“வெள்ளத்தை கட்டுப்படுத்திய ஒரு பரோபகாரியாக”-பெரியவா

1507603 10202994818654217 4035239553088867808 n - 2026

“வெள்ளத்தை கட்டுப்படுத்திய ஒரு பரோபகாரியாக”-பெரியவா

“சந்தோஷத்துல தலைகால் தெரியாம குதிக்கக்கூடாது.
துக்கத்துல துவண்டு போயிடவும் கூடாது.நிதானம்
மனுஷ லட்சணம். அது வந்துட்டா சமாதானம் வந்துடும்.
சமாதானம் வந்துட்டா எல்லா தானமும் வந்து மனுஷன்
பரோபகாரியா ஆயிடுவான்.பரோபகாரியை
பஞ்ச பூதங்கள் எப்பவுமே பாதுகாக்கும்.கஷ்டப்படுத்தாது”

கட்டுரை ஆசிரியர்-இந்திரா சௌந்தர்ராஜன்.
புத்தகம் மகாபெரியவர் பாகம்-1 ..(46)
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

பெரியவா பண்டரிபுரத்தில் தங்கி இருந்த சமயத்துல
அந்த இடத்திற்கு அருகிலேயே சந்திரபாகா என்னும்
நதி ஓடிக்கொண்டிருந்தது.நமக்கு காவேரி போல
பண்டரிபுரத்துக்கு சந்திரபாகா நதி விளங்குகிறது.
இதில் சில சமயங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்.
நதிகளில் வெள்ளம் பெருகலாம். அது ஊருக்குள்
புகுந்து நாசம் ஏற்படுத்தும் அபாயமும் உண்டு.

அன்று பெரியவர் தங்கி இருந்த கோசாலைக்குள்ளேயும்
வெள்ளம் புகுந்து விட்டது.

படிப்படியாக அது உயர்ந்து கொண்டும் சென்றது.
எல்லாரும் அச்சப்பட தொடங்கிவிட்டனர்.

நிச்சயம் அழிவு நேரப்போகிறது என்றும் கருதினர்.
பெரியவா முன்னால் எல்லாரும் பரிதாபமாக நின்றனர்.

ALSO READ:  சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் தீவிபத்து..

பெரியவர் சிரித்தார்,

“மழை பெய்யலைன்னா பெய்யலங்கிற வருத்தம்.
பெஞ்சா இப்படி பெய்யறதேகிற வருத்தம்…
அப்படித்தானே?” என்று கேட்டார். எல்லாரிடமும் மவுனம்.

“நாம எப்படி இருக்கோம்கிறதைதான் இந்த வெள்ளம் சொல்றது.
நாம் ஒண்ணு வருத்தப்படுறோம்.இல்லைன்னா ரொம்ப
சந்தோஷமா ஒரே கூத்தும் பாட்டுமா இருக்கோம்.நிதானமா
அளவா நாம நடந்துக்கிறதேயில்லை.அதைத்தான் இயற்கை
ரூபத்துல இந்த மழை சொல்றது” என்ற பெரியவரை எல்லாரும்
மவுனமாக வெறித்தனர்.

மழை வெள்ளத்தை வைத்து மனித மனதோடு அதை
தொடர்புபடுத்தி பெரியவர் ஒரு பக்கம் உபதேசம் செய்த
போதிலும் அவர் கைகள் இரண்டும் வெள்ள நீரை
தள்ளிவிட்டபடியே, ‘போயிடு…போயிடு’ என்றன அவ்வப்போது.

சில மணிநேரங்களில் வெள்ளம் வடிந்து சந்திரபாகா நதி
அமைதியாக ஓடத்தொடங்கியது.

பெரியவரும்,”இது என் பேச்சை கேட்டுடுத்து….
நீங்களும் கேட்கணும்.

“சந்தோஷத்துல தலைகால் தெரியாம குதிக்கக்கூடாது.
துக்கத்துல துவண்டு போயிடவும் கூடாது.நிதானம்
மனுஷ லட்சணம். அது வந்துட்டா சமாதானம் வந்துடும்.
சமாதானம் வந்துட்டா எல்லா தானமும் வந்து மனுஷன்
பரோபகாரியா ஆயிடுவான்.பரோபகாரியை
பஞ்ச பூதங்கள் எப்பவுமே பாதுகாக்கும்.கஷ்டப்படுத்தாது”

ALSO READ:  பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிப்பு!

என்ன ஒரு அரிய உபதேசம்! இதை அவர் வார்த்தைகளால்
மட்டும் கூறவில்லை. வெள்ளத்தை கட்டுப்படுத்திய
ஒரு பரோபகாரியாக அவரே முன் உதாரணமாக திகழ்ந்து
கொண்டு கூறினார்.

அதுதான் பெரியவரின் பெரும் சிறப்பு.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூன் 20 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 19 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories