல் 19

Entertainment News

Popular Categories