திருப்பதியானை தரிசிக்க இனி ’ஆதார்’ கட்டாயம்!

thirupathi 1 - 2026

திருப்பதி:
ஆதார் இல்லையா? அப்படி எனில், உலகுக்கு ஆதாரமான ஆண்டவன் ஏழுமலையானை இனி தரிசிக்க வாய்ப்பு இல்லாமல் போய் விடும். திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ஆதார் கட்டாயமாக்கப்பட உள்ளது என்று தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளது, பக்தர்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆதார் கட்டாய அறிவிப்பு குறித்து திருப்பதி தேவஸ்தான இணை அதிகாரி சீனிவாச ராஜூ கூறியது…
திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களின் விரைவு தரிசன முன்பதிவு, வாடகை அறை உள்ளிட்டவற்றிற்கு புகைப்பட அடையாள அட்டை எதேனும் ஒன்றை பெற்று வந்தது. இந்நிலையில் வங்கிக் கணக்கு, பான் கார்டுடன் ஆதார் இணைப்பு கட்டாயம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், திருப்பதியின் அனைத்து சேவைகளுக்கும் ஆதார் அடையாள அட்டையை கட்டாயமாக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. பிரேக் தரிசனத்துக்கு வரும் பக்தர்களும் ஆதார் கட்டாயம் கொண்டுவர வேண்டும் என்று கூறியுள்ளார்.
ஏற்கெனவே ஆதார் எண் இல்லாவிடில், மூத்த குடிமக்களுக்கான தரிசனம், கூடுதல் லட்டு பிரசாதம், அங்கப் பிரதட்சிண டிக்கெட் இவையெல்லாம் பெற இயலாமல் இருந்தது. வேறு எந்த அடையாள அட்டை காட்டினாலும், திருப்பதி தேவஸ்தானத்தில் அவற்றை ஏற்றுக் கொள்ளாமல், ஆதார் ஒன்றிலேயே குறியாக இருந்தார்கள். இப்போது இந்த ஆதார் கட்டாய அறிவிப்பு, பெருமானை தரிசிக்கவும், அறைகளை வாடகைக்கு எடுக்கவும் அவசியமாகப் போகிறது. ஆண்டவன் என்றால் எளியவர்க்கு உரியவன். நடைபாதை பக்தர்கள், இலவச தரிசனத்தில் நிற்பவர்கள் என பலரும் பெருமானை தரிசித்து மகிழ்ந்தார்கள். இனி அவர்களுக்கும் அடையாளம் தேவைப்படும் நிலை உருவானாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை என்று கருத்து தெரிவிக்கின்றனர் பக்தர்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Topics

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

அமெரிக்காவில் 1.7 பில்லியன் ஆண்டுகள் பழமையான விஷ்ணு பாறைகள்

இந்த விஷ்ணு கோவில் அல்லது விஷ்ணுப் பாறைகளுக்கு அருகே மேலு இரண்டு பாறைத் தொடர்களுக்கு ப்ரும்மா பாறை, ராம் பாறை என்றும் பெயரிடப்பட்டிருக்கிறது.

பஞ்சாங்கம் மார்ச் 13 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories